பிரிவு : இன்பத்துப்பால், இயல் : களவியல், அதிகாரம் : 116. பிரிவாற்றாமை, குறள் எண்: 1151 & 1158.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1151:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

பொருள் :-
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.
 

Sasideera

Well-Known Member
குறள் 1158:
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

பொருள் :-
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

இல்வாழ்க்கையில் கணவனும் மனைவியாக நிலத்தொடு நீரியைந்தன்ன ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள். அதுபொழுது தொழில்முறை காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. நெடுந்தொலைவு செல்ல வேண்டுமாதலால் பிரிவுக்காலமும் நெடிது ஆகிறது. தலைவிக்குப் பிரிவு தாங்கமுடியாததாகி விடுகிறது. பிரிவு இருக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தும், காதல் கொண்டவரக்குப் பிரிவு நிகழும்பொழுது, ஆறுதல் கொள்வது கடினம் போலும் என்கிறாள் தலைவி.

பிரிந்து போகமாட்டாய் என்றால் என்னிடம் சொல் பிரிவதாக இருந்தால் அதை தாங்குபவர் இடத்தில் சொல். இன்பம் தந்த அதே கண் பிரிவை நினைத்து துன்பத்தை தருகிறது. அறிவு நிறைந்தவருக்கும் அரிது பிரிவு என்ற உண்மையை கண்டு தன்னை தேற்றிக்கொள்ள. அஞ்சாதே என்று ஆறுதல் சொல்லி பிரிந்தால் துன்பப்படுதல் தவறாகுமா?. பிரிவு உறவை முறிக்கும். பிரிய முடியும் என்றால் நன்மை செய்வது சாத்தியம் இல்லை. நடக்கும் செயல்களுக்கு அஞ்சி துறந்தவர் கைகளும் இறையை இறஞ்சும் என்றால் அது எப்படி உண்மையாகும். மாறுபட்ட மனிதர்களுடன் வாழ்வதை விட துன்பமானது இனிமையான துணையை பிரிந்து வாழ்வது. விலகி இருப்பதால் சுட்டெரிக்கும் காமத்தீயே தீயை விட கொடியது. அரிதான பிரிவை கடந்து அதன்பின் இனிதாக வாழ்பவரும் உண்டு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top