மாலை சூடும் வேளை-8

Advertisement

laxmidevi

Active Member
மாலை -8
பாடல் வரிகள்
நான் மடி ஏந்திமண் போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏன்தான் யோசித்தாய்
மனம்தாங்காதே பின் வாங்காதே
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
இது மெய் தானேஉன்னைக் கேட்கிறேன்அட என் கண்ணை நானேபார்க்கிறேன் என் கண்ணீரில்நன்றி சொல்கின்றேன்
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
மாற்றம் மனதிலொருமாற்றம் மாற்றம் விழியில்தடுமாற்றம் தவறல்லவாஉன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு
காதல்அனைவருக்கும் பூவோஎனக்கு மட்டும் முள்ளோமுள்ளோ உன்னால் சொல்லாமலேமுத்தாடவோ
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
இது சொல்லாதசோகம் அல்லவா அதைமௌனங்கள் சொல்லும்அல்லவா தள்ளிப்போனாலும்உள்ளம் போகாது
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
இவள் நெஞ்சோடுஏதோ உள்ளது அதை உன்காதில் சொன்னால் நல்லதுமௌனம் தீர்ப்போமா மீண்டும்பார்ப்போமா
விக்ரமின் கோப விழிகளை பார்த்த மங்கைக்கு பயத்தில் உடம்பு சில்லிட்டது. தக்க நேரத்தில் வந்து உதவி செய்தார் ஆனால் ஏன் எப்படி முறைக்கிறார் அன்றும் அப்படித்தான் .


பயத்தில் மங்கை விக்ரமிற்கு நன்றி கூட கூறவில்லை. மங்கையின் கண்களில் பயத்தினை தவிர்க்கலாம் கண்ட விக்ரம் இங்கிருந்து உடனே சென்று விட்டான் .

சக்தி கல்லூரியில் இருந்தும் கிளம்பிய விக்ரம் முகத்தில் கடுகு போட்டால் வெடித்துவிடும் கோபத்துடன் தன் வீட்டினுள் நுழைந்தான் .


பூஜை முடித்து விட்டு வெளியே வந்த அம்பிகா என்ன தம்பி அதிசயமா சீக்கிரம் வந்துட்ட என்றார் .

அம்மா எனக்கு தலை வலிக்குது இஞ்சி டீ வேண்டும் என்றான்.

நீலா தம்பிக்கு ஒரு இஞ்சி டீ கொண்டு வாம்மா என்றவாறு சோபாவில் விக்ரமின் அருகில் அமர்ந்தார்.

விக்ரம் தன் தாயின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான். அவன் மனதில் மாலையில் நடந்த நிகழ்வுகள் படம் போல் ஓடிக் கொண்டிருந்தது எத்தகைய விபரீதம் தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பெண்கள் இதை வார்டனிடம் சொல்லக்கூடாது என்கின்றனர் .விக்ரம் நினைத்திருந்தால் என் சொந்த பாதுகாப்புக்காக இரு தோட்டாக்களை பயன்படுத்தினேன் என்றும காரணம் சொல்லி இருக்கலாம் ஏனெனில் அவன் தற்போது பார்த்துக்கொண்டிருந்த வழக்கு அப்படிப்பட்டது .அவனுடைய உயிருக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே கமிஷனர் விக்ரமிற்கு தேவைப்பட்டால் துப்பாக்கியில் உபயோகப்படுத்துவதற்கு அனுமதி அளித்திருந்தார். அப்படி இல்லாவிட்டாலும் இதை சமாளிப்பது அவனுக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை .ஆனால் இந்தப் பெண்கள் மீண்டும் அந்த பூங்காவிற்கு செல்லக்கூடாது என்பதற்காகவே அதை ஒரு காரணம் காட்டி அந்த வார்டனிடம் கூறினான். இனிமேலாவது கண்காணிப்பை அதிகபடுத்துவார்கள் என்று எண்ணினான்.

என்னப்பா ஒரே யோசனை டீ எடுத்துக்கொள் என்றார் விக்ரமின் அன்னை.

தேங்க்ஸ் நீலாகா என்றும் டீயை பருகினான்.

இன்னும் ஏதேனும் வேலை இருக்கு தப்பா என்று என்று கேட்டார் அம்பிகா.

ஏன்மா என்னிடம் ஏதாவது பேச வேண்டுமா என்றான் மகன் .

ஆமாம்பா . கொஞ்சம் முக்கியமான விஷயம் .

பெரிதாக எந்த வேலையும் இல்லை க சின்ன சின்ன வேலை இருக்கு .அதை அப்புறமா பாக்கலாம் நீங்க சொல்லுங்க ம்மா .

அம்பிகா ராகவன் வந்ததையும் அவர் கூறியதையும் சுருக்கமாக தெரிவித்தார்.

கண்ணா உனக்கு நம்ம மலர்விழியை பிடித்திருக்கிறதா? அவளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா? உன்னுடைய விருப்பத்தினை சொல்லிவிட்டால் அதற்கேற்ப முடிவு எடுக்கலாம். உங்கள் இருவரின் விருப்பம் தான் முக்கியம் எங்களுக்கு.

அம்மா நான் இப்போது முக்கியமான வழக்கினை பார்த்துக்கொண்டிருக்கிறேன். மூன்று நாட்கள் மட்டும் டைம் கொடுங்க என்னுடைய பதிலை சொல்கிறேன்.

சரி டா கண்ணா ஆனால் மூன்று நாட்களுக்கு உன்னுடைய பதில் சொல்லிவிட வேண்டும்.
உனக்கு மலரின் மேல் விருப்பம் இல்லையெனில் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கணும் இல்லையா அதனால் காலம் தாழ்த்தக் கூடாது என்றால் கண்டிப்பாக.

சரிம்மா.

இதற்கு என்ன பதில் கூறுவது என்று விக்ரம் யோசித்துக் கொண்டிருந்தான் அவனுக்கு மறுபடியும் தலை வலிப்பதுபோல் இருக்கவே சற்று நேரம் தூங்கலாம் என்று எண்ணியவாறு தூங்கி விட்டான்.


அதே நேரத்தில் சக்தி கல்லூரியில்
மங்கையின் பக்கத்து அறையில் உள்ள வனிதா தன் அண்ணன் மோகனிடம் இங்கே நடந்ததை கூறிக் கொண்டிருந்தாள். மோகனும் இதே கல்லூரியில் தான் இறுதியாண்டு படிக்கிறான் .வனிதாவிற்கு தூரத்து சொந்தம் ஆனாலும் இருவரும் அண்ணன் தங்கையை போன்றே பழகி வந்தனர் நீ சொல்வது நம்புவது போல் இல்லையே வனிக்குட்டி என்றான் மோகன் .
வேண்டுமானால் நான் உனக்கு வாட்ஸ் அப்பில் அழைப்பு இருக்கும் வீடியோவை பார் என்றாள் வனிதா .

ஏதோ சத்தம் கேட்டேன் ஜன்னல் வழியாக பார்த்தக் வனிதா அங்கே யானையை கண்டதும் ஒரு ஆர்வத்தில் தன் செல்லில் வீடியோ எடுத்து கொண்டிருந்தாள், பின்புதான் மங்கை யை கண்டாள் பின் விக்ரம் வந்ததையும் அவன் துப்பாக்கியால் சுடுவதை பார்க்கும்போதும் ஏதோ படத்தில் வருவதை போல் இருக்கவே அனைத்தையும் வீடியோ எடுத்தான் அதைத்தான் மோகனுக்கு அனுப்பி வைத்தாள். பின் அண்ணனிடம் பேசி விட்டு அறைக்கு சென்றாள் வனிதா .

வார்டன் அனைத்து மாணவிகளையும் அழைத்து கடுமையாக திட்டி எச்சரித்து அனுப்பினார் .

ரூமிற்கு வந்தவுடன் கவியையும் மங்கையும் சரமாரியாக திட்டினாள் மதி பின் மங்கையின் கால் காயத்திற்கு மருந்திட்டு அவளை படுக்க வைத்தனர் அப்போதும் அங்கு வந்த வனிதா அவர்களிடம் அந்த வீடியோவை காட்டினாள் அதைப்பார்த்த கவி ஏண்டி வழி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? யாருன்னு தெரியாம தானே வார்டன் பொதுவா எல்லாரையும் திட்டினார்கள் நாம் தான் தெரிஞ்சது அவ்வளவுதான் லூசு செஞ்ச தப்புக்கு நீ ஆதாரம் வேறு எடுத்து வைக்கிறியா? என்று கடுமையாக திட்டினாள் கவி. அதை அழித்து விடு.வேறு யாரிடமும் காட்ட வில்லையே என்று கேட்டாள் கவி.

கவியின் கோபத்தில் பயந்த வனிதா தன் அண்ணனிடம் அனுப்பியதை கூறாமல், இல்லை கவி,இதை யும் அழித்து விடுகிறேன் என்றாள் அண்ணனிடம் அதை அழித்துவிட சொல்லவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அங்கேயே மோகன் அதை பார்த்துவிட்டு தன் அக்காவிற்கு அனுப்பினான் உன் மச்சானின் சாகசம் என்ற செய்தியோடு

அதை அந்த வீடியோவை பார்த்தவளின் விழிகள் பல்வேறு பாவனைகளை காட்டியது.

மாலை கொடுக்கப்படும்.

Hi friends,
please share your comments..it's very helpful to me..
Thanks for ur support my dear friends...
Regard s,
Laxmi devi.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மிதேவி டியர்
 
Last edited:

Shaloostephen

Active Member
Nice ud .katha interesting ah than irruku. Aana epi romba cinnatha irruku. Full ah enjoy panna mudiyala.intha thundu thukadava konjam perusu pannalamae
 

laxmidevi

Active Member
ஹாய் நண்பர்களே,

என்னுடைய தனிப்பட்ட வேலையின் காரணமாக இந்த எபி சின்னதா போட்டுட்டேன். நாளைக்கு பெரிய எபி போடுறேன் . மன்னித்து கொள்ளுங்கள்.


உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி..

உங்கள்
லட்சுமி தேவி.
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
மோகன் அக்கா மலரா
இது பெரிய பிரச்சினை ஆகுமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top