மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 14

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
மாடிக்கு சென்றதும் நந்தன் வரப்பில் ஏறி அமர்ந்து கொண்டான். சஞ்சனா பின்னால் சென்று., 'என்ன அபித்தான்...' என்றாள் குழைவான குரலில். மதுமித்ரா படிக்கு அருகில் நின்று கொண்டு இருந்தாள்‌. இரவின் நிசப்தத்தில் நந்தனும், சஞ்சனாவும் பேசுவது துள்ளியமாக கேட்டது மதுமித்ராவிற்கு

'சஞ்சு... உனக்கு என்ன பிடிக்குமா...' என்றான் மெல்லிய குரலில்...

'என்ன அபித்தான் இப்படி கேக்குற... உன்ன மட்டும் தான் புடிக்கும்...'

'புடிக்கும்னு சொல்ற... ஆனா அதுக்கான எஃபொர்ட் எதுவும் எடுக்கலையே நீ...'

'என்ன எஃபர்ட்...'

'யாரவது என் கிட்ட நெருங்குனா நீ சும்மா தானா விட்டுட்டு இருப்ப...' என்றான் குத்தலாக..

'அப்படியெல்லாம் இல்லையே‌.. எவ வந்தாலும் விட மாட்டேன்...' என்றாள் அவளும் விடாமல்...

'பொய் சொல்ற சஞ்சு‌.. அப்படி நீ என்ன செஞ்சுட்ட...' என அவன் கேலிக்குரலுடன் கேட்கவும்

அவன் காதலுடன் தான் கேட்கிறான் என நினைத்து 'அபித்தான் என்ன இப்படி சொல்லிட்ட... அந்த மதுமித்ராக்கு உன் மேல ஒரு ஆச இருந்துச்சு தெரியுமா உனக்கு... எப்போ பார்த்தாலும் உன்ன பார்த்துட்டே இருக்கும்... நீ வேற பக்கம் பார்க்குறப்போலாம்... அவளுக்கு ஹாஸ்டல் பார்த்ததே நான் தான்... ஆனா அத்த தான் கெடுத்து விட்டுட்டாங்க... ' என்றாள்.

அபிநந்தனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.. மதுமித்ராவிற்கு தன்னை பிடிக்கும் என்பதே அவனுக்கு இப்போது தானே தெரிகிறது... அவளும் தன்னைப் பார்த்திருக்கிறாள்... படிக்கு அருகில் நின்ற மதுமித்ராவிற்கோ வெட்கம் தாங்கவில்லை... அவன் அவள் மேல் ஒரு பார்வையை வேறு வீசி விட்டான்... கால்கள் தரையில் இல்லை என்பதைப் போல் உணர்ந்தாள் அவள்... ஆனால் அவளது கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லையே‌.. அவன் அவளைக் கட்டிப் பிடித்தான் தானே... என அவள் யோசித்துக்‌கொண்டு இருக்கும் போதே சஞ்சனாவே தொடர்ந்தாள்...

'ஆனா அது என்னமோ அபித்தான்.. நான் உன் பின்னாடியே வந்தாலும் நீ திரும்பி கூட பார்க்கமாட்டேங்குற... உன் கைய பிடிச்சுட்டு வெளிய எங்கயாவது போகணும் போல இருக்கும்... எங்க... +2 படிக்கும் போது பொங்கலுக்கு வெளிய கூட்டிட்டு போன... அதுக்கு பிறகு இப்ப வரைக்கும் கைய கூட பிடிச்சதில்ல நீ...

அவளை சலனமற்ற பார்வை பார்த்தவன்,. 'பின்ன ஏன் அவ கிட்ட போய் நான் உன்ன கட்டிப் பிடுச்சேன்னு சொன்ன...' என்றான்...

சஞ்சனாவிற்கு புரிந்துவிட்டது.. ஆனாலும் எதுவும்‌ அறியாதவள் போல்., 'யாருகிட்ட அபித்தான்...' என்றவாறு அவனை நெருங்கினாள்.

அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவன்., 'மதுமித்ரா கிட்ட ஏன் அப்படி சொன்ன' என்றான்‌ இம்முறை அழுத்தமான குரலில்..

'நான் எதுவும் சொல்லல...' என அவள் முடிக்கும் முன் ஓங்கி அறைந்துவிட்டான்... சின்னப் பெண்ணை அடிக்கிறானே என தோன்ற மதுமித்ராவும் அங்கே வந்துவிட்டாள்.

'என்ன சொன்ன அவகிட்ட...' என அவன்‌ சீறவும் மதுமித்ராவிற்கு முதுகு‌காட்டி நின்ற சஞ்சனா உண்மையை கூறிவிட்டாள்.

மதுமித்ரா சஞ்சனாவை கட்டிக் கொண்டாள். 'எதுக்கு நந்தன் இப்படி சின்ன பொண்ணுகிட்ட போய்...' என்றாள்.

'உனக்கு உண்மை தெரிஞ்சதுல... அவ்வளவு தான்‌ எனக்கு தேவை... ' என்றவன் சஞ்சனாவிடம் திரும்பி., 'வேற எதுவும் ப்ளான் பண்ணிட்டு திரியாத...‌நானும்‌ அவளும் லவ் பண்ணுறோம்..' என்றான்.

சஞ்சனா இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு கீழே சென்றுவிட்டாள்.

மதுமித்ராவும் கீழே இறங்க எத்தனிக்க நந்தன் அவளைப் பிடித்து தன்‌ வசம் இழுத்தான். மதுமித்ராவிற்கு என்னவோ போல் இருந்தது... 'விடுங்க கைய...' என்றாள் சின்னக் குரலில்..

'இன்னும் எதுக்கு மதுரா விடணும்' என்றான் அவன் அழுத்தமாக..

திடுமென முளைத்த பேயாக அவளுக்கு‌ பார்வதிம்மாவின் நினைவு வர அவனை நீங்கி நின்றாள்.

'இப்போ என்ன மதுரா...' என்றான்‌ அவன் கெஞ்சலாக...

'பார்வதிம்மா.' என அவள் தயங்கவும்..

'ஆமாடீ... அவங்கட்ட சொல்லணும்... நான் இதெல்லாம்‌ நடக்கவே நடக்காதுனு நெனச்சப்போ‌ எல்லாம் அவங்க தான்‌ எனக்கு‌ நம்பிக்கை கொடுத்தாங்க... உன்ன உன் வீட்டுக்கு அனுப்புனது கூட பிரிஞ்சு இருந்தா உனக்கு புரியும்னு‌தான்... ரொம்ப சந்தோஷப் படுவாங்க...' என்றான் துள்ளலாக..

அப்படியென்றால் பார்வதிம்மாவிற்கு தெரியுமா... மதுராவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை.. தாவி நந்தனை கட்டிக் கொண்டு தேம்ப ஆரம்பித்தாள். நந்தனுக்கு எதற்கென்று புரியவில்லை... சில நிமிடங்கள் அவனை தேம்பவிட்டவன்., 'என்னாச்சு மா..' என்றான்.

அவள் தன்னுடைய பயம் பற்றிக் கூறியதும் சிரித்தே விட்டான்...

'என்னது எங்க அம்மா வேண்டாம்னு சொல்வாங்கன்னு பயந்தியா... ஆச பட்டதே எங்க அம்மா தான் மதுரா... வா போய் அவங்கட்ட சொல்லுவோம்..' என சிரிப்பினூடே சொல்லி முடித்தான்.

இருவரும் சிரித்த முகத்துடன் கீழே வருவதைக் கண்ட பார்வதிக்கு அவர்கள் சொல்லாமலேயே புரிந்து போயிற்று...

சஞ்சனா அமைதியாக அறைக்குள் அமர்ந்திருந்தாள்... அபிநந்தன் உள்ளே நுழையவும்., 'சாரி அபித்தான்... எனக்கு தெரியாது... உனக்கு‌ பிடிக்காம தான் அவங்க செய்றாங்கலோன்னு நெனச்சேன்... இனி தொந்தரவு பண்ண மாட்டேன்... அவங்க கிட்டயும் சாரி சொல்லிடுறேன்... ' என்றாள்.

பாவம் அவளும் என நினைத்தவன்., 'சரி சஞ்சு‌.. நானும் தப்பு பண்ணிட்டேன்.. சாரி மா... நீ எப்பவும் போல இங்க இரு.. ' என்றான் அவள் கூறுவதை உண்மை என்று நம்பி...

மதுமித்ராவிடம் எழுந்து சென்ற சஞ்சனா., 'மது.... சாரி... ' என்றாள்.

'பரவால்ல... விடு சஞ்சனா...' என மதுமித்ரா உறைக்கும் முன்

'உன்ன விட்டுட்டேன் பார்த்தியா அவன் கிட்ட அதுக்கு சாரி... நீ இனிமேல் அவன் இல்லாம கஷ்டப்படுவ அதுக்கும் சேர்த்து சாரி...' என்றாள் திமிர்க் குரலில்...

ஒரு அலட்சியப் பார்வையுடன் மதுமித்ரா அவளைக் கடந்து விட்டாள். ஆனால் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை சஞ்சனா இதோடு விடமாட்டாள் என்று...
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் நொம்ப நொம்ப
அநியாயம், மதுரா டியர்
நக்கினியூண்டு அப்டேட்
கொடுத்துட்டு எஸ்ஸாகக்
கூடாதுங்கோ
சஞ்சனாவை மது லேசாக
நினைத்து அலட்சியப்படுத்துகிறாள்
சஞ்சனா என்ன ஆட்டம்
ஆடப் போறாள், மதுரா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top