அழகி
Active Member
@Saranya Hema
கதையின் தலைப்பு மிக அழகாக வித்தியாசமாக இருந்தது. கதைக் கருவும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அஷ்மிதா/துவாரகா... இவர்களில் யார் ஹீரோயின் என்பதில் ஆரம்பத்தில் வாசகர்களைக் கொஞ்சம் குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் நினைத்தார் போலும்.(நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன்.)
அஷ்மிதாவின் ஹாஷ்யம்... அப்பப்பா! ஒருசில இடங்களில் என்னை மறந்து நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன்.
மயில்சாமி... சீச்சீ, ரத்தினசாமி... டெர்ரரான அரசியல்வாதி. ஆனால் தங்கைப் பாசம் கண்ணை மறைத்துவிட்டது. இருந்தாலும் அழகான குடும்பத்திற்குச் சொந்தக்காரர்.
கல்யாணக் களேபரத்தின் போது கதை மிகவும் பரபரப்பாகப் போனது. என்ன நடக்கப் போகிறதோ என்ற விறுவிறுப்பு அங்கே குறைவில்லாமல் இருந்தது. நன்று.
அதன் பிற்பாடு கதை கொஞ்சம் ரோலர் கோஸ்டர் போல அவசியமில்லாமல் ஏறி இறங்கியதோ!?
கதையின் ஆரம்பத்தில் இருந்த அனைத்துப் புதிர்களுக்கும் அகிலவேணியின் ஃப்ளாஷ் பேக் மூலம் ஆசிரியர் பதிலளித்திருந்தார்.
முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள். இருபத்தி ஐந்தில் முடிக்க நினைத்ததாக ஆசிரியரே குறிப்பிட்டிருந்தார். அப்படி முடித்திருந்தால் கதை இன்னும் திறம்பட இருத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
எழுத்துப் பிழைகள் குறைவாக இருந்தது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியர் அதில் கவனமெடுத்தால் இன்னும் நான் மகிழ்வேன்.
இதமான எல்லை மீறாத காதல் காட்சிகள் படிக்க சுகமாக இருந்தது. டாக்டரின் ஹாஷ்யம் கதைக்கு ப்ளஸ். அதே நேரத்தில் சில இடங்களில் இவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தோன்றியது.
ஆசிரியர் திட்டமிட்டபடி குறைந்த அத்தியாயங்களில் கதையை முடித்திருந்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கதைப் படித்த திருப்தி முழுதாகக் கிடைத்திருக்கும்.
ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்...
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிட வா...
அன்புடன் அழகி.
கதையின் தலைப்பு மிக அழகாக வித்தியாசமாக இருந்தது. கதைக் கருவும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அஷ்மிதா/துவாரகா... இவர்களில் யார் ஹீரோயின் என்பதில் ஆரம்பத்தில் வாசகர்களைக் கொஞ்சம் குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் நினைத்தார் போலும்.(நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன்.)
அஷ்மிதாவின் ஹாஷ்யம்... அப்பப்பா! ஒருசில இடங்களில் என்னை மறந்து நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன்.
மயில்சாமி... சீச்சீ, ரத்தினசாமி... டெர்ரரான அரசியல்வாதி. ஆனால் தங்கைப் பாசம் கண்ணை மறைத்துவிட்டது. இருந்தாலும் அழகான குடும்பத்திற்குச் சொந்தக்காரர்.
கல்யாணக் களேபரத்தின் போது கதை மிகவும் பரபரப்பாகப் போனது. என்ன நடக்கப் போகிறதோ என்ற விறுவிறுப்பு அங்கே குறைவில்லாமல் இருந்தது. நன்று.
அதன் பிற்பாடு கதை கொஞ்சம் ரோலர் கோஸ்டர் போல அவசியமில்லாமல் ஏறி இறங்கியதோ!?
கதையின் ஆரம்பத்தில் இருந்த அனைத்துப் புதிர்களுக்கும் அகிலவேணியின் ஃப்ளாஷ் பேக் மூலம் ஆசிரியர் பதிலளித்திருந்தார்.
முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள். இருபத்தி ஐந்தில் முடிக்க நினைத்ததாக ஆசிரியரே குறிப்பிட்டிருந்தார். அப்படி முடித்திருந்தால் கதை இன்னும் திறம்பட இருத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
எழுத்துப் பிழைகள் குறைவாக இருந்தது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியர் அதில் கவனமெடுத்தால் இன்னும் நான் மகிழ்வேன்.
இதமான எல்லை மீறாத காதல் காட்சிகள் படிக்க சுகமாக இருந்தது. டாக்டரின் ஹாஷ்யம் கதைக்கு ப்ளஸ். அதே நேரத்தில் சில இடங்களில் இவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தோன்றியது.
ஆசிரியர் திட்டமிட்டபடி குறைந்த அத்தியாயங்களில் கதையை முடித்திருந்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கதைப் படித்த திருப்தி முழுதாகக் கிடைத்திருக்கும்.
ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்...
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிட வா...
அன்புடன் அழகி.