நினைவெல்லாம் நீ(யே)யா_15

Advertisement

அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, அதிலிருந்து முதலில் மீண்ட கார்திகேயனோ துருவா என்ன பண்ணியிருக்க என்றபடி கோவில் என்றும் பாராமல் கையை ஓங்கி செல்ல.


கார்திகேயா...என தனது சிம்ம குரலில் கர்ஜித்தார் விருதாசலம்.

என்னபா புதுசா கைய ஓங்குற பழக்கமெல்லாம். என்ன இது பொது இடத்துல என கோபமாக கேட்க.அமைதியாக வெளியேறினார் கார்திகேயன்.

துருவனின் திட்டம்படி ஹரிணியின் கல்யாணத்தை அறிந்திருந்த ருத்ரா,
ஆதவ், துருவ், சிவா மூவரும் இட்ட திட்டபடி ஆதவின் தன்னுடனான திருமணத்தை அறியாததால் அங்கிருந்த ஆதவை கண்ணகள் சிவக்க முரைத்து கொண்டு இருக்க.
ஹரிணியே நடந்தது இந்த மாறுபட்ட திருமணத்தால் கயல் விழியின் மீது சாய்ந்து அழுதுக்கொண்டிருக்க.

தேன் மொழிக்கே தாலி கட்டிவிட்டு ஒருநிமிடம் கூட நிற்காமல் வெளியேறிய விஷ்ணு சென்ற வழியை பார்த்து சிலையென நின்றாள்.

வேலாயுதமோ ஆதவின் செயலைப் பார்த்து அதிர்ந்து இருக்க, பெண்களோ என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க,
வீட்டாரை சுய நினைவிற்கு கொண்டுவந்ததென்னவே விருதாசலம் கார்திகேயனை அழைத்த சிம்ம குரலே.

கூட்டத்திலிருந்த ஒருவனோ அதா கல்யாணம் முடிஞ்சிடுச்சிலே பந்தி ஆரம்பிக்காம என்னத பேசிகிட்டு இருக்காங்க என சலிப்பாக சொல்ல,

அருகிலிருந்த பெரியவரோ ஊருக்கு புதுசா, என கேட்க
ஆமா ஐயா, எங்க ஊருக்கு போயிகிட்டு இருந்த அப்ப , நா போகிற வழியில கல்யாணம்னு பேசிகிட்டாங்க அதா சாப்பிட்டு போகலானு வந்த பசியோட எப்படி போறது, என அந்த புதியவன் கூற.

அவனை ஒரு மார்க்கமாக பார்த்த பெரியவரோ, இங்க கல்யாணமே மாறி போயிடுச்சினு கவலையில இருக்காங்க உனக்கு சோறுதா முக்கியமா என கேட்க.
என்ன ஐயா நீங்க, மாறி நடந்தா என்ன? மாறாம நடந்தா என்ன? அதா கல்யாணம் நடந்திடுச்சில பந்தி ஆரம்பிச்சா சாப்பிட்டு போயிட்டே இருப்ப என வருத்தபடாத வாலிபர் சங்கம் சிவகார்திகேயன் போல சொல்ல.

வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்ட பெரியவர், பந்தி ஆரம்பிக்க போறாங்க போப்பா என கூற
மொத பந்தில உக்காந்தா எல்லா கிடைக்கும் அப்றமா போனா பாயாசம் இல்ல வட இல்லனு சொல்லுவாங்க ஐயா நா போறேன் என வழியில் இருந்தவர்களை முந்திக்கொண்டு சென்றான்.

விருதாசலம் பூசாரியை பார்த்து வாங்க பூசாரி நம்ப அம்மன நகர் வலத்துக்கு அழைச்சிட்டு போக ஏற்பாடு பண்ணலாம் என கூறி, சுப்பு மாணிக்கம் இரண்டு போரும் கொஞ்சம் பந்திய பாருங்க வந்தவங்க எல்லாரும் சாப்பிட்டு போகனும் என கூற, சரி விருதாசலம் நாங்க போறோம் என இருவரும் பந்தியை நோக்கி சென்றனர்.

விருதாசலம். மீனாட்சி, பரஞ்ஜோதி, வேலாயுதத்தை பார்த்து எல்லாரும் வீட்டுக்கு போங்க நா அம்மனுக்கு பூஜையை முடிச்சிட்டு வீட்டுக்கு வரேன் என கூற. அனைவரும் ஆமோதித்தபடி தலையசைத்து வண்டியில் ஏறி புறப்பட்டனர்.

வீட்டிற்கு வந்த அனைவரும் ஏதும் பேசாமல் ஹாலில் அமர, ருத்ரா கோபத்தில் அறைக்குள் சென்று கதவை தாழிட, ஹரிணியோ அழுதபடியே இருக்க கயல்விழி அவளின் தலையை கோதி அழாதடா என கூற, தேன் மொழிக்கு அழுகை கோபம் என எந்த உணர்வும் இல்லாமல் அதிர்ந்து சிலையென கட்டில் அமர்ந்திருந்தாள்.

சிவா,ஆதவ்,துருவன் மூவரும் தோப்பில் அடுத்து என்ன நடக்க போகுதோ என யோசனையில் இருக்க, சிவாவோ மச்சா ஆதவ் ருத்ராவ கல்யாணம் பண்ண போற விஷயம் நம்ப போட்ட திட்டபடி நடந்திடுச்சி.ஆனா இந்த விஷ்ணு பைய எதுக்குடா தேன கல்யாணம் பண்ணா நம்பகிட்ட கூட ஒருவார்த்தையும் சொல்லல என குறைபட.

துருவனோ, நானு அதபத்திதா மாப்ள யோசிச்சிட்டு இருக்க. அவன நா நகைகடையில பாக்கும் போதே ஏதோ தப்பு பண்ணுறானேனு யோசிச்ச அப்புறம் உடனே ஏதோ வாங்கிட்டு போகவே வீட்டுல இருந்த அனுப்சியிருக்காங்கனு அமைதியாயிட்ட என கூற.

டேய், என்ன பத்தி கொஞ்சம் யோசிங்கடா ருத்ரா என்ன என்ன பண்ணபோறானு தெரியல என ஆதவ் குறைபட. அவனை கண்டு சிரித்த சிவாவோ பெட்டர்மேக்ஸ் லைட்டுதா வேணும்னு சொன்ன இப்ப நாங்க என்ன செய்ய முடியும் அனுபவி ராஜா அனுபவி என ஆசி வழங்க.

எல்லா நேரம்டா என ஆதவ் கூற, பாத்துகலா ஆதவ் எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா என என்படி துருவன் ஆதவின் தோளை தட்டினான்.

இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஜுப் சத்தம் கேட்ட சிவா தாத்தா வந்துட்டாருடா இனி என்ன நடக்க போகுதோ என சிவா கூறி முடிக்க.

வீட்டின் வேலையாள் தம்பி ஐயா வரசொன்னாரு என சொல்லிவிட்டு சென்றார்.

வாங்கடா பஞ்சாயத்து கூடிடுச்சி போகலாம் என கூறியபடி சிவா இருவரின் தோள் மீதும் கையை போட்டபடி நடந்து சென்றான்.

வீட்டின் கூடத்தில் ஆண்கள் அனைவரும் அமர்ந்திருக்க, பெண்கள் ஒருபுறமாக நிற்க. சிவா ஆதவ் துருவ் ஒருபுறமாக நின்றனர்.

தன் தொண்டையை கனைத்த விருதாசலம், என்னபா துருவா போலிசா இருந்திட்டு நீயே இப்படி செய்யலாமா என கேட்க.
தலையை குனிந்தபடி இருந்த துருவனை பார்த்த கார்திகேயனோ மாமா இவ கிட்ட எல்லா பேசகூடாது நாலு அரையனும் என கூறியபடி எழுந்து செல்ல.

கார்திகேயா என்ன இது , தோளுக்கு மேல வந்தவன அடிக்கிறது. அதுவும் அவ போலிஸ் அதுகாவது அமைதியா இருஎன கூற, மாமா போலிஸ் பண்ணுற வேலையா இது என்றபடி அமர்ந்தார்.

துருவா உனக்கு ருத்ராவுக்கும் தானே பேசினோம் அப்புறம் ஏ நீ ஹரிணிய கல்யாணம் பண்ண என கேட்க.

தாதா, ருத்ராவும் நானும் ஒரு நல்ல பிரண்டாதா பழகுனோம், இரண்டு பேருக்குமே இதல விருப்பம் இல்ல, என கூற.

விருப்பம் இல்லனா முதல்லயே சொல்ல வேண்டியது தானே, இப்ப நீ இரண்டு பெண்ணோட வாழ்கை என்ன பதில் சொல்ல போற என கேட்க.

தாத்தா நா ஹரிணி மேல தா ஆசபட்டேன் அதா ஹரிணிய சந்தோஷமா கல்யாணம் பண்ண எனக் கூற.

அடேய், நீ ஆசப்பட்ட சரி , அந்த புள்ள உன்மேல ஆசை பட வேண்டாமா என கார்த்திகேயன் கேட்க.

துருவன் அமைதியாக இருக்க, சிவாவோ அவன் அருகில் இருந்து சொல்ல மாப்ள பதில சொல்லு நீதா பெரியாளாச்சே. என கவுண்டர் அடிக்க.

கடுப்பான துருவன் அப்பா ஹரிணிய கல்யாணம் பண்ண எனக்கு சிவா தா உதவி செய்தான் என கூற. அடப்பாவி போட்டுக்கொடுத்துட்டானே என கார்த்திகேயனை பயந்தபடி பார்த்தான் சிவா.

அப்ப இங்க பெரிய திட்டம் நடந்து இருக்கு எங்களுக்குதா ஒண்ணும் தெரியல என கார்திகேயன் கேட்க.

மூவரும் தரையை பார்த்தபடி நின்றனர்.

ஆழ்ந்த யோசனையில் இருந்த விருதாசலம், உமையாளை பார்த்து ஹரிணிய அழைச்சிட்டு வாமா என கூற. அவரும் சரி என்றபடி சென்றார்.

கயலுடன் அழுதபடி வீங்கிய முகத்தோடு வந்த ஹரிணியை பார்த்த விருதாசலம்.
ஹரிணிமா, துருவன் உன் மேல ஆசப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா. நீ என்ன சொல்லுற என விருதாசலம் கேட்க.


ஹரிணி துருவனை முரைக்க, சிவாவோ மாப்ள தங்கச்சி உன்ன ரொமாண்டிகா லுக் விடுரா பாருடா என கூற.

அவனோ இது உங்க ஊர்ல ரொமாண்டிக் லுக் என பல்லை கடித்தபடி கேட்க.
ஹரிணியோ தாத்தா நீங்க என்ன சொல்லுறிங்க என கம்மிய குரலில் கேட்க.

துருவன் மாதிரி பைய தேடினாலும் கிடைக்காது என கூற. மீனாட்சியே எங்களுக்கு துருவனை பிடிச்சியிருக்குமா இருந்தாலும் வாழ போறவ நீ அதனால உனக்கு சரினு படுறத சொல்லு என கேட்க.

கார்திகேயனோ, அம்மு பிடிக்கலனு சொல்லுமா பொறுக்கி வேல பாத்தவ கூடஎல்லா நீ வாழ வேண்டாம். நீ என் கூட வாடாமா போலிஸ்ல ஒரு கம்பிளைன் கொடுக்கலாம் என கூற.

மாப்ள உன் லைப்கு வில்லனே மாமாதாடா என சிவா கூறி அமைதியாக சிரிக்க.

உமையாளோ, அண்ணா என்ன பேசிறிங்க துருவ் நம்ப பைய அவன போய் கம்பிளைன் அது இது சொல்லிக்கிட்டு என கூற.
கயலோ, ஹரிணியை பார்த்து நீ என்னமா சொல்லுற என தலையை வருட. உங்களுக்கு சம்மதம்னா எனக்கு சம்மதம்.
இவ்வளவு வருஷம் வளத்தவங்களுக்கு தெரியாதா என் வாழ்க்கை எங்க இருந்தா நல்லா இருக்கும்னு என மறைமுகமாக சம்மதம் தெரிவிக்க.


கயலோ மகிழ்ச்சியில் அவளை அணைத்துக்கொண்டார்.பிறகு ஆசையானவளே மருமகளாக வந்தால் எந்த மாமியாருக்குதான் பிடிக்காமல் போகும்.சிவாவோ, மாப்ள உன் ரூட் கிளியர். ஆதவ் என்ன ஆக போறானோ என கிசுகிசுக்க.


பெண்கள் அனைவரும் ஹரிணி சம்மதம் சொன்னதில் சற்று மனம் தேறியிருக்க.ஆனால் ருத்ரா தேன் மொழியை நினைத்து பயந்துதான் இருந்தனர்.
நீ(யே)யா......?
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Siva,Dhuruv,Aathav combo super.
Ruthra is ready to fire. Monae Aathava be ready.
Vishnu nee enga poonalum unnakum irruku celebration, so veegam veetukku varennae. Suda suda vango appo than konjam escape aaga mudiyum.
 
Nice epi dear.
Siva,Dhuruv,Aathav combo super.
Ruthra is ready to fire. Monae Aathava be ready.
Vishnu nee enga poonalum unnakum irruku celebration, so veegam veetukku varennae. Suda suda vango appo than konjam escape aaga mudiyum.
Nice epi dear.
Siva,Dhuruv,Aathav combo super.
Ruthra is ready to fire. Monae Aathava be ready.
Vishnu nee enga poonalum unnakum irruku celebration, so veegam veetukku varennae. Suda suda vango appo than konjam escape aaga mudiyum.
Tqqqq...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top