மண்ணின் காரிகையவளோ

Advertisement

அத்தியாயம் - 1

மேகம் மறைத்திருந்த வானத்தில் ஆதவன் தன் செங்கதிர்களைப் படரச் செய்ய இருள் விலகிக் காலைப்பொழுது அழகாகப் புலர்ந்தது...

அந்திவானமாய் வானம் சிவந்திருக்க பச்சை பசேலென்று நிலம் செழித்திருக்க கண்களைக் கொள்ளைக் கொள்ளும் மலர்களோ பூத்துக் குலுங்கிருக்க மெய்சிலிர்க்கும் அழகோடு காட்சியளித்தது கோவை மாவட்டத்தில் இருக்கும் அக்கரைசெங்கப்பள்ளி கிராமம்...

"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு... "

பூஜையறையில் சுப்ரபாதம் பாடியப்படியே தீபாராதனைக் காட்டிக் கொண்டிருந்தார் நாச்சியார்...

சரியாக அப்போது உள்ளே வந்த ஊர்காரர்கள் " ஐயா வணக்கமுங்க... " என்று வணங்க நிமிர்ந்துப் பார்த்தார் சுந்தரபாண்டியன்...

தான் படித்துக் கொண்டிருந்த தினசரி நாளிதழை கீழே வைத்துவிட்டுப் புன்னகை முகமாய் அவர் தலையசைக்க "ஐயா திருவிழாக்கு முதல் பத்திரிக்கை கொடுக்க வந்துருக்கோமுங்க அய்யா..." என்று வயதில் மூத்தவரொருவர் பணிவுடன் தெரிவிக்க தனது மனையாளை நோக்கினார் சுந்தரபாண்டியன்...
கணவரின் கண்ணசைவில் அவர் கூற வந்தததைப் புரிந்துக் கொண்ட நாச்சியார்

"அம்மாடி சவி.... " என்று குரல் கொடுக்க உள்ளிருந்து புள்ளிமானாய் துள்ளி குதித்து வந்தாள் அவள்...

பச்சை நிற தாவணியில் கழுத்தில் தங்கச்செயினும் காதில் குடைஜிமிக்கியும் கையில் பவளமோதிரமும் அணிந்து இடையை தாண்டியக் கூந்தலை தளரப் பின்னி முல்லைச்சரம் சூடியிருந்தாள்....

பிறை நெற்றி.... மீன் விழிகள்... எலுமிச்சை நிறம்... கூர் நாசி.... நிலவைப் போன்று ஜொலிக்கும் வட்ட முகமென அழகோவியமாய் ஓடி வந்தாள் சாம்பவி....

"சவிம்மா திருவிழாக்குப் பத்திரிக்கை கொடுக்க வந்துருக்காங்கடா... வாங்கிக்கோ... " என்று சுந்தரபாண்டியன் தெரிவிக்க தலையாட்டினாள் சாம்பவி...

வெள்ளித் தட்டில் பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து அதன் மேல் பத்திரிக்கையை வைத்து ஊர்காரர்கள் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டு தன் பாட்டி கொடுத்தப் பழங்கள் நிறைந்த தாம்பூலத்தை அவர்களுக்கு கொடுத்தாள் சாம்பவி....

"அய்யா அப்போ நாங்க கிளம்பட்டுமாங்க அய்யா... "
"என்ன அவசரம் இருந்து சாப்பிட்டுப் போங்க.... "சுந்தரபாண்டியன் கூற அதற்குள் அனைவருக்கும் இலைப் பரிமாற ஆரம்பித்துவிட்டார் நாச்சியார்...

வயிறார உண்டவர்கள் அவர்களிடம் விடைபெற்று வெளியே வர "ஏங்க அம்மன் பாதத்தில வைச்ச முதல் பத்திரிக்கைய சுந்தரபாண்டியன் அய்யாவுக்கு கொடுக்குறதே அவர கவுரப்படுத்ததானு சொன்னாங்க.... ஆனா அவர் வாங்காம ஒரு சின்னபொண்ணப் போய் வாங்க சொல்றாரு.... " கூட்டத்தில் ஒருவர் வினவ சட்டென்று அனைவரும் அவரை நோக்கினர்....

"என்னப்பா ஊருக்கு புதுசா .... பேரென்ன"

"ஆமாங்க வந்து இரண்டு வாரம் தான் ஆச்சு... பேரு மாரியப்பனுங்க " என்று பதிலளிக்க அனைவரும் சிரித்தனர்...

அவர்களின் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் மாரியப்பன் முழிக்க அங்கிருந்த பெரியவரொருவர் அதற்கான விளக்கமளித்தார்...

"இங்கப் பாரு மாரியப்பா... சுந்தரபாண்டியன் அய்யா இந்த ஊர் தலைவர் மட்டும் இல்ல மொத்த ஊருக்கும் காவல்தெய்வம்... நாங்க அவர அப்படி தான் நினைக்குறோம்... எங்கய்யாவுக்கு ஏத்தமாறியே தாயுள்ளம் கொண்டவங்க நாச்சியா அம்மா... அய்யாவுக்கு சிங்கக்குட்டிக மாதிரி அஞ்சு பேரப்பசங்க இருக்காங்க... ஆனா அய்யாவையே உரிச்சு வைச்சுப் பிறந்தவங்க தான் சாம்பவி பாப்பா... அய்யாவோட மறுவுருவம் அவுங்கதான்... அவுங்க பொறந்ததுக்கு அப்புறம் தான் இந்த ஊர் பூமியே செழிசுச்சு... அய்யா வீட்டுல மட்டுமில்ல இந்த ஊர்லயே சாம்பவி பாப்பா பேச்ச ஒத்த ஆள் மீற மாட்டாங்க... வெளில போய் இப்படி கேட்டுபுட்டு திரியாத... அடி பொலந்துருவானுங்க... " என்று விளக்கியப் பெரியவர் இறுதியில் எச்சரிக்க ஒருநிமிடம் மாரியப்பனின் உடல் பயத்தில் சிறிது நடுங்கியது...

தனது பாட்டனார் தந்தை என தலைமுறை தலைமுறையாய் அவ்வூரை அவர்கள் கட்டிக் காத்த ஒற்றுமையை சுந்தரபாண்டியனும் கட்டிக் காக்க அரசனுக்கு ஏத்த அரசியாய் அவருக்கு நல்ல மனையாளாக அன்பின் திருவுருவமாக கணவனுக்கு பக்கபலமாக இருக்கிறார் நாச்சியார்...

சுந்தரபாண்டியன் நாச்சியார் தம்பதியருக்கு மூன்று வாரிசுகள்... மூத்தவர் எழிலரசு... இரண்டாமவர் அன்புச்செல்வி... இளையவர் முத்தரசு...

எழிலரசு அன்னபூரணி தம்பதியருக்கு இரண்டு மகன்கள்... மூத்தவன் இளமாறன்... இருபத்தியாறு வயது இளம்காளை... பொறுமையும் பொறுப்பும் ஒருங்கே சேர்ந்த அன்பானவன்...

இரண்டு வருடங்கள் கழித்து பிறந்தவன் பாரிவேந்தன்... கோவமும் பிடிவாதமும் இருந்தாலும் அண்ணனின் பேச்சை மீறாத தம்பி.... இருவரும் தங்களது தாத்தா மற்றும் தந்தையைப் போலவே விவசாயமே உயிர்மூச்சென வாழ்பவர்கள்...

அன்புச்செல்வி சத்யமூர்த்தி தம்பதியருக்கும் இரண்டு மகன்கள்... மூத்தவன் விஷ்வேஷ்வரன்.... இருபத்தியேழு வயது சிங்கக்குட்டி... முரட்டுத்தனமும் கோவமும் ஒருங்கே சேர்ந்த நல்லவன்... தாத்தாவிடம் விவசாயம் கற்று அவரை போலவே மண்ணை நேசிப்பவன்...

மூன்று வருடங்கள் கழித்துப் பிறந்தவன் கவியரசன்.... கல்வியின் மீது பற்றுக் கொண்டதனால் அதனைக் கற்றுத் தரும் பேராசிரியராக கல்லூரியில் பணியாற்றுகிறான்... தாயைப் போலவே அன்பும் அடக்கமும் பண்பும் ஒருங்கே சேர்ந்தவன்...

முத்தரசு மீனாட்சி தம்பதியருக்கு இரண்டு வாரிசுகள்... மூத்தவன் அன்புசெழியன்... இருபத்திநான்கு வயது சீறும்காளை... தாத்தா பெரியப்பா தந்தை அண்ணன்மார்களைப் பார்த்து வளர்ந்தவனுக்கும் விவசாயமே உயிர்மூச்சு...

அவனுக்கு அடுத்து நான்கு வருடங்கள் கழித்து மகாலட்சுமியாய் பிறந்தவள் சாம்பவி... குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு... பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவளை ஊரே கொண்டாட மொத்த ஊரின் செல்லப்பிள்ளை...

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்... தாத்தாவிடமிருந்து ஆளுமையும் பாட்டியிடமிருந்து அன்பும் தந்தையிடமிருந்து அமைதியும் தாயிடமிருந்து அடக்கமும் ஒருங்கே பெற்ற சேட்டைக்காரி...

**************
ஊர்க்காரர்கள் சென்றதும் துள்ளிக் குதித்து வெளியில் ஓடிய சாம்பவியை முறைத்த மீனாட்சி " சவி காலைலயே சாப்பிடாம கொள்ளாம எங்க கிளம்புற... " என்று பொய்க்கோவத்துடன் வினவினார்...

"ம்மா நான் வயலுக்கு போயிட்டு வரேன்ம்மா..... எப்படியும் எனக்கும் சேர்த்து தான் அத்தை விஷ்வா மாமாகிட்ட சாப்பாடுக் கொடுத்து விட்டுறுப்பாங்க.... நான் மாமாகூட சாப்பிட்டுகிறேன்... " என்று பதிலளித்தவள் அதற்கு மேல் நிற்காமல் ஓடிவிட பெருமூச்சு விட்டார் மீனாட்சி...

"விடு மீனா விஷ்வாவ தான பாக்கப் போறா.... அன்பு விஷ்வாவுக்கு சாப்பாடு கொடுத்து விடுறாலோ இல்லயோ மருமகளுக்கு மறக்காம கொடுத்து விட்றுவா... இவளும் அத்தை கையால சாப்பிட்டே பழகிட்டா... " பேத்திக்காக மருமகளை நாச்சியார் சமாதானம் செய்தும் மீனாட்சியின் முகம் வாடியே இருந்தது...

"இல்லத்தை நம்ம புள்ளைங்க மனசுல ஒன்னும் இல்லனாலும் சுத்தி இருக்குறவங்க வாய் சும்மாவா இருக்கும்.... கண்ணு மூக்கு வாய் வைச்சு பேசுனா நாளைக்கு அவ வாழ்க்கை என்னாகுறது அத்தை... " தாயாய் அவர் மனம் பயம்கொள்ள அதைப் புரிந்துக் கொண்டார் நாச்சியார்...

"அட ராசாத்தி இதை நினைச்சு தான் விசனப்படுறியா... என் பேரனையும் பேத்தியையும் யாராவது தப்பா பேசுவாங்களா என்ன...அப்படியே பேசுனா தான் என்ன... ஊரையே கூப்பிட்டு ஜாம் ஜாம்னு திருவிழா மாதிரி கல்யாணம் செஞ்சு வைச்சு பேசுற வாய அடைச்சுற மாட்டேன்.... சவி பொறந்தப்பவே என்னோட மருமகள்னு அன்பு சொல்லிட்டா... அப்பறம் என்னமா... " என்று வாஞ்சையாய் கேட்க மாமியாராக அல்லாமல் இன்னொரு தாயாக இருக்கும் அத்தையின் மடியில் படுத்துக் கொண்டார் மீனாட்சி...

"விஷ்வாவுக்கும் சவிக்கும் கல்யாணம் ஆனா என்ன விட சந்தோஷப்படுற ஆள் யாராவது இருப்பாங்களா அத்த... ஆனா எனக்கு இப்போலாம் ஒரு கனவு வருது அத்த... நம்ம சவி நம்மள விட்டு தூரமா போகுற மாதிரி... யாரோ ஒரு பையன் வந்து அவள நம்மகிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போற மாதிரியே கனவு வருது அத்தை... " என்று கண்கலங்கிய மருமகளின் தலையை வருடினார் நாச்சியார்...

"மீனா இதுக்கெல்லாம் விசனப்படலாமா... சாம்பவி இந்த வீட்டு மகாலட்சுமி.... அவள யாராலயும் நம்மகிட்ட இருந்துப் பிரிக்க முடியாது... இதே ஊர்ல ஊரே மெச்சுற அளவுக்கு என் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் நடக்கும்.... நீ மனசு நோகாம சந்தோஷமா இரு தாயி... எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.... " தேற்றிய அத்தையை மீனாட்சி பாசமாக கட்டிக் கொள்ள மருமகளை அணைத்துக் கொண்டார் நாச்சியார்....

**************
இளம் வெயிலில் ஆண்களும் பெண்களும் வரப்பு வெட்டிக் கொண்டிருந்தனர்... அவர்களுக்கு நடுவில் மடித்துக் கட்டிய வேஷ்டியும் வியர்வையில் நனைந்த பனியனுமாய் வரப்பு வெட்டிக் கொண்டிருந்தவனின் அகண்ட மார்பும் முறுக்கேறிய புஜமும் அவனின் கம்பீரத்தைப் பறைசாற்ற மாநிறத்தில் கலையாக இருந்தான் விஷ்வேஷ்வரன்....

அங்கிருந்த இளம்பெண்களின் கண்கள் மொத்தமும் அவனைச் சுற்றியே மொய்த்துக் கொண்டிருக்க ஆணவனின் கவனமோ நிலத்தில் மட்டுமே இருந்தது...

"என்ன மச்சான் இன்னும் எந்தங்கச்சிய காணோம்.... இந்த அதிசயத்துல ஒருவேளை மழை வந்துருமோ இன்னைக்கு..." ஆச்சரியமாக தன் அத்தை மகனிடம் பாரிவேந்தன் கூற அவனை முறைத்தான் விஷ்வா...

"எலேய் வேலையப் பாருலே... இன்னும் அஞ்சு நிமிசத்துக்குள்ள வேல முடியல பேசுறதுக்கு குரவளை இருக்காது ஜாக்கிரதை.... " விஷ்வா மிரட்ட அதைக் கண்ட இளமாறனும் அன்புசெழியனும் நகைத்தனர்...

சரியாக அந்நேரம் சாம்பவி வயலுக்கு வர "அம்மாடியோவ் ஆயிசு நூறு என்ற தங்கச்சிக்கு... " என்று பாரி சிரிக்க மற்ற மூவரும் நிமிர்ந்து பார்த்தனர்....

தங்கையைப் பற்றி அறிந்ததால் அண்ணன்மார்கள் மூவரும் தங்களது வேலையைத் தொடர கைகளைக் கழுவிக் கொண்டு அவளருகில் சென்றான் விஷ்வா...

தன்னை நோக்கி வரும் விஷ்வாவைப் பார்த்து சவி சிரிக்க " என்ன புள்ள அதிசயமா தாவணிலாம் கட்டிருக்க... அம்முச்சி அத்தைங்க எல்லாம் கட்ட சொன்னாலும் நீ மாட்டேனு வீம்பு பண்ணுவியே... " ஆச்சரியமாக விஷ்வா வினவ குறும்புடன் அவனை நோக்கினாள் சாம்பவி...

"அதுவா மாமா... அது வந்து மாமா... சொல்லமாட்டேன் மாமா... " என்று குறும்பாய் கூறியவள் குடுகுடுவென்று தன் அண்ணன்களிடம் சென்று விட சிரித்துக் கொண்டே கைகளைக் கழுவி விட்டு தனது அன்னை கொடுத்து விட்ட உணவு வாலியை எடுத்தான் விஷ்வேஷ்வரன்...

அங்கிருந்த அனைவரிடமும் பேசி முடித்து சவி ஓடி வர " என்ன புள்ள எல்லார்கிட்டயும் பேசி முடிச்சுட்டியா.. எப்படி தான் எல்லா நேரமும் வாயடிக்க முடியுதோ... " பெருமூச்சு விட்டவன் அவளுக்கு ஊட்டிவிட நாக்கை துருத்திக் காட்டிவிட்டு ஆ காட்டினாள் சாம்பவி...

சிறுவயதில் சவி சாப்பிடாமல் அடம்பிடிக்கும் போதெல்லாம் அவளுக்கு வேடிக்கை காட்டிக் கொஞ்சி கொஞ்சி விஷ்வா ஊட்டிவிட அதுவே காலப்போக்கில் பழக்கமாகிவிட்டது... எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் சவி விஷ்வாவின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் கேட்டுவிடுவாள்...

தன்னையே சுற்றி சுற்றி வரும் தன் அத்தை மகளை மிகவும் பிடித்திருந்தாலும் படிக்கும் சிறுபெண்ணின் மனதில் வேறு எந்த எண்ணமும் வந்துவிடக் கூடாதென்று தன் நேசத்தை வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளேப் பூட்டிவைத்துள்ளான் விஷ்வேஷ்வரன்....

***************
அவசரச் சிகிச்சைப் பிரிவின் வெளியே தவித்து நின்று கொண்டிருந்தார் அந்த பெண்மணி.... கைகளிலும் கழுத்திலும் காதிலும் மின்னிய வைரம் அவரின் செல்வ நிலையை உணர்த்த கண்களில் நிற்காமல் வழிந்தோடும் நீரும் சோகமே வடிவாய் அவர் நிற்கும் தோற்றமும் அவரின் நிலையை எடுத்துரைத்தது... அவருக்கு துணையாக நின்றுக் கொண்டிருந்த மகனும் மருமகளும் ஆறுதல் மொழிந்தும் அவர் நிலை மாறவில்லை...

சட்டென்று கதவு திறக்கும் சத்தம் கேட்க நிமிர்ந்துப் பார்த்த பெண்மணி சட்டென்று மருத்துவரின் அருகில் சென்று தவிப்புடன் நோக்க "கவலைப்படாதீங்கம்மா உங்க கணவர் இப்போ அபாயக் கட்டத்தை தாண்டிட்டார்... அவர் இதயத்துல இருந்த புல்லட்ட எடுத்துட்டோம்... இன்னும் நாலு மணி நேரம் அப்சர்வேஷன்ல இருக்கனும்... அதுக்கப்பறம் நீங்க போய் பாருங்க.... " என்றதும் அவர் அவனின் காலில் விழப் போகச் சட்டென்று அவரைப் பிடித்து நிறுத்தினான் ஸ்ரீதரன்...

"என்னம்மா நீங்க... என் அம்மா வயசு உங்களுக்கு நீங்க போய் என் கால்ல விழுந்துட்டு.... " சங்கடமாய் கூறியவனிடம் கை எடுத்து கும்பிட்டார் மரகதம் மினிஸ்டர் அனந்தராஜின் மனைவி....

"தம்பி நீங்க காப்பாத்துனது அவர் உயிர மட்டுமில்ல என் உயிரையும்... அவரில்லாம என்னால ஒருநிமிசம் கூட வாழமுடியாது... " என்று அவர் கலங்கியதிலேயே அவரின் கணவரின் மீதுக் கொண்ட காதல் அனைவருக்கும் புரிந்தது...

"உங்க காதலும் உங்க அன்பும் தான் சாருக்கு பக்கபலமாக இருந்து அவர காப்பாத்திருக்கும்மா... " புன்னகையுடன் கூறியவன் மற்ற நோயாளிகளைப் பார்த்துவிட்டு தனது அறைக்கு வந்தமர்ந்தான் ஸ்ரீதரன்...

அந்த பெண்மணியின் கண்களில் தெரிந்த நேசத்தைப் பார்த்தவனுக்கு தன்னையும் இவ்வாறு நேசிக்கும் மனைவி வேண்டும் என்ற ஆசை தோன்ற வழக்கம் போல் மனதில் தோன்றிய யாரென்று அறியாத அந்தப் பெண்ணை வரைந்தான் ஸ்ரீதரன்...

தொடரும்

வணக்கம் கண்மணிகளே❤❣... புதிய கதையின் ஆரம்பம் எப்படி இருக்குனு சொல்லுங்கோ.... தங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு பாசத்தோடு கேட்டுக் கொள்கிறேன்❣❣...
படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணீங்கனா என் லிட்டில் ஹார்ட் ஹேப்பி ஆகிரும்
டாட்டா கண்மணிகளே
 

Attachments

  • 0001-617787099_20210430_205651_0000.png
    0001-617787099_20210430_205651_0000.png
    2.5 MB · Views: 2

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மண்ணின்
காரிகையவளோ"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கனிமொழி டியர்
 
Last edited:
:D :p :D
உங்களுடைய "மண்ணின்
காரிகையவளோ"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கனிமொழி டியர்
அழகான விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் பானுமதி அக்கா ❤❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top