பெண்ணே

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
“பெண்ணே

உன் வாழ்வில்

சண்டைகள்

ஏராளம்

சஞ்சலங்கள்

ஏராளம்

சச்சரவுகள் இங்கு

தாராளம்

இருந்தும்

பெண்ணே

இமயமலையின்

மிடுக்கோடு

எழுந்து நில்

இப்புவியில்”



“பாசமும்

பரிவும் கொண்ட

பனித்துளி தான்

பெண்ணினம்

இருந்தும்

பனிப்புயல் வந்தால்

பரிதவிக்கும் பாரதம்”



“பிரச்சனை

பல்லாயிரம்

வந்தாலும்

பெண்ணே

உன்னால்

போராட முடியுமே”



“பிரசவத்தின்

வலியில்

மரணவாயில் வென்று

வரும்

உன்முன்

எந்த வெஞ்சினமும்

வெல்லாது கண்ணே”



“கண்ணோரம் வழியும்

கண்ணீரை துடைத்தெறி

எரியும் சுடர் நீ

வெளிச்சம் தருவதும்

நீயே

கொளுத்திடும் தீக்கங்கும்

நீயே

ஆதரவு

உன்னிடம் நாடினால்

எரியும் சுடராய்

அவர்கள்

வாழ்வில் ஒளி ஏற்றிடு

ஏதேனும்

இம்சை செய்தால்

தீக்கங்காய் மாறி

இல்லாமல் செய்திடு

அவர்களை”



“பிரம்மனின்

படைப்பில்

பெரும் சக்தி நீ

ஆக்கும் திறனும்

அழிக்கும் திறனும்

திறம்பட பெற்ற

தேவதை நீ

தேவை அறிந்து

செயல்படுவதால் தான்

நீ

தேவதை ஆனாயோ”



“பெண்ணே

வீழும் வரை

போராடு

வீழ்ந்தாலும்

வேராய் மாறிடு

உன்னில் உதிக்கும்

ஒரு மரக்கிளை

மாற்றிடும்

உலகை”



“அன்னையாய்

நீ

அன்பின் அடையாளம்

மனைவியாய்

நீ

அழகின் அடையாளம்

மகளாய்

நீ

மகிழ்ச்சியின் அடையாளம்”



“உன்

பரிணாமங்களின்

பங்களிப்பில் தான்

பதமாய் இயங்குகிறது

மனித இனம்”



“இனியொரு

பிறப்பு இருப்பின்

பெண்ணே

உன் மலர்ப்பாதம்

படியும்

மண்ணாய்

நான் மாறும்

வரம் வேண்டும்”

 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
// இனியொரு
பிறப்பு இருப்பின்
பெண்ணே
உன் மலர்ப்பாதம்
படியும்
மண்ணாய்
நான் மாறும்
வரம் வேண்டும்


:love::love: ada ada ada super maa.....
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
// இனியொரு
பிறப்பு இருப்பின்
பெண்ணே
உன் மலர்ப்பாதம்
படியும்
மண்ணாய்
நான் மாறும்
வரம் வேண்டும்


:love::love: ada ada ada super maa.....
thank you
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top