நான் நேத்து தான் நினச்சேன்.. புதுசா ஒரு கதை மல்லி மேம் குடுத்தா நல்ல இருக்குமே... ரொம்ப நாள் ஆச்சு மல்லி மேடத்தோட கதை படிச்சுன்னு.. இது ud பாக்கவும் ஆஹா மல்லிமா கதையானு வேகமா வந்தேன்... ஆனால் இது மல்லி மேம் கதை மாதிரியும் இருக்கு.. இல்லாத மாதிரியும் இருக்கு... எப்பிடியோ நமக்கு தேவை ஒரு கதை.. அது கிடைச்சாச்சு.. படிப்போம்...
முடியாத அம்மாவை வச்சுக்கிட்டு இவ்ளோ சின்ன வயசுல இவ்ளோ கஷ்டப்பட்டு வேலைக்கு வர பிள்ளைக்கிட்ட வம்பு வளக்குது பாரு ஒரு நாய்.. அந்த எடுப்பட்ட நாய் எல்லாம் ரோட்ல அடிபட்டு செத்து.. அந்த பொணத்த கூட அள்ள ஆளே இருக்க கூடாது...
அம்மாடி மலரு நீயும் இவ்ளோ பொறுமையா இருக்கக்கூடாது.. எல்லாரும் இளிச்சவாச்சி னு நினச்சு ஏமாத்தி போடுவாங்க... ஒரு பொண்ணு எங்க மடங்கணுமோ அங்க மடங்கணும்.. எங்க நிமிந்து நிக்கணுமோ அங்க நிமிந்து நின்னே ஆகணும்..