பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 105. நல்குரவு, குறள் எண்: 1046 & 1049.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

பொருள் :- நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
 

Sasideera

Well-Known Member
குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.


பொருள் :- யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

வறுமையை விட கொடியது வறுமையே இது இன்று நாளை என எப்பொழுதும் வரும் வந்தால் சேர்த்த பொருளும் திட சிந்தனையும் கெடும். நற்குடியில் பிறந்தவரும் தன்நிலை இழக்கச் செய்யும் நல்குரவு வந்தால் தாயும் அந்நியமாக போவாள். நெருப்பிலும் தூங்கலாம் வறுமையில் சாத்தியம் இல்லை எனவே நல்குரவு வராதபடி காக்கவேண்டும். தூய்மையற்ற துறவி உப்புக்கும் காடிக்கும் வழியின்றியே துறவை மேற்கொள்கிறான்.
 

Manimegalai

Well-Known Member
குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

பொருள் :- நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
உண்மை.
 

fathima.ar

Well-Known Member
யாருக்கு சொல்லப்படுகிறது மட்டுமில்லை
யாரு சொல்றாங்க என்பதும் முக்கியம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top