நீயாக நான், நானாக நீ 15

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: இதோ கதையின் இறுதி அத்தியாயம்...:giggle::giggle::giggle: இதுவரைக்கும் இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...:love::love::love: படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:giggle::giggle::giggle:

ei9FFR645091.jpg

அத்தியாயம் 15

பூமி இதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அழைப்பு மணி ஒலிக்க, ஆகாஷ் தான் என்று அவளிற்கு தெரிந்தாலும், கதவைத் திறக்க அவசரம் காட்ட வில்லை. ’அவன்கிட்ட தான் ஒரு சாவி இருக்குல… அப்பறம் எதுக்கு பெல் அடிச்சுட்டு இருக்கான்…’ என்று மனதிற்குள் புலம்பியபடி கதவைத் திறக்கச் சென்றாள்.

அங்கு ஆகாஷோ பொறுமையற்று பலமுறை அழைப்பு மணியை அழுத்தியிருந்தான். சற்று முன் பூமியிருந்த அதே நிலையில் இப்போது அவனிருக்கிறான்.

மெல்ல கதவைத் திறந்த பூமி, அவனை ஏறிட்டும் பார்க்காமல், உள்ளே செல்ல, பின்னே வந்தவன், அவளின் கைகளைப் பற்றி நிறுத்தினான்.

“சாரி பூமி… நான் அப்படி பேசியிருக்க கூடாது… நான் டென்ஷன்ல…” என்று அவன் சொல்ல வருவதற்குள், “இப்போ எதுக்கு என்கிட்ட சாரி கேட்டுட்டு இருக்க… எனக்கு தான் உன்மேல அக்கறை இல்ல… அப்பறம் எதுக்கு இதெல்லாம்… ஹான் மறந்துட்டேன்… என் உடம்புக்கு ஒன்னும் ஆகலல…” என்று நக்கலாகவே கூறினாள்.

“ப்ச் என்ன பேச விடு பூமி மா…” என்றான் சோர்வாக.

“ஓ இப்போதான் நியாபகம் வந்ததா நான் பூமிமான்னு…” என்று அவனைப் பார்த்து கேட்க, “அப்போ உனக்கு மட்டும் நியாபகம் வந்துடுச்சோ…” என்றான் நமுட்டுச் சிரிப்புடன். அவளை இன்னும் கொஞ்ச நேரம் பேச வைத்தால் சமாதானப் படுத்திவிடலாம் என்று அவனிற்கு நன்கு தெரியும். அதற்காகவே பேச்சை திசை திருப்பினான் அந்த கள்ளன்.

“எனக்கு எப்போவோ நியாபகம் வந்துடுச்சு… இன்னிக்கு கால் பண்ணப்போ கூட எத்தன தடவ ‘அஷு’ன்னு கூப்பிட்டுருப்பேன்… அப்போலாம் கண்டுக்க கூட இல்ல…” என்றவாறே அவனின் பக்கம் வந்திருந்தாள்.

அவனும் அவளை சோஃபாவில் அவனருகே அமர வைத்தவன், “சாரி பூமிமா… இன்னிக்கு செம டென்ஷன்…” என்று நடந்தவைகளை அவளிடம் கூறினான்.

“… அப்போ தான் நீ கால் பண்ண…” என்று அவன் கூறிக்கொண்டே அவளின் எதிர்வினையை பார்க்க, அவளோ கதை கேட்கும் ஆவலில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.

‘அடிப்பாவி… நான் இங்க கஷ்டப்பட்டத சொல்லிட்டு இருக்கேன்… என்னமோ கதை கேக்குற மாதிரி உக்காந்திருக்கா…’ என்று எண்ணியவனை, ‘இப்போ ஏதாவது சொன்ன மறுபடியும் மலை ஏறிடுவா… அப்பறம் உனக்கு தான் கஷ்டம்…’ என்று அவனின் மனசாட்சி எச்சரிக்க, அவனும் அதை ஆமோதித்தவனாக தன் ‘கதை’யைத் தொடர்ந்தான்.

அவன் அனைத்தையும் கூறி முடித்து பூமியைப் பார்க்க, அவளோ கன்னத்தில் கைவைத்தவாறே கண்மூடியிருந்தாள்.

‘தூங்கிட்டாளோ…’ என்று அதிர்ந்தவன், அவள்முன் கையசைத்து “க்ளோபு…” என்று மெல்லிய குரலில் அழைக்க, “ம்ம்ம்… முழிச்சுட்டு தான் இருக்கேன்… என்ன உன் கதைய சொல்லி முடிச்சுட்டியா…” என்று கிண்டலாகக் கேட்க, அவள் இயல்பானதை உணர்ந்து, “என்ன கோபம் போயிடுச்சா…” என்று மெதுவாகக் கேட்டான்.

“அதெல்லாம் நீ வந்தவொடனே போயிடுச்சு… ச்சு இவ்ளோ நேரம் அது தெரியாம, என்ன சமாதானப் படுத்துறேன்னு கதை சொல்லிட்டு இருக்க… ச்சே அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சுச்சே.. இன்னும் இத சாக்கா வச்சு உன்கிட்ட நெறைய வேலை வாங்கலாம்னு நெனச்சேனே…” என்றவளின் குரல் வருத்தம் இருப்பது போல் ஒலித்தாலும், அவளின் கண்களோ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

“அடிங்… என்ன காமெடி பீஸாக்கிருக்கியா…” என்று அவளை வழக்கம் போல் துரத்த, “இதுவே உனக்கு தெரியலைனா, என்ன வச்சு எப்படி குடும்பம் நடத்தப் போறீயோ…” என்று கூறிவிட்டு பின்பே சுதாரித்தவள் நாக்கை கடித்தாள்.

அவள் அசந்த நேரத்தில் அவளைப் பிடித்தவன், “எப்படி நடத்துறேன்னு டெமோ காமிக்கவா…” என்று கண்ணடித்துக் கூற, பூமி தான் அவனின் செய்கையில் தடுமாறிப் போனாள்.

அவன் அருகில் வர வர, பூமிக்கு வியர்த்தது. அதையெண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் ஆகாஷ். ‘என் க்ளோபுக்கு பேச்சு மட்டும் தான்…’ என்று செல்லமாகக் கொஞ்சிக் கொண்டான்.

அவனைத் தடுத்தவள், “நில்லு நில்லு நீ என்கிட்ட இன்னும் ப்ரொபோஸே பண்ணல…” என்று உதட்டை பிதுக்கி கூற, அதில் வாய்விட்டு சிரித்தவன், “எப்படி உன் ட்ரைனர் நீன்னு நெனச்சு என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணானே அப்படியா…” என்றான் ஆகாஷ்.

முதலில் அவனை முறைத்தவள், பின் அவனுடன் இணைந்து சிரிக்க ஆரம்பித்தாள். பின் ஏதோ நினைத்தவள், “நம்ம திரும்ப மாறினவொடனே, நீ ஆஃபிஸ் போகும்போது ‘டிப்டாப்’பாலாம் போகக் கூடாது. கலைஞ்ச தலைமுடி, அயன் பண்ணாத சட்டை – இப்படி தான் ஆஃபிஸ் போகணும்…” என்று அவனிடம் கூறியவள், ‘எல்லா பொண்ணுங்க பார்வையும் இவன தான் சுத்திட்டு இருக்கு…’ என்று முணுமுணுத்தாள்.

அவளின் முணுமுணுப்பையும் கேட்டவன், “என்ன க்ளோபு பொசசிவ்னெஸா…” என்று கண்ணடித்துக் கேட்க, “ம்ம்ம் சின்ன வயசுல இருந்தே உனக்கு என்மேல பொசசிவ்னெஸ் இருக்குறப்போ, எனக்கு இருந்தா என்ன தப்பு…” என்று பூமி புருவம் உயர்த்திக் கேட்டாள்.

அவளின் கூற்றில் அவனிற்கு லேசாக வெட்கம் வந்ததோ, அதை மறைக்கும் பொருட்டு, “சுந்தர் சொன்னானா...?” என்று வினவினான்.

அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள் அவனின் தோள் மீது சாய்ந்து, “அப்போவே உனக்கு என்ன அவ்ளோ பிடிக்குமா, அஷு” என்றாள் பூமி.

ஒரு பெருமூச்சுடன், “ஆமா பூமி மா… அப்பா இறந்ததுக்கு பின்னாடி, அம்மாவும் அப்பா நினைப்புல என்கிட்ட சரியா பேசல… அதனால நானும் யாருகிட்டயும் பேச மாட்டேன்… எல்லாரும் சோகமா இருக்க, நானும் எந்த விளையாட்டுத் தனமும் இல்லாம இருந்தேன்… அப்போ தான் நீ பொறந்த… உன்ன பாக்க வந்தப்போ நீ தூங்கிட்டு இருந்த… ஆனா நான் தொட்டதும் நீ கண்ண தொறந்து பார்த்து சிரிச்ச… ரொம்ப நாளுக்கு அப்பறம் நானும் அன்னிக்கு தான் சிரிச்சேன்… அப்போலயிருந்து எனக்கு ஏதாவது கோபம்னாலும் பிரச்சனைனாலும் உன்ன பாக்க தான் வருவேன்… வேற யாருக்கிட்டயும் இதுவரைக்கும் என் பிரச்சனைய ஷேர் பண்ணதே இல்ல… உன் சிரிப்ப பாத்தாலே எனக்கு கோபம் குறைஞ்சுடும்…” என்று அவன் கூறியதும், அன்றொரு நாள் ‘பிரச்சனைய ஷேர் பண்ண ஆளே இல்ல…’ என்று அவன் கூறியது நினைவிற்கு வந்தது.

‘இனிமேல் நான் இருப்பேன்…’ என்னும் விதமாக அவனின் கைகளை இறுக்கிக் கொண்டாள்.

“அப்போ தான் உன் பாட்டி…” என்று கூறும்போதே உடல் இறுக, அவனின் மேல் சாய்ந்திருந்தவளும் அதை உணர்ந்தாள். “விடு அஷு… அந்த கிழவி அப்படி தான் ஏதாவது உளறிட்டு இருக்கும்… அன்னிக்கே நீ சொல்லிருந்தா அத லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருப்பேன்… அத விட்டுட்டு நீ என்கிட்ட பேசாம இருந்துருக்க…” என்று அவனை தலை நிமிர்த்தி பார்த்தாள்.

அவளின் பேச்சில் இயல்பானவன், “உன் வாய் யாருக்கிட்ட இருந்து வந்துச்சுன்னு யோசிச்சுட்டே இருந்தேன்… இப்போ கன்ஃபார்ம் ஆகிடுச்சு…” என்றதும், “என்னையவே கிண்டல் பண்றீயா..” என்று அவனை அடித்தாள்,

“நானும் கல்யாணம் வேணாம்னு சொன்னது, எல்லாம் ரொம்ப சீக்கிரமா நடக்குற மாதிரி இருந்ததால தான்… இன்ஃபேக்ட் சுந்தர் கிட்ட கூட கல்யாணத்த நிறுத்த ஐடியா கேட்டேன்… அவன் ரீசன் கேட்டப்போ எத்தனையோ காரணங்கள் நான் சொன்னாலும், உன்ன பிடிக்கலன்னு மட்டும் நான் சொல்லவே இல்ல… தெரியுமா…” என்று அவள் கூறியதும், ஆகாஷ் சிரித்துக் கொண்டே, “எனக்கு தெரியும்…” என்றான்.

“அந்த எட்டப்பன் சுந்தர் தான சொன்னான்…” என்றாள். “ஆமா… அவன் சொல்லலைனா உனக்கும் என்மேல இருக்க விருப்பம் இன்னும் கொஞ்சம் லேட்டா தெரிஞ்சுருக்கும்… ஹ்ம்ம் நானும் ஏதோ சின்ன வயசுல நடந்தத சாக்கா வச்சுக்கிட்டு இன்னும் அவன்கிட்ட பேசாம இருந்துருப்பேன்…” என்றான்.

பின் சுந்தர் வந்தபோது நிகழ்ந்தவைகளை கூறி சிரித்துக் கொண்டிருந்தனர்.

“நாம எப்போ திரும்ப நம்ம உடம்புக்கு மாறுவோம்…” என்று பூமி கேட்கவும், “ஏன் பூமி மா உனக்கு ஏதாவது பிரச்சனையா… யாராவது தொல்லை பண்றாங்களா…” என்று உண்மையான அக்கறையுடன் வினவினான் ஆகாஷ்.

அவனின் அக்கறையை மனதிற்குள் ரசித்தவள், “இல்ல நீ ரொமான்ஸ் பண்ண பக்கத்துல வரப்போ என் முகத்தையே பார்த்து எனக்கு அந்த ஃபீல் வரலைனா என்ன பண்றது… அதுக்கு தான் கேட்டேன்…” என்று அவனைப் பார்த்து கண்ணடிக்க, அவளின் தலையில் வலிக்காமல் கொட்டியவன், “ஃபீல் வரணும்னா முகத்த பாக்க வேணாம்…” என்று கூறியவனை தடுத்தவள், “நீ இன்னும் எனக்கு ப்ரொபோஸ் பண்ணல…” என்றாள்.

“போடி லூசு… ப்ரொபோஸ் பண்ணல… பொடலங்கா பண்ணலன்னு…” என்று கூறியவனைக் கண்டு மனதிற்குள் சிரித்தவள், “சூப்பர் அஷு… இப்போ தான் எனக்கு பசிக்குது நெனச்சேன்… உடனே சாப்பாட்ட பத்தி யோசிக்கிற… என்மேல உனக்கு எவ்ளோ லவ்… வா வா வா போய் சமைக்கலாம்…” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

“கடவுளே ரொமான்ஸ் பண்ண போனா சாப்பாட்ட பத்தி பேசுறாளே…” என்று முணுமுணுத்தான். இதை அவன் மட்டும் புலம்பவில்லை, அவர்களின் காதல் கைகூட அவர்களின் பின்னே அலைந்து கொண்டிருந்த க்யூபிடும் இதையே தான் நினைத்தது.

“அதெல்லாம் நமக்கு எதுக்கு… ரெண்டு பேருக்கும் அம்பு விட்டாச்சு… இனி அவங்க பாடு… நம்ம நெக்ஸ்ட் ஜோடிய பார்க்க போவோம்…” என்று அது சந்தோஷமாகக் கிளம்பியது.

*****

சாப்பிட்டு முடித்ததும் மறுபடியும் பேச ஆரம்பித்தனர். இம்முறை மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் பூமி.

“நான் ஆணாவும் நீ பொண்ணாவும் இருந்தா நல்லா இருக்கும்னு நம்ம அன்னிக்கு பேசுனோம்… மறுநாளே நாம மாறிட்டோம்… ஆனா இப்போதான் நமக்கு புரிஞ்சுடுச்சே, ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும், பிரச்சனைகள் ரெண்டு பேருக்குமே இருக்குன்னு… ஆனாலும் நம்ம ஏன் இன்னும் மாறல…” என்று பூமி கேட்டாள்.

“உனக்கு அந்த சாமியார் சொன்னது நியாபகம் இருக்கா பூமி… நமக்குள்ள தேட சொன்னாரு… அது நம்ம காதலன்னு தான் நான் நெனைக்கிறேன்…” என்றான் ஆகாஷ்.

“அப்படி பாத்தாலும் இப்போ நம்ம மாறிருக்கணும்ல…” என்று விடாமல் கேட்க, அவள் வாயை அடைத்தவன் (கையால் தான்) “உன் அளவுக்கு அந்த கடவுள் ஸ்பீட் இல்ல போல… கொஞ்சம் பொறுமையா இரு டி…” என்றான்.

பின் பேச்சு மீண்டும் ஆண்கள் பெண்களின் பிரச்சனைகளில் வந்து நின்றது.

“ஏன் அஷு… நம்ம இப்போ மாறுன மாதிரி ஒவ்வொருத்தரும் மாறுனா, மத்தவங்களோட பிரச்சனைகள ஈஸியா புரிஞ்சுக்குவாங்கள.. அப்போ நாட்டுல இத்தன டிவோர்ஸ் கேஸ் வராதுல…” என்றாள் பூமி.

“நீ சொல்றது சரி தான் பூமி. இன்னைக்கு நாட்டுல நடக்குற முக்காவாசி விவாகரத்துகள் கணவன் - மனைவியிடையே சரியான புரிதல் இல்லாத காரணத்துனால தான் நடக்குது… ஆனா இப்படி ஒவ்வொரு ஜோடியையும் மாத்திட்டு இருந்தா அந்த கடவுளே டையர்டாகிடுவாரு…” என்று ஆகாஷ் கூறினான்.

“அப்போ இதுக்கு என்ன தான் சொல்யூஷன்…” என்று பூமி வினவ, “சண்டை போடுறப்போ ஒரே நிமிஷம் நம்மள அவங்க இடத்துல வச்சு, அந்த சூழ்நிலைல நம்ம எப்படி ரியாக்ட் பண்ணிருப்போம்னு யோசிச்சாலே இங்க பாதி சண்டைகள் புஷ்வானம் ஆகிடும்…” என்றான் ஆகாஷ்.

“நீ சொல்றது கரெக்ட் தான் அஷு… ஆனா இதுலயும் எப்பவுமே பொண்ணுங்க தான் விட்டுக்குடுக்கணுமா…” என்று பூமி கேட்க, “சேச்சே அப்படி நான் சொல்லல பூமி, ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இப்படி யோசிச்சாலும் தேவையில்லாத வாக்குவாதங்கள தவிர்க்கலாம்னு தான் சொல்றேன்…” என்றான் ஆகாஷ்.

“சரி சரி அப்போ நம்ம வீட்டுல, நீயே இப்படியெல்லாம் யோசிச்சுக்கோ… அப்போ சண்டையே வராது” என்று அவள் கண்ணடிக்க, “கேடி டி நீ…” என்று அவள் கன்னத்தை கிள்ளினான்.

“நீ இத ஃபீல் பண்ணியான்னு எனக்கு தெரியல பூமிமா… நம்ம ரெண்டு பேரு உடல் மாறியிருந்தாலும், நம்ம கம்ஃபார்ட்டபில்லா தான் இருக்கோம். இதுவே வேற யாரு உடம்புக்குள்ள போயிருந்தா இதே அளவுக்கு அத ஈஸியா எடுத்துருப்போமான்னு தெரியல…” என்றான் அவளின் ‘அஷு’.

பூமியும் அவன் கூறியதை யோசித்துப் பார்த்தவள், “உண்மை தான் அஷு. என்ன தான் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருந்தாலும், நீ அன்னைக்கு குடிச்சுட்டு உளறினப்போ, உனக்காக ஃபீல் பண்ணேன். இன்ஃபாக்ட் எனக்கு குடிக்கிறவங்கள பார்த்தாலே பிடிக்காது. அவங்க பக்கத்துல கூட போக மாட்டேன். ஆனா, அன்னைக்கு எப்படி உன்கூட உட்கார்ந்து பேசுனேன்னு நானே நிறைய தடவ யோசிச்சுருக்கேன்… இப்போ தான் ஏன்னு புரியுது…” என்றாள்

ஆகாஷோ அவளின் அருகில் வந்து, “என்ன புரிஞ்சுது…?” என்று ‘ஹஸ்கி’ வாய்ஸில் கேட்க, அவனின் பார்வை மாற்றத்தைப் புரிந்து கொண்ட பேதையவளோ, “ஹ்ம்ம்… நம்ம மாறுற வரைக்கும் நோ ரொமான்ஸ்னு புரிஞ்சுது…” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

“போடி உருண்ட…” என்று அவனும் சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

இருவரும் நேரம் கழித்தே உறங்கியதால், அலாரம் அடிக்க கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தனர். இப்போதெல்லாம் ஆகாஷ் இருக்குமிடத்தில் பூமியும் இருப்பதால், காலையிலும் அவன் எழும்போதே எழுந்து அவனுடனே சமையலறையில் பேசிக் கொண்டிருப்பாள்.

எனவே இருவரும் ஒன்றாகவே எழுந்தனர். ஆனால் அவள் அவனறையிலும், அவன் அவளறையிலும்…

முதலில் கண்களை சுருக்கி பார்த்தவர்கள், ஏற்கனவே இருந்த அனுபவத்தால் கண்ணாடி முன்னாடி நின்றிருந்தனர். தலை முதல் கால் வரை பார்த்தவர்கள், தங்கள் உடம்பிற்கே மாறிய மகிழ்ச்சியுடன், இருவரும் ஒரே நேரத்தில் கதவைத் திறந்து வெளியே வந்தனர்.

எதுவும் பேசாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அந்த நிமிடமும் அப்படியே நீண்டது. மெல்ல ஆகாஷ் கைகளை விரித்து ‘வா’ என்று தலையசைக்க, அதற்காகவே காத்திருந்தது போல ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டாள் அவனின் ‘பூமிமா’.

எவ்வளவு நேரம் இருவரும் அணைப்பிலிருந்தனர் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே கேட்ட சத்தத்தில் நிகழ்விற்கு வந்தனர்.

பூமிக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாக இருக்க, அவனை விட்டு விலக எத்தனித்தாள். அவனோ அவளின் கைகளைப் பற்றி இழுத்து அவனருகே நிற்க வைத்தவன், குனிந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்தி, தலையோடு தலை முட்டி, மூக்கோடு மூக்கை உரசி, “என்ன மேடம், இப்போ ரொமான்ஸ் ஆரம்பிக்கலாமா…” என்று கேட்டவுடன், வெட்கத்தில் இன்னும் சிவந்தவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

அதையே சம்மதமாக ஏற்றவன் அவள் இதழில் கவிபாட குனிய, அவனிற்கு அவளின் இதயதுடிப்பிற்கு பதில் அவள் வயிற்றின் சத்தம் தான் கேட்டது.

அதில் அவளும் கண்களைத் திறந்து அவனை பரிதாபமாகப் பார்க்க, அவனோ முடியைக் கோதி உணர்ச்சியைக் கட்டுப்படுத்தினான். “எல்லாம் சேர்ந்து எனக்கெதிரா சதி பண்ணது…” என்று புலம்பினான்.

பின் அவளைப் பார்க்க, அவளின் பாவனை அவனிற்கு சிரிப்பை வரவழைக்க, மெல்ல புன்னகைத்தவன், “என்ன பீஸு டி நீ…” என்றான்.

“ஹான் உன் பீஸு தான்… இப்போ வா எனக்கு பசிக்குது…” என்று அவனை கையோடு அழைத்துச் சென்றாள்.


தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top