நீயாக நான், நானாக நீ 2

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...:giggle::giggle::giggle: வாசகர் விருப்பம்...;););) திங்கள் முதல் சனி வரை டெய்லி எபி உண்டு...:giggle::giggle::giggle: (மை மைண்ட்வாய்ஸ்... கதைய முடிச்சுட்டங்கிறதால தான டெய்லி எபி போடுற...:LOL::ROFLMAO::LOL:) தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க பிரெண்ட்ஸ்...:love::love::love:

eiKIJVX20030.jpg

அத்தியாயம் 2

பூமிகாவிற்கு அன்றைய நாள் சற்று மோசமாகத் தான் சென்றது. ஆகாஷை வம்பிழுத்துவிட்டு சென்றதால் அலுவலகத்திற்கு தாமதமாகவே சென்றாள். என்றும் அதை பெரிதாக கண்டுகொள்ளாத மேலாளர் அன்று என்ன கடுப்பில் இருந்தாரோ, அறிவுரை என்ற பெயரில் காய்ச்சி எடுத்து விட்டார் அவளை.

அவர் திட்டியதில் கடுப்புடன் இருந்த பூமி, பயிற்சி வகுப்பில் கவனமில்லாமல் சொதப்பி பயிற்சியாளரிடமும் திட்டு வாங்கினாள்.

அந்த மொத்த கோபமும் ஆகாஷின் மேல் திரும்பியது. ‘அடேய் கருவாயா… உன்னால இங்க எல்லாருக்கிட்டேயும் நான் திட்டு வாங்கிட்டு இருக்கேன்…’ என்று மனதினுள் புலம்ப, அவளின் நியாயமான மனச்சாட்சியோ, ‘நீ அவன வம்பிழுத்து லேட்டாக்குனதுக்கு அவன் என்ன பண்ணுவான்…’ என்று அவளின் தவறை சுட்டிக் காட்டியது.

அவளின் நிலை உணர்ந்த அவளின் தோழி ரூபா, அவளை கேன்டீனிற்கு அழைத்துச் சென்றாள். அங்கு இவர்களின் மற்ற தோழமைகள் அமர்ந்திருக்க, அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டனர். பேச்சு அவர்களின் திருமணத்தில் வந்து நின்றது.

அவர்களுள் திருமணம் நிச்சயமானவர்கள் இருவர் – பூமிகாவும் சினேகாவும். சினேகா, கோவையை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியின் ஒரே மகள். தன் வியாபார லாபத்திற்கான வாய்ப்பாகவே மகளின் திருமணத்தை நிச்சயத்திருந்தார் அந்த முக்கிய புள்ளி. மகளின் மனமோ அவளின் சம்மதமோ அவருக்கு தேவையேயில்லை.

சினேகா அவளின் நிலையை எண்ணி புலம்பிக் கொண்டிருக்க, மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரில் அமர்ந்திருந்த ஆண்களின் குழுவைப் பார்த்த பூமி, “ஹ்ம்ம் பொறந்தா ஆம்பளையா பொறக்கணும்… அவங்கள பாரு எவ்ளோ ஜாலியா இருக்காங்க… கல்யாணத்துக்கு கூட அவங்க சம்மதம் கேப்பாங்க… நம்மள ஒரு பொருட்டா கூட மதிக்க மாட்டாங்க…” என்றாள் சோர்வாக. தன் தந்தை தன்னிடம் சம்மதம் கேட்காமல், ஆகாஷிடம் மட்டும் சம்மதம் கேட்ட கடுப்பு இன்னும் அவளுள் உறுத்திக் கொண்டே இருந்தது.

*****

இங்கு ஆகாஷின் நிலையோ இதைக் காட்டிலும் கொடுமையாக இருந்தது. மேலாளரின் அறையிலிருந்து தொங்கிப் போன முகத்துடன் வந்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்த அவனின் நண்பன் அசோக், “என்ன மச்சான் இன்னிக்கு நீ மாட்டிகிட்டியா அந்த குடுமி மண்டையன் கிட்ட… என்னவாம் அவனுக்கு…” என்றான்.

“காலைலேயே வந்து உசுர வாங்குறான் டா… எப்பயாச்சும் ஆஃபிஸ் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டியது… அன்னைக்கு மாட்டுறவங்கள எல்லாம் வச்சு செய்ய வேண்டியது…”

“நீ எதுக்கு டா வான்டட்டா போய் அவன்கிட்ட சிக்குற…”

“ஒரு டவுட் இருந்துச்சுன்னு கேக்க போனேன் டா… அந்த ஆளு என்ன நிலைமைல இருக்கான்னு தெரியாம போனது என் தப்பு தான் டா… இந்நேரம் என் இடத்துல ஒரு பொண்ணு இருந்துருந்தா வழிஞ்சுட்டு வந்து ஹெல்ப் பண்ணிருப்பான்…” என்று கூறியவன், சில கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் அந்த குடுமி மண்டையனை (அந்த மேலாளர், ஃபேஷன் என்ற பெயரில் நீளமாக முடி வளர்த்து குடுமி போட்டிருப்பார்…) அர்ச்சித்த பின்பே ஓய்ந்தான்.

“உன் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் டா… உடனே மும்பைக்கு போய் ஒரு ஆப்பரேஷன் பண்ணிக்கோ…” என்றான் கண்ணடித்து.

“அடிங்…” என்று ஓடிய நண்பனை அடிக்க துரத்தினான் கதிர்.

*****

பயிற்சியில் கவனமின்மை காரணமாக, எப்போதும் செய்வதைக் காட்டிலும் அதிக பணியை பயிற்சியாளர் பூமிக்கு கொடுத்திருந்தார். அதை முடித்து கிளம்பவே 8 மணி ஆனது. மேலும் அவளின் பொறுமையை சோதிக்கவென அவர்களின் வண்டி போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அந்த எரிச்சலில் வீட்டிற்கு வந்தவள், அங்கு கண்டது நடு வீட்டில், தன் சோமபானத்தையும் அதற்கு தோதான சிற்றுண்டியையும் கடைபரப்பி வைத்திருந்த ஆகாஷைத் தான்.

மேலாளர், பயிற்சியாளர், வண்டி ஓட்டுனர் ஆகியோரிடம் காட்ட முடியாது தேக்கி வைத்த கோபத்தையெல்லாம் ஆகாஷிடம் காட்டினாள்.

அவள் திட்டிக் கொண்டிருக்க, ஆகாஷோ அதையெல்லாம் உணரும் நிலையிலேயே இல்லை. அவன் அவனின் பிரத்யேக உலகத்திற்குள் சென்று விட்டான்.

சற்று நேரம் திட்டியவள், அவன் அவளை மனிதியாக (!!!) கூட மதிக்காமல் இருப்பதைக் கண்டு, தரையில் காலை உதைத்தவள் தன்னறைக்கு சென்று விட்டாள்.

அவள் சென்றதை அறிந்தவன், “ஷப்பா என்னமா நடிக்க வேண்டியதா இருக்கு… நல்ல வேள அந்த வெள்ளெலி இதோட நிறுத்துனா… நான் குடிக்காம இருக்கேன்னு தெரிஞ்சுது இன்னும் பேசி என் காத டேமேஜ் பண்ணியிருப்பா… ச்சே அவளால வாய்க்குள்ள ஊத்த வேண்டியத வெளிய தெளிச்சு, குடிகாரன் எஃபெக்ட் கொண்டுவரதுக்குள்ள...” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தவனின் எதிரில் நிழலாட திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்தான்.

அங்கு தன் முட்டைகண்ணை இன்னும் முட்டையாக விரித்தபடி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவனின் முறைப்பெண்.

“இப்போ தெளிவா தான இருக்க…” என்று பல்லைக் கடித்தாள் பூமி.

ஆகாஷ் தான் எந்த பக்கம் தலையாட்டுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

“எத்தன தடவ சொல்லிருக்கேன், இப்படி நட்டநடு வீட்டுல பப்பரப்பான்னு சரக்கடிக்காதன்னு… அப்படி என்ன பெரிய கவலை உனக்கு… இப்படி சரக்கடிச்சு சீரழியுற அளவுக்கு...? நாங்களும் தான் வேலைக்கு போறோம், எங்களுக்கும் தான் டென்ஷன்… நாங்க என்ன உன்ன மாதிரி குடிச்சுட்டு கவுந்து கிடக்குறோமா…” என்று ஏதோ மேடைப்பேச்சு போல பேசிக் கொண்டிருந்தாள்.

விரக்தியாக சிரித்தவன், “ஹ்ம்ம் நீ பேசுறது எல்லாம் கரெக்ட் தான்… வேலைப்பளுங்கிறது இப்போ எல்லாருக்கும் இருக்குறது தான்… வேலைல மேலிடத்து மேல கோபம் வந்தாலும் காட்ட முடியாது… வருஷா வருஷம் ஹைக் போடுவானான்னு தெரியாது... பெர்ஃபார்மன்ஸ் காரணம் காட்டி சம்பளத்த குறைச்சாலும் ஒண்ணும் கேக்க முடியாது… இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை…”

“ஆனா உங்களுக்கு அந்த எமோஷன்ஸ்ஸ கொட்ட அழுகைன்னு ஒரு உணர்ச்சி இருக்கு… நாங்க அப்படி ஈஸியா அழுக முடியுமா… இல்ல இந்த சமூகம் தான் எங்கள அழ விட்டுடுமா… ‘ஆம்பள கண்ணுல தண்ணி வரலாமா…’ன்னு சொல்லி சொல்லியே தான இந்த சமூகம் எங்கள வளர்த்து விட்டுருக்கு… ஏன் ஒரு ஆண் அழுதா என்ன… அழுகைங்கிறது ஒரு உணர்ச்சி தான, எல்லாருக்கும் அது பொதுவானது தான… ஹ்ம்ம் இதுக்கு தான் பொண்ணாவே பொறந்துருக்கலாம்…” என்று பேசிக் கொண்டே சென்றவன், “ப்ச் அத சொன்னா உனக்கு புரியாது விடு… இது ஆண்களோட ஃபீலிங்ஸ்… என்ன கேட்ட டென்ஷன் குறைக்க குடிக்குறோம்ன்னா… ஆமா அப்படியே விட்டா பைத்தியம் ஆகிடுவோம்… எங்களுக்கு ஈகோ ஜாஸ்தி தான்… சாதாரணமா உள்ளயிருக்க ரணமெல்லாம் வெளிய சொல்லிக்க மாட்டோம்… அதான் இத குடிச்சாவது அது வெளிய வரட்டும்னு குடிக்குறோம்…” என்று மிக நீளமாக பேசினான்.

ஆகாஷ் இவ்வளவு பெரிதாக பேசி அவள் பார்த்ததேயில்லை. அதனால் ஒரு நொடி பிரமித்து அவனைப் பார்த்தவள், அவன் சொல்லியது மூளைக்கு சென்றடையவும், ‘அடப்பாவி… என்னமோ ஆல்கஹாலுக்கு அம்பாசிடர் மாதிரி பேசிட்டு இருக்கான்…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

“குடிச்சு உன் உயிர அழிச்சுக்குறதுக்கு இப்படி ஒரு பில்ட்-அப்பா… அழுது தான் ஸ்ட்ரெஸ்ஸ குறைக்கணும்னு இல்ல… நம்மளோட நலம் விரும்பிங்க, நம்ம சொல்றத காது குடுத்து கேட்டு நமக்கு சரியான வழிய காட்டுறவங்க கிட்ட நம்ம கவலைகள சொல்லியும் குறைக்கலாம்… உனக்கு குடிக்க ஒரு சாக்கு வேணும்… இவ்ளோ சொல்ற எந்த டாக்டராவது குடிச்சா ஸ்ட்ரெஸ் குறையும் அட்வைஸ் பண்றங்களா… ஒழுங்கா யாருக்கிட்டயாவது ஷேர் பண்ணு… அத விட்டுட்டு குடிக்க கிளாஸ் எடுக்காத…”

அப்போதும் விரக்தியாக சிரித்தவன், “என்னோட கவலைய ஷேர் பண்ணிக்க யாரு இருக்கா…” என்று ஏதோ கூற வந்தவன், பின் சுதாரித்தவனாக, “ப்ச் இதப் பத்தி இப்போ எதுக்கு பேசிட்டு இருக்க… வந்ததும் உன் ரூமுக்குள்ள போய் அடஞ்சுக்குவ தான… இப்போ மட்டும் என்ன அக்கறை…” என்று கூறி அவளை முறைத்தான்.

“உன் மேல ஒன்னும் அக்கறை இல்ல… உன்ன நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு அவரு பொண்ண கல்யாணம் பண்ணி குடுக்க சம்மதிச்சுருக்காரே அவருக்காகவும், தன்னோட வாழ்க்கைத் துணை விட்டுட்டு போயிருந்தாலும் தன்னோட பையன் தான் இனிமே வாழ்க்கைன்னும் துணைன்னும் நெனச்சு வாழ்ந்துட்டு இருக்காங்களே அவங்களுக்காகவும் தான் இப்போ பேசிட்டு இருக்கேன்…”

“அப்பறம் சார் என்ன சொன்னீங்க… உங்களுக்கு உங்க கவலைய ஷேர் பண்ண ஆளே இல்லயா… அதான் ஒரு மனுஷர் இருக்காரே… அவரு பொண்ணுகிட்ட கூட சம்மதம் கேக்காம உங்கிட்ட கேட்டாரே… அந்த நல்ல மனுஷன்கிட்ட சொல்ல வேண்டியது தான…” என்று கூறியவள், அதுவரை இருந்த மனநிலை மாறியவளாக, அவன் கையிலிருந்த கிளாஸை பிடுங்கி வாயில் சரித்துக் கொள்ள முயன்றாள்.

அவளின் செய்கையில் ஒரு நொடி பதறியவன், வேகமாக அவளிடமிருந்து கிளாஸை பிடுங்கினான்.

“ஹே என்ன டி பண்ற… லூசா நீ..?”

“ஏன் உங்களுக்கு மட்டும் தான் ஸ்ட்ரெஸ்னா தண்ணியடிக்க தோணுமா..?”

“லூசுன்னு சரியா ஃப்ரூவ் பண்ற… இப்போ தான மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணுன்னு எனக்கு அட்வைஸ் பண்ண… அறிவுரைலாம் மத்தவங்களுக்கு தானா…” என்றான் கிண்டலாக.

அதில் உதட்டை சுழித்தவள், “நீ சொன்ன மாதிரி தான் எனக்கு ஷேர் பண்ண யாருமில்ல… எங்க அப்பா உன்கிட்ட பேசுற அளவுக்கு கூட எங்கிட்ட பேச மாட்டாரு…” என்றாள் சோகமாக.

அவளின் மனநிலை ஆகாஷிற்கும் புரிந்தது. அவன் அமைதியாகவே இருந்தான்.

“ச்சு… பையனாவே பொறந்திருக்கலாம்…” என்று கூறியவள், “நீ சொன்னா அப்பா கேப்பாருல… எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்… ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லி இந்த கல்யாணத்த நிறுத்திடுறியா..?” என்றாள் கெஞ்சல் குரலில்.

‘ஹ்ம்ம் அது முடியாம தான நானே அமைதியா இருக்கேன்…’ என்று அவனால் உள்ளுக்குள் மட்டுமே நினைக்க முடிந்தது.

“ப்ச்… என்னால கல்யாணத்த நிறுத்த முடியாது… உனக்கு வேணும்னா நீயே நிறுத்திக்கோ…” என்றான்.

“ச்சே… உங்கிட்ட போய் சொன்னேன் பாரு…” என்று அவனை இன்னும் திட்டிவிட்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.

ஆகாஷிற்கு அவளின் வார்த்தைகளே மனதில் ஓடிக் கொண்டிருந்தன. அவள் கூறிய ‘கல்யாணம் வேணாம்’ என்றதை நினைத்து வருந்தியவன், ‘இப்போ’ என்ற வார்த்தையை கவனிக்காமல் விட்டததை நினைத்து பிற்காலத்தில் வருந்துவானோ…

அன்றைய இரவு இருவரும் தாமதமாக உறங்க, அடுத்த நாள் காலையிலும் தாமதமாகவே விழித்தனர். ஆனால் அவர்கள் விழித்த நொடி, அவர்களின் கூச்சலில் அந்த குடியிருப்பே அதிர்ந்து தான் போனது.

தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top