புது வரவு

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"பத்து மாதம்
பத்திரமாய் இருந்த
இடம் விட்டு பாய்ந்து ஓடி வருகிறது
பச்சிளம் குழந்தை
பாசம் நிறைந்த சொந்தம் பார்க்க"

"இளவேனில் வெயில் பட்டால் கூட
ஏதேனும் ஆகிடுமோ என
அஞ்சும் அன்னையவள் கையில்
அழகிய பொம்மையாய் சிரிக்கையில்
ஜெயித்துவிட்ட உணர்வு வாழ்வில்"

"புது வரவு அதை
கரங்களில் அள்ளுகையில்
ஆசைதான் கூடுகிறது
ஆயுள் முழுதும் இந்த வரம் கிடைத்தால் என்ன என்று?
அவன் தந்தைக்கு"

"உறவுகள் ஒன்று கூடி
குழந்தை முகம் பார்த்திட
ஓடி வருகையில் தான்
உறக்கம் கொள்கிறான் அவன்
ஓய்யாரமாய் தொட்டிலதில்"

"வகைவகையான
சீர்களோடு சிறப்பாய்
சின்னச்சிட்டை வரவேற்க
சொந்தங்கள் தான் படையெடுக்க
புது வரவின் மகிழ்ச்சியில்
பூரித்து நிற்கிறது குடும்பம்"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top