அதிகார விளக்கம்:
காதலர்களின் மறைவொழுக்கம் ஊரார்க்குத் தெரிந்து அலராகப் பரவியது. அலர்என்பது காதலனும் காதலியும் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டு நாணத்தைத் துறந்தவர்களாக இருப்பதை ஊரார் பேசுவது. அலரறிவுறுத்தல் என்பது அப்படி ஊர் பேசுவதைக் காதலர்களுக்குத் தெரிவிப்பது. காமத்துக்கு எதிராகப் பேசப்படும் கௌவை இவர்கள் காதலை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. அலரே தங்கள் காதலை இணைக்கப் போவது என்று காதலர் உள்ளூர மகிழவும் செய்கிறார்கள். அலர் நன்மை செய்ய வந்தது என்றெண்ணினர். அதுவே பின்வரும் இணைந்து வாழும் மண வாழ்க்கைக்கு வழி வகுத்தது என்ற குறிப்புடன் அதிகாரம் முடிகிறது.
பலர் பேசுவதால் காதல் வாழும் என ஆருயிர் அறிவது ஒரு பாக்கியம். இறை உணர்ந்தவன் என்பவனும் காதல் வசப்பட்டவன் என்பதால் உயிருக்கு இது இன்பம். மலர் போன்ற கண்ணின் அருமை அறியாமல் வதந்தி பேசும் இந்த ஊர். ஊரார் சொல்படி காதல் ஈடாகட்டும் அவர்களே காதலாகிய இறை பற்றை வளர்க்கும் தாய் போன்றவர்கள். மகிழ்ந்து இருக்க மது தேடுவது போல் காமம் தோன்ற இன்பம் உண்டாகிறது. சும்மா ஒரு நாள் பார்த்ததற்கு கிராணம் போல் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஊரார் பேச்சி எருவாக அம்மாவின் பேச்சி நீராக காதல் பயிர் வளரந்தது. நெய் கொண்டு நெருப்பை அணைப்பது போன்றது காதலை பழித்து அழிக்க நினைப்பது. வதந்திக்கு முற்றாய் பிரிவதை தவிர்த்தார். இவ்வூர் மக்கள் வதந்தியால் என் காதலர் என்னை வந்தடைந்தார்.