Thank you sis..Saaru ethanai kurumbu seithalum ethirparpu indri avanai kaathalithatharku avane kanavanaka kidaithu vittaan...
Nice story Anu dear
Waiting for next story......
Thank you sis..Saaru ethanai kurumbu seithalum ethirparpu indri avanai kaathalithatharku avane kanavanaka kidaithu vittaan...
Nice story Anu dear
Waiting for next story......
Thank you....Nice story sis......
Thank you sis...Very Nice Story
Thank you sis....Nice story...
Thank you sis...Nice story Anu yenpa varunukku Jodi podala paavam Varun , ok chumma sonnen nice finishing nammaku Namma hero heroine thaana mukkiyam irundhalum pottu irrukalaam enna irundhalum Avan hero frnd la epilogue irrukka anu
supr story anu sisவணக்கம் நட்புக்களே.......
மண்ணில் தோன்றிய வைரம் நாவல் இந்த பாகத்தோடு நிறைவு பெறுகிறது..... வாசகர்களான உங்களது சப்போர்ட்டும் கருத்துக்களுமே கதையை எழுதி முடிக்க பெரும் உதவியாக இருந்தது.....
என்னுடைய அடுத்த கதையான "மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே" கதையோடு விரைவில் உங்களை சந்திப்பேன்....
டாடா.......
அனு சந்திரன்
**********************************************
பண்ணை வீட்டில் இரவு நேர வெண்ணிலவு காய்ந்து கொண்டிருக்க திண்ணையில் போடப்பட்டிருந்த மரக்கட்டிலில் அமர்ந்து வெற்றிலை மென்று கொண்டிருந்தான் அஸ்வின்..... சேலை மாற்றுவதாக சொல்லி வீட்டினுள்ளே சென்ற சாரு ஒரு மணித்தியாலமாக வெளியே வரவில்லை.... பொறுத்திருந்து பார்த்த அஸ்வின் அவளை அழைக்க பதிலில்லாமல் போக வீட்டினுள் செல்வதே சரி என்று முடிவெடுத்து கதவருகே சென்று கதவின் மேல் அஸ்வின் கையை வைக்க சரியாக கதவு திறந்தது..... திறந்த கதவின் பின் நின்ற சாருவை பார்த்த அஸ்வின் திகைத்து விட்டான்.... அவள் கண்டாங்கி சேலை கட்டி காலிற்கு மெல்லிய கொலுசு அணிந்து கைகள் கண்ணாடி வளையல்களால் அரணிடப்பட்டு இரட்டை ஜடை பின்னி அதில் ஒரு ஜடை மார்புப்புறம் போடப்பட்டிருக்க அதன் மேல் நெருங்கித்தொடுத்த மல்லிகைப்பூச்சரம் சொருகப்பட்டிருந்தது...
காதில் சிறிய வெள்ளி நிற தொங்கட்டான்கள் ஆடிய வண்ணம் இருக்க உதடுகள் கடும் சிவப்பு நிற உதட்டுசாயத்தை விரும்பிப்பெற்றிருந்தது.... இவற்றிற்கு மேல் நாசியை துளையிட்டு வீற்றிருந்த அந்த கல் பதிக்கப்பட்ட மூக்குத்தி அம்சமாய் பொருந்தி அந்த அழகை மெருகூட்டியது....
கண்களின் கீழ் கண்மை அகலமாக வரையப்பட்டு அந்த விழிகளை எடுப்பாய் காட்ட அது ஒரு வித மையலை அஸ்வினுள் கிளப்பியது.... அவளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த அதாவது அவளை காதல் கலந்த காமத்துடன் அணுவணுவாய் ரசித்துக்கொண்டு அஸ்வின் அவ்விடம் விட்டு அசையாமல் இருக்க சாருவோ அவனை தன் பின்னலிட்ட ஜடையால் வருடி விட்டு மரக்கட்டில் இருக்கும் இடம் நோக்கி சென்றாள்.... அவள் பின்னே ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் அஸ்வின் பின்தொடர அவள் இடை அசைந்து நடைபோட அதற்கேற்ப அவளது ஒரு ஜடை அசைய அந்த அசைவில் அவன் மொத்தமாய் மயங்கிபோனான்....... அவள் கட்டிலில் அமர அவன் கீழே அமர்ந்து அவளுக்கு வெற்றிலை மடித்து கொடுக்க அதனை அவளது நா சப்பும் போது காற்றடைத்த பலூன் போல் வெளிவரும் கன்னங்களும் இடையிடையே அசையும் அவளது சிவப்புசாய அதரங்களும் அவனை கிறுக்கனாக்கியது..... மென்ற வெற்றிலையை அவள் துப்புவதற்காக இருவிரல்களை வாயினருகே கொண்டு சென்று இருவிரல் இடைவெளியில் நாவினை வைத்து எச்சிலை துப்பியவள் அஸ்வினை நோக்கி ஒரு கள்ளச்சிரிப்புடன் ஒற்றை புருவம் தூக்கி என்னவென்று வினவ அவளது அந்த பாவனையில் அவனது ஆண்மை வீறு கொள்ள சுண்ணாம்பினால் மேலும் சிவந்திருந்த அவளது இதழ்கள் அவனை பித்தனாக்கி அந்த இதழ்களை கவ்வச்செய்தது..... இதழ் முத்தத்தில் இருவரும் நிலை தவறி கட்டிலின் மேல் சரிய தேன் சேகரிக்கும் தேனீயாய் அவளது இதழ்களை சுவைத்து இதம் காண ஆரம்பித்தான் அஸ்வின்.... இருவரும் வேறொரு உலகில் சஞ்சரிக்க தொடங்க சாருவின் கால்பட்டு கீழே விழுந்த வெற்றிலை டப்பா அவர்களை மோனநிலையை கலைத்தது....அப்போதுதான் தாம் இருந்த நிலையை உணர்ந்தார்கள் இருவரும்..... அப்போது வெட்கம் வந்து சாருவின் முகத்தில் அரிதாரம் பூசிக்கொள்ள அதில் அஸ்வின் கிளர்ந்தெழ மீண்டும் இருவருக்கும் இடையில் முத்தச்சண்டை மூண்டது....... அந்த யுத்தத்தில் சாருவிற்கு மூச்சுமுட்ட அஸ்வின் அவளை விடுவித்தான்........
“என்ன ஜிலேபி உன்னோட ரௌடிபேபி எப்படி பர்போம் பண்ணான்??? என்னோட பர்போமன்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, கமென்ட் பண்ணுங்க, வன்ஸ் மோர் கேளுங்க” என்று சாருவை கலாட்டா பண்ண அவளோ
“சீ நீ ரௌடிபேபி இல்லை.... டேர்ட்டி பேபி.... “
“ஓ அப்படியா.....??? இந்த டேர்ட்டி பேபி இன்னும் நிறைய செய்வான்.... உனக்கு ஒரு டெமோ காட்டவா????” என்று அவளை நோக்கி குனிய அவளோ அவனை தள்ளிவிட்டு
“அதெல்லாம் இப்போ வேணாம். முதல்ல நான் கேட்பதற்கு பதில் சொல்லு.....உனக்கு எப்போ என்மேல லவ் வந்திச்சி????அதை நீ எப்போ ரியலைஸ் பண்ண???”
“ஜில்லுமா இது ராத்திரி நேரம் அதுவும் நமக்கான ஸ்பெஷலான நேரம்.... இப்போ அதை பற்றி எல்லாம் பேசனுமா??? காலையில அதை பற்றி பேசலாமே???? இப்போ நாம விட்டதை கண்டினியூ பண்ணலாமே.... பிளீஸ்.....”
“நீ நான் கேட்டதுக்கு பதில் சொன்னா தான் கண்டினியூ பண்ணலாம். இல்லைனா நாம இங்க இருந்து கிளம்ப வரைக்கும் நான் தனியா உள்ள படுத்திடுவேன்.... நீ தனியா தான் இந்த கொட்டுற பனியில் தூங்கனும்....”
“ராட்சசி ..... நேரம் பார்த்து பழிவாங்குறா..... சரி சொல்றேன்.... உன்னை பஸ்ட் டைம் இன்டர்வியூவில் பார்த்தப்போ ஒரு கிரஷ்... ஆனா உன்னை எங்கயோ பார்த்த ஞாபகம்.... ஆனா எங்கனு தெரியலை.... இன்டர்வியூவில் உன்னை சைட் அடிச்சிட்டு தான் இருந்தேன்... திடீர்னு உன்னோட பொசிஷன் ஞாபகம் வந்து என்னோட எண்ணங்களை கட்டுப்படுத்தியது.... அதுக்கு பிறகு உன்னோட அட்மினிஸ்ரேஷன் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிச்சி..... நீ என்னோட வீட்டுக்கு வந்து எல்லாருடனும் சகஜமா பழகினப்போ எனக்கு ஏனோ ரொம்ப சந்தோஷமா இருக்கும்..... ஆனால் ஏன்னு என்னோட மனம் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்காது.... இப்படியே குழப்பத்தோடு நாட்கள் கடக்க நிஷா திருமணத்திற்கு நீ சாரியில் வந்தப்போ ஐயா டோட்டல் பிளாட்..... அப்பகூட உன்னை சைட் அடித்தேனே தவிர அதை நான் காதல் என்று உணரவில்லை.... உனக்கு அடிப்பட்டு ஆஸ்பிடலில் சேர்த்தப்போ தான் என்னோட லவ்வை ரியலைஸ் பண்ணேன்..... நான் உன்கிட்ட ஒன்று கேட்கனும்..... அந்த போனில் அப்படி என்ன இருக்கு.... எதுக்கு அடிப்பட்டு ஆஸ்பிடலில் இருந்தப்போ ரொம்ப அவசியமான பொருள் மாதிரி தேடுன??? அதில் அப்படி என்ன இருக்கு ஜில்லு??” என்று அஸ்வின் தன் நெடுநாள் சந்தேகத்தை வினவ சாரு அதில் சேமித்து வைத்திருந்த அவனது கல்லூரி கால உரையாடல்களை ஒலிக்க செய்தாள்......
அதை ஒவ்வொன்றாக கேட்ட அஸ்வினிற்கு அவளது காதலின் ஆழம் புரிந்தது... தன்னை அவள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உயிர் ஊன் மறந்து காதலித்ததை எண்ணி அவனது ஆண் மனம் கர்வம் கொண்டது.... தனக்கென தன்னவள் தன்னையே தியாகிக்க முயல்வது காதலினால் அன்றி வேறு எதனால்??? காதல் கொண்ட அவனது மனம் அவளிடம் மண்டியிட அதை உணர்ந்து அவளும் அவனை அணைத்துக்கொள்ள அவளை அள்ளி அணைத்தவாறு வீட்டினுள் சென்றான்..... வீட்டினுள் சென்றதும் தாழ்ப்பாள் போடப்பட்டு அவர்களது இல்லறம் இனிமையாய் ஆரம்பித்தது.......
அவர்களது இல்லறம் நல்லறமாய் மாறி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி இறைவனை பிரார்த்தித்து நாம் விடை பெறுவோம்....
Thank you sis...supr story anu sis