பிரிவு : பொருட்பால், இயல் : அமைச்சியல், அதிகாரம் : 68. வினைசெயல்வகை, குறள் எண்: 675 & 678.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 675:- பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

பொருள் :- வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 678:- வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

பொருள் :- ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
 

Sasideera

Well-Known Member
வினை செயல்வகை
வினைத்திட்பம் உடையவர், ஆராய்ந்து ஓர்ந்து தெளிந்து, செயலை முடிக்கும் வழி கூறுவது இத்தொகுப்பு. செயலின் நோக்கத்தை அறிந்து திறம்படச் செய்யும் 'வினை செயல்வகை' எல்லாருக்கும் பொது. திண்ணியராகிய யாவரும் - குடிகள், அரசு, அமைச்சர் வினைகளைச் செய்யும் திறம் கூறுவது.
விரைந்து செய்யத்தக்கவை, காலம் தாழ்த்திச் செய்யலாம் எனப் பிரித்து அதன்படி செய்க; ஆராய்ந்து முடிவு எடுத்தபின் காலத்தாழ்ச்சியின்றி செய்யாவிட்டால் திட்டத்திற்கு தீங்கு நேரலாம்; எப்படி நெருப்பை முழுமையாக அணைக்காவிட்டால் தீமை விளைவிக்குமோ அவ்விதம் முற்றாக முடிக்காத செயல்களும் இழப்புகளை உண்டாக்கும். நோக்கம், தடைகள், பயன்கள் கருதி செய். தொழிலின் நுட்பம் யாருக்குத் தெரியுமோ அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதனைச் செய்யத் தொடங்கு. யானையை வைத்து யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயலைக் கொண்டு வேறு செயலையும் முடிப்பது செயல்திறனை மிகுவிக்கும். நண்பர்களுக்கு நன்மை செய்வதுடன், ஒதுங்கி இருப்போருடன் கூட்டு வைத்துக் கொண்டு உன் வலிமையைக் கூட்டிக்கொள். வலியாருடன் அமைதி வழியில் போவது வரவேற்கத்தக்கது. இவை இவ்வதிகாரப் பாடல்கள் கூறும் ஆலோசனைகள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top