நினைவெல்லாம் நீ(யே)யா_7

Advertisement

அனைவரும் பூஜை நடக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க; அங்கு வந்தனர் ஆதவின் குடும்பத்தினர்.

ஆதவ் வண்டியிலிருந்து இறங்கியதும் சிவா ஆதவை முரைக்க, அமைதியாக தன் பெற்றோர்களுடன் நடந்து சிவாவின் குடும்பத்தின் அருகில் சென்றான் ஆதவ்.

அங்கு பரஞ்சோதியையும்அவருடைய குடும்பத்தையும் பார்த்த ஆதவின் தந்தை வேலாயுதம் ஓடிச்சென்று பரஞ்சோதியை தழுவிக்கொண்டார்.

இருவரும் அணைத்துக்கொண்டிருப்பதை பார்த்த குடும்பத்தினர் மகிழ்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர்.

பரஞ்சோதியும், வேலாயுதமும் பாலிய வயது தோழர்கள். இவர்களின் தோழமையால் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்த இரு குடும்பமும் நன்குபழகிவந்தனர்.

வேலாயுதத்தின் தந்தையின் வேலைஇடமாற்றத்தால் இருபது வயதில் பிரிந்த தோழர்கள் இன்று பார்த்ததால் வயதுவித்யாசமின்றி ஓடிசென்று தழுவிக்கொண்டனர்.

இவர்கள் குடும்பமாக பேசிக்கொண்டிருக்க அங்கு வந்தனர் துருவன், ருத்ரா, விஷ்ணு. உடனே ஐயர் பூஜைய ஆரம்பிக்கலாமா நாழி ஆகிறது என குரல் கொடுக்க அனைவரும் ஐயரின் அருகே சென்றனர்.

இடத்தோட முதலாளி முன்னே வந்து மனையில உக்காருங்கோ என ஐயர் கூற.

அனைவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி பார்த்துக் கொள்ள. வேலாயுதம் விருதாசலத்தைப் பார்த்து , அப்பா போய் மனையில உட்காருங்க என அவரின் கையைப்பிடித்து எழுப்பினார்.

இல்ல வேலா , இது என் பேத்தி ருத்ரா ஆசையா கட்டுற மால் அதனால அவள இந்த மனையில உட்கார சொல்லவா?என குழைந்துக் கேட்டார்.

அது எதுக்கு பா என்கிட்ட கேக்குறிங்க உட்கார சொல்லுங்க. என்றார் சிரித்தபடி.

இல்ல வேலா , இது உன்னோட இடம் அதனால நீயும் சேர்ந்து அமருடா.

வேணாமா அப்பா, இந்த மால் கட்டபோற விஷயத்தில என் மகனுக்குதா பங்கு இருக்கு அதனால அவனே உட்காரட்டும்.என ஆதவை பார்த்து கூறினார்.

அவர்களிடம் வேணாம் தாத்தா, பெரியவங்க இருக்கும் போது நாங்க எப்படி உட்கார முடியும் என ருத்ரா கூற அதையே ஆமோதித்தான் ஆதவும்.

நாங்க வாழ்ந்து முடிச்சவங்கடா, நீங்க வாழபோறவங்க அதனால, நீங்கதா உட்காரணும் என ருத்ராவையும் ஆதவையும் பார்த்து வஜ்ரவேலு கட்டளையிட இருவரும் அமைதியாக சென்று மனையில் அமர்ந்து பூஜையை தொடங்கினர்.

ஐயர் மந்திரம் கூறி பூஜையை தொடங்க, அருகே அமர்ந்திருந்த ருத்ராவிற்கு மட்டும் கேட்கும் குரலில் இப்பவே உன்ன கல்யாணம் பண்ணம்னு தோனுது.என்றான் ஆதவ் ஒற்றை கண்ணை அடித்தபடி.

அவன் கூறியதைக்கேட்டு அவனை முரைத்த ருத்ரா, அது இந்த ஜன்மத்தில நடக்காது.

அத நீ பார்க்கதான போற. என்றான் தலையை சிலுப்பியபடி.

அங்க பிளாக் ஷர்ட் போட்டு இருக்கானே, என் அத்தபைய துருவன் அவனதா நா கல்யாணம் பண்ணிக்க போற முடிஞ்சா தடுத்து பாரு. கன்டிப்பா கல்யாணத்துக்கு பத்திர்க்கை தருவேன் மறக்காம வந்திரு. என ஆதவை கடுப்பேற்ற கூறிய போலி வார்த்தைகள் தன் வாழ்க்கையை மாற்றும் என அறிந்திருந்தாள் கூறியிருக்காமல் இருந்திருப்பாளோ? என்னவோ.

அவள் கூறிய பக்கம் பார்த்த ஆதவ். அங்கிருந்த துருவனை பார்ததும் சற்று நேரத்திற்கு முன்பு துருவனின் மார்பில் ருத்ரா சாய்ந்திருந்தது நினைவுவர கோபத்தை கண்களை மூடி கட்டுபடுத்தி அமர்ந்திருந்தான்.

பூஜை முடிந்தவுடன் ருத்ராவும் ஆதவும் கற்களை எடுத்து நிலத்தில் வைத்து வணங்கி எழுந்தனர்.

இனிதே பூமி பூஜை நிறைவடைய, இரு குடும்பத்தினரும் பலநாட்கள் பேசாத பேச்சுகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.

விருதாசலம், ஆதவின் குடும்பத்திடம் நாளைக்கு ஊர்ல திருவிழா அதனால குடும்பத்தோட எல்லாரும் வீட்டுக்கு வரனும் என கூற. வேலாயுதமும் சம்மதம் என கூறி சென்றனர்.

நாளையிலிருந்து திருவிழாவை தொடங்களாம்.

ஹாய் பிரண்ஸ், படிச்சிட்டு எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க. பாய்


நீ(யே)யா.......?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top