"உலகிற்கு
உறுதுணையாய்
வார்த்தையில்
வடித்த சிற்பமாய்
நீ வந்திட
வாசிக்கும் வரம் கொண்டேன்
உன்னை"
"கதையாய்
நீ வந்தாய்
கற்பனை பொழுதிலே
கவிதையாய்
நீ வந்தாய்
காதல் பொழுதிலே"
"உன்னால்
உறக்கம் கொள்கிறேன்
சிலநேரம்
உள்ளம் மயங்குகிறேன்
பல நேரம்"
"பகுத்தறிவு
நீ சொல்ல
உன் பரிணாமங்களில்
சிக்கி பரிதவிக்கிறேன்"
"அழும் வேளையில்
ஆறுதல் வருகிறது
உன் அருகாமையில்"
"என் அறியாமை
திரை விலகுகிறது
உன் திறமையான படைப்புகளால்"
"புத்தக புதுமையே
புதிது புதிதாய்
உன் பொலிவு அதிகரிக்கிறது
ஒவ்வொரு பொழுதிலும்
இருந்தும்
அலுக்கவில்லை நீ எனக்கு"
"புத்தக புதுமையே
உன்னுள்ளே இழுக்கும்
புதைகுழியோ நீ?
உன்னுள் புதைந்தும் கூட
பல புதுமை கண்டேன்
உன்னுள் புதைவது கூட
பேரின்பமே"
"பொக்கிஷம் நீ
அருகில் இருந்தால்
பொறுமை தான் வளர்கிறது
புகழும் தான் கூடுகிறது"
"புத்தக புதுமையே
சுகமாய் புதைகிறேன்
உன்னுள் நானே"
உறுதுணையாய்
வார்த்தையில்
வடித்த சிற்பமாய்
நீ வந்திட
வாசிக்கும் வரம் கொண்டேன்
உன்னை"
"கதையாய்
நீ வந்தாய்
கற்பனை பொழுதிலே
கவிதையாய்
நீ வந்தாய்
காதல் பொழுதிலே"
"உன்னால்
உறக்கம் கொள்கிறேன்
சிலநேரம்
உள்ளம் மயங்குகிறேன்
பல நேரம்"
"பகுத்தறிவு
நீ சொல்ல
உன் பரிணாமங்களில்
சிக்கி பரிதவிக்கிறேன்"
"அழும் வேளையில்
ஆறுதல் வருகிறது
உன் அருகாமையில்"
"என் அறியாமை
திரை விலகுகிறது
உன் திறமையான படைப்புகளால்"
"புத்தக புதுமையே
புதிது புதிதாய்
உன் பொலிவு அதிகரிக்கிறது
ஒவ்வொரு பொழுதிலும்
இருந்தும்
அலுக்கவில்லை நீ எனக்கு"
"புத்தக புதுமையே
உன்னுள்ளே இழுக்கும்
புதைகுழியோ நீ?
உன்னுள் புதைந்தும் கூட
பல புதுமை கண்டேன்
உன்னுள் புதைவது கூட
பேரின்பமே"
"பொக்கிஷம் நீ
அருகில் இருந்தால்
பொறுமை தான் வளர்கிறது
புகழும் தான் கூடுகிறது"
"புத்தக புதுமையே
சுகமாய் புதைகிறேன்
உன்னுள் நானே"
Last edited: