முரண்பாடே காதலாய் 1

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
மனிதனின் மூளையும் மனமும் ஒன்றுக்கொன்று முரண்தானோ ??

பலவருடம் பழகியவரை கூட சுலபமாய் மூளையது மறந்துவிட ,

ஒரு சிறு சந்திப்பினில் உயிர் தீண்டியவரை மறக்க முடியாமல் மறுகி தவிக்கிறது
மனமது...!!!



அத்தியாயம் 1 :

" முரண்பாடுன்றது நம்முடைய வாழ்க்கையிலே ரொம்பவே சகஜமான ஒரு விஷயம் . ஏன் , நம்ம தினமும் சுவாசிக்கிற அந்த காற்று பல நேரம் தென்றலா நம்பள தீண்டி சென்றாலும் சில நேரத்தில் முரண்பட்டு புயலா நம்பள தாக்குறதில்லையா ? இன்னும் சொல்ல போனா இந்த உலகத்துல எல்லோராலும் அதிகமா உணரப்படுற, ரசிக்கிற ஒரு விஷயம்னா அது 'ஒரு தலை காதல்'னு சொல்லலாம். அப்படி எல்லோராலும் ரசிக்கப்படற ஒருதலை காதல்ல, காதலை சொல்லமுடியாம தவிக்கும்போது இதயத்துல முள் தைப்பது போல் வலியை கொடுக்கும் அதே காதல் தான் நம்ப காதலிக்கிறவங்க நம்பள ஓரவிழியால பார்த்தா கூட சும்மா ஜிவ்வுனு பறக்க வச்சி 'என்ன பீலிங்டா இது'னு ஆனந்தத்தோட முரண்படும் . சரி நான் ஏன் இப்போ முரண்பாடு பற்றி முழங்கிட்டு இருக்கேனு உங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கா? எல்லாத்துக்குமே ஒரு காரணம் இருக்கு நண்பா .சரி! இதுக்குமேல இழுத்தா எல்லோரும் என்னை போட்டுத்தள்ள நேரடியா கட்டையோட வந்தாலும் வந்துருவிங்க... சோ !! நான் நேரடியா விஷயத்துக்கு வந்துடுறேன் .நம்ப சேனல்ல வரும் வெள்ளிகிழமைல இருந்து இரவு ஏழு மணிக்கு "முரண்பாடுகளை தேடி" னு புது நிகழ்ச்சி ஒளிபரப்பாகபோகுது மக்களே. மத்த எல்லா நிகழ்ச்சிபோலவே இந்த நிகழ்ச்சியும் உங்கள நிச்சயம் கவரும்னு என்னால ஆணித்தரமா சொல்லமுடியும் .இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமா கொண்டுபோக உங்களோட ஆதரவை எப்பவும் போல எங்களுக்கு சிறப்பா கொடுப்பீங்கனு நம்பிக்கையோட இப்போ கிளம்பறேன் மீண்டும் நாளை மாலை நாலு மணிக்கு "இது செம்ம பீலிங் மச்சி" ஷோல நம்ப மீட் பண்ணி இன்னும் நிறைய பேசலாம் . அதுவரைக்கும் உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் மித்ரன் " என பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏற்ப தன் முகம் மற்றும் உடல் மொழியினை மாற்றியவன் , தான் இத்தனை நேரம் மக்களுடன் தொடர்பிலிருந்த அந்த ரெகார்டிங் அறையிலிருந்து வெளிவந்தான்.

அவனின் இத்தனை நேர பேச்சை போலவே துள்ளலுடன் வெளிவந்தவனின் வயது 27 என்றாலும் அவனின் தோற்றமோ கல்லூரி மாணவன் போல தோன்ற செய்யும்.
எப்பொழுதும் புன்னகையுடனும் , உற்சாகத்துடனும் வளையவருபவன் தன் பெயரை போலவே தான் சந்ததிக்கும் அனைவரையும் நட்புடன் கடப்பவன் .கடற்பாறையை முழுங்கியதை போல கடினமுடன் திரிபவர்களை கூட தன்னிடம் பேசும் வேளையில் புன்னைகை புரியவைக்கும் வித்தகன் .

அவ்வறையில் இருந்து வெளியே வந்தவனை கண்ட மற்றவர்கள்,

"எப்பவும்போல கலக்கிட்டீங்க மித்ரன்" எனவும் ,

"உன்னோட ஷோ -க்குனு தனி போலோவெர்ஸ் இருக்காங்க மச்சி"என்றும்

"அந்த முரண்பாடுகளை தேடி நிகழ்ச்சிக்கு கன்டென்ட் பண்றது யாருனு இன்னும் சொல்லலையே பாஸ் " என்றும்

" இது உண்மையாவே நம்ப சேனல்க்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் மித்ரன் சார், எப்படி கொண்டு போகப்போறிங்க " என வாழ்த்துக்களும் கூடவே கேள்விகளும் வரிசையாய் வர அனைத்திற்கும் தனது வழக்கமான புன்னகையை மட்டும் பதிலளித்தவன் அடுத்த பத்து நிமிடங்களில் மற்ற வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு தனது பைக்கில் அங்கிருந்து கிளம்பிவிட்டான் .


தி லிட்டில் பேலஸ்:

அந்த அப்பார்ட்மெண்டின் பார்க்கிங்கில் தன் வண்டியை விட்டு வந்தவன், அங்கிருந்த வாட்ச்மேனிடம் " கதிரேசன்னா! சாப்பிட்டாச்சா ?" என விசாரிக்க,

"அதெல்லாம் சின்ன பாப்பா சரியான நேரத்துக்கு குடுத்து விட்டாங்க தம்பி" என்றவர் தொடர்ந்து,

"ஏன் தம்பி சின்ன பாப்பா எதுனா தப்பு பண்ணி நீங்க திட்டிபுட்டிங்களா? பாவம்! புள்ள முகமே வாடிப்போய் இருந்துச்சு தம்பி " என இந்த இரண்டு வருடத்தில் இவரையும் தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக எண்ணி அவர்கள் உணவளித்து வரும் பாசத்தில் கேட்டார்.

"அண்ணா இது உங்களுக்கே நியாயமா இருக்கா? நானாவது அவளை திட்றதாவது? நா திட்டணும்னு நினைச்சாலே என் சங்கறுத்துறமாட்டாளா அந்த கேடி" என சிரித்தவன் அவரிடம் விடைபெற்று மூன்றாவது தளத்தில் இருக்கும் வீட்டிற்கு செல்ல லிப்டை நோக்கி சென்றான்.

சென்றவன் பாதியில் திரும்பி வந்து " கதிரேசன்னா! போனவாட்டி நீங்க சொந்த ஊர் போனப்போ உங்களுக்கு பதிலா ஒருத்தர இங்க வேலைக்கு விட்டிங்களா அவர் இப்போ என்ன பன்றார் ?" என கேட்க,

"அவர் இப்போ ஊர்ல சும்மா தான் தம்பி இருக்கார் . எனக்கு சின்னதுல இருந்தே ரொம்ப வேண்டியவர் நான் வேலைல சேர்ந்ததுல இருந்தே எங்கனா போகணும்னா எனக்கு பதிலா அவர தான் விட்டுட்டுப்போவேன் ... ரொம்ப நல்ல மனுஷன் தம்பி . அவருக்கு பணம் குடுத்தாலும் இப்டி வெளிஊர்க்கு வந்துபோறது ஒரு மாற்றமா இருக்கும்ல " என்றார்.

"சரிங்கண்ணா , அப்படின்ன அவர
நாளைக்கே கிளம்பி வர சொல்றிங்களா ?"

"என்னாச்சி தம்பி! எதுனா வேலை இருக்கா. சொல்லுங்க தம்பி என்னால முடிஞ்சா நானே செய்யுறேன் ",

"அண்ணா!! வேலையே உங்களுக்கு தான் " என கண்ணடித்தவன்,

" இன்னும் ரெண்டு நாள்ல ஒரு ப்ராஜெக்ட் விஷயமா நானும் உங்க சின்ன பாப்பாவும் வேற ஊருக்கு போகபோறோம்னா . இந்தவாட்டி அங்கிளால வரமுடியாம ஆகிடிச்சி .. ஆனா தெரியாத ஊருக்கு எங்களை தனியா அனுப்பவும் பயம். இப்போ நீங்க எங்க கூட வரீங்கனு சொன்னா அவருக்கும் கொஞ்சம் நிம்மதி எங்களுக்கும் நல்லா இருக்கும் " என்றவன் தொடர்ந்து ,

"என்னணா இவன் பாட்டுக்கு நம்பகிட்ட வரிங்களானு கூட கேக்காமலே கிளம்பறோம்னு சொல்றானேன்னு யோசிக்கறீங்களா ?"

"அய்யோ! தம்பி ....என்ன நீங்க இப்படிலாம் பேசிகிட்டு . என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தனா நினைச்சி பாத்துட்டிருக்கிங்க ... இப்போகூட எனக்கு அந்த உரிமைல கூப்புட்றாப்ல தான் இருக்கு. எப்போ என்னனு சொல்லுங்க தம்பி ,வந்துடறேன். நாளைக்கே இந்த வேலைக்கு ஊர்லருந்து அவர வரவச்சிட்றேன் " என்றார்.

சிறிதுநேரம் வேலையை பற்றியும் , பயணத்தை பற்றியும் அவரிடம் பேசியவன் ஊரின் பெயரை சொல்லாமலே அங்கிருந்து நகர அவனை அழைத்த கதிரேசன்,

"மித்ரன் தம்பி ! நம்ப எந்த ஊருக்கு போறோம்னு சொல்லவே இல்லையே" என கேட்க ,

"ஸ்ஸ்ஸ்ஸ் ...முக்கியமானதையே விட்டுட்டானா " என சிரித்தவன் ,

"￰பொள்ளாச்சி பக்கம் இருக்க சின்னாம்பாளையம் -ன்ற கிராமம்ணா " என சொல்லி சென்றான்.

--------------------------------------------------------------------------------



சின்னம்பாளையம் :


எப்போதோ ஒன்றிரண்டு முறை மட்டுமே ஆள்நடமாட்டம் இருக்கும் அந்த பகுதியின் அமைதி , இன்றைய அம்மாவாசை இருளுடன் இணைந்து அவ்விடத்தில் ஒருவித திகில் உணர்வை வியாபித்திருந்தது .

போனால்போனதென்று அத்தெருவின் மூலையில் அரசாங்கம் , ஒரே ஒரு மின்கம்பத்தை நிறுவியிருக்க.... அதுவும் இப்போவோ அப்பவோ நான் உயிர்விட போகிறேன் என சொல்வது போல் விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தது .


வீடுகள் அடுத்தடுத்து இருந்தாலும் ஒவ்வொரு வீடும் மிகப்பெரியதாததில் , ஒரு வீட்டில் நடக்கும் விஷயங்கள், மற்றும் சத்தங்கள் அடுத்த வீட்டிற்க்கு செல்லாதவாறு இருக்க,

அவ்ஊரையே சுற்றிச்சுற்றி வந்த அவ்வுருவத்தின் கண்கள் வீடுகளின் இத்தகைய அமைப்பை கண்டு நெருப்பாய் தகித்தது .


நெருப்பை கக்கும் கண்களுடன் மரத்தின் அருகில் காத்திருந்தது அவ்வுருவம் . ஆம் , அவ்வுருவத்தின் கண்கள் பக்கத்திலிருந்த வீட்டையும் , இருளில் முழ்கிருந்த தெருவையும் மாற்றிமாற்றி வட்டமிட்டதில் ...எவருக்கோ காத்திருப்பது போல் தான் தோன்றியது .


அவ்வுருவத்தின் உதடுகள் கிழிந்து ரத்தம் கசிந்தவாறு இருக்க, அதில் சிறிது சிறிதாய் புன்னகை மலர்ந்து "ஆ ஆ ஆ" என ஆக்ரோஷமாய் கத்த .....சரியாய் அந்நொடி அவ்வீட்டின் முன் வந்து நின்றது நீல நிற மாருதி.


அவ்வுருவத்தின் ஆக்ரோஷ கத்தலோ கேட்பவரை நடுங்க செய்வதாய் இருக்க, மாருதியில் வந்தவர்களோ போதையின்பிடியில் இருந்ததில் அச்சத்தம் அவர்களின் செவியை தீண்டாமலே காற்றில் கலந்து மறைந்தது .

காரை வீட்டினுள் சென்று நிறுத்திய இருவரும் கதவை திறந்து உள் செல்ல அவர்களை தொடர்ந்து அந்த உருவமும் அவ்வீட்டினுள் நுழைந்தது .


போதையின் பிடியில் இருந்த இருவரில் ஒருவன் ," மச்சான்!!! இன்னிக்கு ரொம்ப சீக்கிரம் வந்துட்டோமே டா ....போர் அடிக்குமே " என புலம்ப ,


அவனை கண்டு விஷமமாய் நகைத்த மற்றொருவன் , " அப்போ விளையாடலாமாடா " என கேட்டு தனது கைபேசியை அவனிடம் தூக்கி போட்டான் .


அவனின் கைபேசியில் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டு வந்தவனின் கண்கள் ஓரிடத்தில் பளிச்சிட , எட்டிப்பார்த்த மற்றவனும் , "ஹாஹா... !!! உன் ரசனையே தனி மச்சான் " என சிலாகித்து கைபேசியை வாங்கியவன் , ஒரு எண்ணை அதில் அழுத்தி அப்பக்கம் எடுக்க காத்திருந்தான் .


அப்பக்கம் எடுத்ததும் , " ம்ம்ம் !! நான் தான்... உடனே நான் அனுப்புற அட்ரெஸ்க்கு வா ".

"..............."

" ஹாஹா ...!!! நீ வரியா இல்லையானே நான் கேக்கலயே ...நீ வந்துதான் ஆகணும் இல்லனா என்ன ஆகும்னு தெரியும்ல?? " என அழுத்தி சொல்லியவன் போனை அணைத்துவிட்டான்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவ்வுருவத்தின் கண்களின் சிவப்பு நிறம் , ரத்தத்தின் நிறத்துடன் போட்டிபோட தொடங்கியது.

மணித்துளிகள் சில கடக்க அவ்வீட்டை விட்டு வெளிவந்த அவ்வுருவம் , எதிரில் சுற்றும்முற்றும் பார்த்தவாறு வந்தவரை கண்டு சட்டென்று அவர்முன் சென்று நின்றது.

அவ்விடத்தின் இருளோ... அல்ல... மனதில் இருந்த பயமோ... அல்ல... இவ்வுருவத்தின் விகார தோற்றமோ... அல்ல...அனைத்தும் சேர்ந்தோ எதிரில் வந்தவர் பயத்தில் அலறியவாறு மயங்கிவிழுந்தார் .


அதை வெற்றியின் மிதப்பில் பார்த்துகொண்டிருந்த அவ்வுருவத்தின் தோற்றம் சிறிது சிறிதாய் எதிரில் வந்தவரை போல் மாறியது .


மறுநாள் காலை செய்தித்தாளில் , " போதையின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு இறந்துகிடந்த வாலிபர்கள் " என்னும் செய்தியை தொடர்ந்து அந்த இருவரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.


தி லிட்டில் பேலஸ்:

தூக்கத்திலிருந்த மித்ரன் தன்மேல் எதுவோ விழுந்ததில் எழுந்து தன்முன்னால் இருந்தவளை கண்டவன், அவள் எறிந்திருந்த செய்தித்தாளை பக்கத்து சோபாவில் போட்டு மீண்டும் படுத்து விட்ட தூக்கத்தை தொடர,

"எரும எரும!!! எழுந்துதொலடா" என அவனை உலுக்கினாள் யஷி ....யஷி விஸ்வநாத் ....'மை' சேனலின் சொந்தக்காரர் விஸ்வநாத்'ன் ஒரே மகள்....மித்ரனின் மாமன் மகள்.

"டேய் !!!எந்திரிடா பக்கி, நான்தான் சொன்னேன்ல அந்த ஊரு வேணாம்னு பாரு இப்போ அங்க ரெண்டு கொலை வேற நடந்துருக்கு . நான் கண்டிப்பா அந்த ஊருக்கு வரமாட்டேன்டா " என சொல்ல,.

"கொலை "என்ற வார்த்தையில் விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்த மித்ரன் பட்டென்று எழுந்து உட்கார ,

இதுவரை அமைதியாய் இவர்களை பார்த்தவாறு மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்த விஸ்வநாத், தன் வாயருகே கொண்டுசென்ற காபி கோப்பையை பாதியில் நிறுத்தி தன் மகளை பார்த்தார் .

இருவரின் அதிர்ந்த முகத்தையும் பார்த்தவள், " என்ன ...என்ன? எதுக்கு இப்போ இரண்டு பேரும் இப்படி முழிக்கிறீங்க?"

அவளின் கேள்வியை கண்டுகொள்ளாத விஸ்வநாத் , கோப்பையை முன்னிருந்த மோடாவில் வைத்துவிட்டு செய்தித்தாளை எடுத்து அவள் சொன்ன செய்தியை ஆராய்ந்தார் .

அவர் அதை படிக்கும் வேளையில் அவரையும் அச்செய்திதாளையும் ஒருவித படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மித்ரன் ,

அவர் செய்தித்தாளை வைத்துவிட்டு "யஷிமா!!! என்னடா?? ஏதோ ரெண்டு பேரு தண்ணியடிச்சிட்டு ஒருத்தர்கொருத்தர் அடிச்சிக்கிட்டு செத்துருக்காங்க அத போய் கொலைன்னு சொல்ற" என கேட்ட பின்பே இத்தனை நேரம் இழுத்து பிடித்திருந்த மூச்சை விட்டான்.

" அடிங்கு ....!!! உன்னால தூக்கமே போச்சி பிசாசு " என அவளை பார்த்து முணுமுணுத்த மித்ரன் ,

"அங்கிள் ...!! நான் போய் உங்க ரூம்ல என் தூக்கத்தை தொடர போறேன் , ப்ளீஸ் !!! ஒரு பத்து மணி போல எழுப்பிவிடுங்களேன்...நாங்க கிளம்பறதுக்கு தேவையானதை கொஞ்சம் ரெடி பண்ணனும் " என்றவன் , தன்னிடம் ஏதோ பேசவந்தவளை கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்று கதவடைத்து நிம்மதி பெருமூச்செய்தினான்.


"அப்பா..!!! அந்த எரும மனசுல என்ன நினைச்சிட்டிருக்கான் ? நான் ஒருத்தி இங்க இல்லவே இல்லன்ற மாதிரி கண்டுக்காம போறான்" என கோபமாய் கத்திய யக்ஷி ,

"அப்பா ...!! ப்ளீஸ் அப்பா !! அவன் தான் நான் சொல்ற எதையும் நம்ப மாட்டான் , நீங்களாவது கேளுங்கபா...இது...இது..கொலைதான் பா ..அந்த ஊர் வேணாம்பா. நான் போகமாட்டேன் ...அவனையும் போகவேணாம்னு சொல்லுங்கபா " என கெஞ்ச,

" யஷிமா, என்னடா !! அப்பா உன்ன நம்பாம இருப்பனா? ஆனா நீ ஏற்கனவே சில தடவை இப்படி சொன்னப்போ நம்ப மித்து அதை எவ்வளவு விசாரிச்சு பார்த்தும் அதுலாம் கொலைதான்னு சந்தேகம் வரமாதிரி கூட எதும் கிடைக்கலையேடா" என்றவர் தொடர்ந்து,

" இங்கபாருடாமா இது நம்ப மித்துவோட கரியர்ல ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட். அவன் நினைச்சிருந்தா வேற யாரை வேணும்னா இதுல சேர்த்தீர்களாம் ஆனா அவன் அப்படி பண்ணலையே? எப்பவும் அவன் உன்ன தனியாவிட்டத்துமில்ல. இப்போ உன்னோட முறை , நீதான்டாமா இதுல அவனுக்கு துணையா இருக்கணும்." என புரிய வைக்க ,

"ஆனா அப்பா...பா ...இந்த ப்ராஜெக்ட் எதை பத்தினு உங்களுக்கு தெரியும்ல ...பா...பாம்பு பா...இ...இச்...இச்சாதாரி " என சொல்லும்போதே வார்த்தைகள் தந்தியடித்தது.... கண்களில் பயம் அப்பட்டமாய் வெளிப்பட தொடர்ந்தவள் ,

" இச்சாதாரி பாம்புகள் மனித உருவெடுக்கக்கூடியதுபா ...அதுமட்டுமில்லாம அது யாரையாவது பழிவாங்கணும்னு முடிவுபண்ணிட்டா அவங்களை மொத்தமா அழிக்காம விடாது " என சொல்லியவளின் தேகம் நடுங்கியது .

அவளை ஆதரவாய் அணைத்தவர், " டேய் கண்ணம்மா..!!! அது எல்லாம் வெறும் கட்டுகதை டா. நீ எப்பவோ படிச்ச புக்ஸ் , அப்றம் டீவில காட்டப்பட்ட சினிமா இதெல்லாம் பார்த்து நீயா உன் மனசுல நினைச்சிக்கிட்டது .அது அந்தந்த கதைகளோடு சுவாரஸ்யத்தை கூட்டுறத்துக்காக சேர்க்கப்பட்டதுடாமா. நம்ப சேனல் ஷோவ்ஸ்ல நம்ப பண்ணமாட்டோமா அதே தான்டா , நீ எதையும் யோசிக்காத... நம்ப மித்ரன மட்டும் யோசி அவனுக்காக இத பண்ணுடாமா "

மகளின் முகம் இன்னும் தெளிவடையாமல் இருக்க தொடர்ந்து,

"யஷிக்குட்டி !! உங்கபேரலாம் இன்னும் அழகா மாத்திக்கிட்டு நம்ப சேனல்ல வேலை பாக்குறதே உன்னோட மித்ரனுக்கு உன்னால முடிஞ்ச உதவிய செய்யணும்னு தான? இது அவனுக்கு ரொம்பவே ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் , இத்தனை நாள் உனக்கு துணையா எல்லாத்துலயும் நின்னவனுக்கு இப்போ உன்னோட துணை தேவைப்படுத்துடா நீ யோசிச்சி சொல்லு" என மகளின் மனதில் அழுத்தமாய் பதியவைத்தார்.

"மை டிவி" இது விஸ்வநாத்தின் தந்தை யஷ்வேந்தர் ஆரம்பித்தது . அவருக்கடுத்து அப்பொறுப்பை விஸ்வநாத் சிறப்பாய் செய்துவந்தார்.


அவர் என்னத்தான் சேனலை வெற்றிகரமாய் கொண்டுசென்றாலும் , முதல் ஐந்து சேனல்களில் ஒன்றாய் 'மை டிவி' யை சேர்த்த பெருமை மித்ரனையே சேரும். ஐந்து சேனல்களில் ஒன்றாய் இருப்பதை முதலாம் இடத்திற்க்கு கொண்டுவருவதே மித்ரனின் கனவு... அவனின் சிறுவயது முதலான ஆசையும் அதுவே.

இதற்காகவவே படித்தவன் தங்களின் சேனலின் பல ஷோக்களை இயக்கினாலும் , மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க விருப்பம் கொண்டு ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறான் .

இத்தனை ஆசை இத்துறையின் மேல் இருப்பினும் நடுவில் சில நாட்கள் இவை எது பற்றியும் சிந்திக்காமல் "யஷி" மட்டுமே தன் சுவாசமாய் எண்ணி கழிந்த அவனின் நாட்களும் இருக்கின்றன .

அதற்காகவே அவனுக்கு துணையாய் என்றும் இருக்க விரும்பியவள் அவனின் பெயருடன் தன் பெயரை இணைத்து "மித்ரயஷி" என்னும் பெயரில் அவர்களின் சேனலில் இணைந்தவள் இதுவரை அவன் செய்துவந்த அனைத்து ப்ராஜெக்ட்களிலும் தன்னால் முடிந்ததை செய்திருந்தாள்.

கொஞ்சகொஞ்சமாய் அவளின் மனம் இப்பயணத்திற்கு தயாராக , வழக்கம் போல் இரவு முழுக்க தூங்காமல் முழித்திருந்ததில் இப்பொழுது அவள் கண்கள் தானாய் தூக்கத்தை தேட, மித்ரன் எழுந்து சென்றதால் காலியான அச்சோபாவில் தலை சாய்த்தாள் .

அவளின் தலையை கோதிய விஸ்வநாத் , அவள் முகத்தில் யோசனை சுருக்கல்கள் நீங்கி அமைதியாய் உறங்க ஆரம்பித்ததில் மகள் நிச்சயம் இதில் மித்ரனுக்கு துணையிருப்பாள் என நம்பிக்கை தோன்ற புன்னகையுடன் தங்கள் அன்றாட வேலைகளை கவனிக்க உள்ளே சென்றார்.

அவர் தலை கோதலை நிறுத்தி நகர்ந்திருக்க, யஷியிடம் சிறு சிணுங்கல் வெளிப்பட்டு தூக்கம் கலையபோக அதை கலையவிடாமால் வலிமையான ஒரு கரம் அவளின் தலையை ஆசையாய் கோத தொடங்கியது.

முன்ப விட இக்கோதலின் மென்மை பாதுகாப்பானதாகவும், தனக்கு உரியனதாகவும் தோன்ற கலைய ஆரம்பித்த தூக்கத்தை உதட்டில் நிலைத்த புன்சிரிப்புடன் தொடர்ந்தாள் யஷி.

அவ்வறையின் அமைதியில் " என்கிட்டே வருவதற்க்கு எதுக்குடி உனக்கு இவ்வளவு அடம் ? என்னை பார்க்கணும்னு உனக்கு தோணவே இல்லையா ? " என காற்றோடு கலந்து அக்குரல் மெதுவாய் ஏக்கத்துடன் ஒலிக்க ,

" யாரது " என்ற யோசனையுடன் முன்னறைக்கு வந்த விஸ்வநாத் அங்கு கண்ட காட்சியில் ரத்தம் உறைய நின்றார் .

உருவமில்லாமல் ஒரே ஒரு கரம் மட்டும் காற்றில் அசைந்தவாறு தன் மகளின் தலை கோத யஷியோ மென்னகையுடன் உறங்கிக்கொண்டிருந்தாள்.
(மித்ரன் - நண்பன் ; யஷி - வெற்றி )


-காதலாகும் ...
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
பதிவின் நிறைகுறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் என் நேசப்பூக்களே !!!
அடுத்த பதிவு புதன்கிழமை அன்று:love:

நன்றி:):)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "முரண்பாடே
காதலாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
யமுனா @ சந்தோஷி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யமுனா @ சந்தோஷி டியர்
 
Last edited:

Thoshi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "முரண்பாடே
காதலாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
யமுனா @ சந்தோஷி டியர்
நன்றி மா:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top