“பொன்னி உன் மேல்
பொங்கிடும் பாசத்தை
பொதித்தேன்
என் நெஞ்சில்”
“போகிற வழியிலே
பொன்னி
நீ
பார்க்கையிலே
போனதடி
என் உயிர்
உன் ஒற்றை
கண்ச்சிமிட்டலில்”
“அழகோவியமாய்
அகம் பறித்தவளே
நான்
ஆனந்தம் அடைந்திட
ஒரு முறை
அழைத்திடடி
மாமா என்று
உன் திருவாய்
மலர்ந்து”
“ஆயுள் முழுதும்
நீ வேண்டுமடி
அன்னையாய்
மடி தாங்கிட
மகளாய் செல்லசண்டை
போட்டிட
மனைவியாய்
மகிழ்ச்சியின் மறுஉருவாய்
பொன்னி நீ
என் வந்தால்
மாறிடுமே
என் வாழ்வு
வறண்ட பூமியில்
வந்த
நதி தந்த செழிப்பைப்போல”
“உன் சிறுசிறு
செய்கைகளையும்
சிதையாமல்
சேமிக்கிறதே
இதயம்
சிந்தை முழுதும் நிறைந்தவளே
என்னை
பொன்னி உந்தன்
பித்தன் ஆக்கினாயோ”
“பித்தனாய்
போனதும்
பிடித்திருப்பது
உன் மேல் பித்து
எனில்
பெருமையோடே சொல்கிறேனடி
நான்
பொன்னியின் பித்தன் என்று”