நினைவெல்லாம் நீ(யே)யா_14

Advertisement

கல்யாண வேலையில் வீடே பிசியாக இருக்க. இரவு தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தான் விஷ்ணு.

வாயிலிலே அவனை பார்த்த மீனாட்சி. ஏய் இங்க வாடா என அழைக்க. விஷ்ணு வண்டியை நிறுத்திவிட்டு அவரிடம் சென்றான்.

காலையில போனவ இப்ப நேரம் என்ன ஆகுது என மீனாட்சி கேட்க.

இல்ல , அப்பத்தா கொஞ்ச வேல இருந்தது அதா, என அவர் முகத்தை பார்க்காது தரையை பார்த்தபடி கூறினான்.

சரி, எதாவது சாப்பிட்டியா என விஷ்ணுவின் தலையை வருடியபடி கேட்க.

அப்பொழுதுதான் அவனுக்கு பசியின் ஞாபகமே வந்து வயிற்றில் எலி உருள. இல்ல பாட்டி என்றான்.

என்னடா நீ, என்ன வேலையா இருந்தாலும் சாப்பிட்டு பாக்கமாட்டியா. என வருந்தியபடி. சரி வா நா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என உள்ளே சென்றார்.

என்ன அப்பதா, எதுக்கு சாப்பாடு எடுத்து வைக்கறிங்க என ஹரிணிக் கேட்க,

விஷ்ணு இன்னும் சாப்பிடலடி மா , அதா எடுத்து வைக்குறேன், என மீனாட்சி கூறியபடி, உணவுகளை மேசையின்மீது அடுக்க தொடங்கினார்.

விஷ்ணு தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு.சாப்பிட வந்து அமர்ந்தான். அவனை பார்த்த ஹரிணி, வாங்க பிசி மேன். சாப்பிடாத அளவுக்கு அப்படி என்ன வேல உங்களுக்கு என நக்கல் பொதிந்த குறலில் கூற. தேன்மொழி என்ன வேல இருக்கபோகுது, உங்க அண்ணணுக்கு. எந்த பொண்ணுபின்னாடி சுத்தினானோ என கையில் நெயில் பாலிஷை ஊதியபடி கூற.

விஷ்ணு இருந்த கடுப்பில் கையில் டம்ளரை எடுத்தபடி, இருவரையும் திரும்பி ஒருமுறை முரைக்க. அடி ஆத்தி இவ ஏ இப்ப முரைக்கிறா மண்ட பத்திரம் ஹரிணி ஓடிடு என மூளை எச்சரிக்கை கொடுக்க ஓடிவிட்டாள். தேன் தன் பணியை மேற்கொள்ள. விஷ்ணு சாப்பிட்டு சென்றுவிட்டான்.

புலர்ந்த காலைபொழுதில் கல்யாணவீட்டிற்கே உரிய சத்தத்துடன் வேலையில் ஈடுபட்டிருந்தனர் குடும்பத்தினர்.

என்ன கவிதா இன்னும் ரெடியாகாம இருக்க என உமையாள் கேட்க.

இதோ ரெடியாகிற அண்ணி, அந்த பார்லர் பொண்ணு பூ கேட்டுச்சி கொடுத்துட்டு வந்திடுறேன் என கூறி, ருத்ராவின் அறைக்குள் சென்றார் கவிதா. அங்கு ருத்ராவை பார்த்தவர் அசந்து நின்றார்.

சிகப்பு நிற பட்டுபுடவையில் "ஆதிமுதல் அந்தம் ஆபரணம் பூட்டி" எனும் வரிக்கு ஏற்ப. தங்கத்தால் அலங்காரம் செய்து பாவைப்போல் உள்ள ருத்ராவை பார்த கவிதா மேசையின் மீதிருந்த காஜலை எடுத்து காதுக்கு பின்னால் மையால் திருஷ்டி பொட்டிட்டு, அழாகா இருக்க யாரு கண்ணும் படக்கூடாது என நெட்டிமுறிக்க. கவிதா என்னும் உமையாளின் அழைப்பில் வெளியே சென்றுவிட்டார்.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பி ஹாலுக்கு ஒவ்வொருவரும் வர ஆண்கள் அனைவரும் ஒன்றாக பட்டு வேட்டி சட்டையில் இருக்க. பெண்கள் அனைவரும் மஞ்சள்_ பிங்க் நிற பட்டு புடவையில் வந்தனர்.


ருத்ராவைப்போல் சிவப்புற நிற புடவையில் தயாராகி வந்தனர் ஹரிணியும், தேன்மொழியும்.

இவர்களை பார்த்த கார்திகேயன், அடடா, கல்யாண பொண்ணு ருத்ராவா இல்ல ஹரிணியா? என கேட்க.

மாமா, ஓட்டாதிங்க என்றாள் கையை காலை ஆட்டியபடி.

ஓட்டலடா அம்மு, அவ்ளோ அழகா இருக்க என கண்ணத்தை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்க. அங்கு வந்து சேர்ந்தனர் சிவா, ஆதவ், துருவன், விஷ்ணு.

கிளம்பலாம் தாத்தா வண்டி வந்திடுச்சி என சிவா கூற.

எல்லாரும் வாங்க புறப்படலாம். இப்பவே மணி ஏழறை ஆச்சி, ஐயர் கோவிலுக்கு வந்துட்டனு அப்பவே போன் பண்ணிணார். வாங்க போகலாம் என விருதாசலம் கூற, அனைவரும் காரில் கோவிலை நோக்கி சென்றனர்.

திருவிழா என்பதால் கோவிலில் கூட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.அதிலும் அம்மன் வாக்குபடி விருதாசலம் வீட்டு கல்யாணம் என்பதால் ஊரே கோவிலின் முன் கூடியிருந்தது.

கல்யாணம் முடிந்தவுடன் ஊருக்கே விருந்திற்கு ஏற்பாடு பண்ணியிருக்க,ஊரில் உள்ள சிறுவர் முதல் வயதானவர் வரை அனைவரும் கோவிலின் முன்பு கூடியிருந்தனர்.

விருதாசலம் வந்தவுடன் ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி பேசிவிட்டு. அம்மனுக்கு அலங்காரம் செய்ய சென்றனர்.

விருதாசலமத்தை பார்த்த மாணிக்கம் , கல்யாணம் முடிஞ்சவுடனே அம்மன நகர்உலாக்கு கொண்டுசெல்லலாம் என கூற.

சரி மாணிக்கம் நானும் அததா சொல்ல வந்தேன் என்றார் விருதாசலம்.

என்னயா விருதாசலம் கல்யாணத்துக்கு உங்க சொந்தம் பலர காணோம் என்றபடி வந்தார் சுப்பு.

அதுவா சுப்பு, தீடிர் கல்யாணம்னு அம்மன் சொன்னதால பலருக்கு சொல்லல. கல்யாணம் முடிஞ்சதும் எல்லாருக்கு சொல்லி ஒரு விருந்து வச்சிடலானு விட்டுட்ட என கூற. அதுவும் சரிதா என்படி சுப்பு கூற. இருவரும் ஐயரிடம் சொன்றனர்.

கோவிலில் உள்ள ஒரு தனி அறையில் ருத்ரா, ஹரிணி, தேன்மொழி மூவரும் அரட்டை அடித்து கொண்டு இருக்க, வீட்டு மற்ற பொண்கள் வேலையில் இருந்தனர்.

விருதாசலத்தை பார்த்த ஐயர், வாங்க ஐயா என வணங்கி, நாழி ஆகுறது நானே உங்கள அழைக்கலானு இருந்த பொண்ணையும் மாப்பிள்ளையும் அழைச்சிட்டு வாங்க என்க.

விருதாசலம் அருகில் இருந்த மீனாட்சியை பார்க்க, உமையாள் நா அழைச்சிட்டு வரேன் அத்தை என சொல்லி சென்றார்.

துருவை அழைத்து வந்த சிவாவும் ஆதவும் அவன் அருகே இருக்க.
துருவன் ஆதவை பார்த்து ஒற்றைபுருவம் உயர்த்தி எல்லா ஓகே தானே என்றபடி தலையை ஆட்ட.


ஆதவும் எல்லா ஓகே என்றபடி இரு கண்களையும் மூடிதிறந்தான்.

இருவரும் கண்களால் பேசிக்கொண்டிருக்க, உமையாள் ருத்ராவை மண்டபத்திற்கு அழைத்துவந்திருந்தார்.

விருதாசலம் ருத்ராவை பார்த்து சிரித்தபடி, வாங்க எல்லாரும் என்படி கருவறையை நோக்கி நடக்க. அவர் பின்னாலே அனைவரும் சென்றனர்.

கருவறையின் வெளியே அனைவரும் வரிசையாக நிற்க. ருத்ராவின் வலப்புறம் ஹரிணியும் தேன்மொழியும் நிற்க இடபுறம் மீனாட்சி பார்வதியும் நின்றிருந்தனர்.

துருவனின் வலப்புறம் ஆதவும், இடப்புறம் விஷ்ணுவும் சிவாவும் நின்றிருந்தனர்.

ஐயர் இருவர் கையிலும் காப்பு கட்டிவிட்டு, அம்மனிடம் மாங்கல்யத்தை வைத்து பூஜை செய்த தட்டை உமையாளிடம் கொடுக்க, அவர் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்து ஐயரிடம் கொடுக்க, ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என கூறி கையை அசைக்க, வாத்தியங்கள் முழங்க கையில் மாங்கல்யத்தை எடுத்த துருவனின் நெற்றியிலிருந்து புருவத்தின் வழியே வியர்வை வழிய ஒரு பெருமூச்சை விட்டபடி எதிரே இருந்த ருத்ராவை பார்க்க. அவளும் அவனையே பார்க்க.

கண்களை மூடி திறந்தவன் ருத்ரா அருகே இருந்த ஹரிணியின் கழுத்தில் தாளியை கட்ட, அனைவரும் அதிர்ந்த நேரத்தில் ஆதவ் ருத்ரா கழுத்திலும், விஷ்ணு தேன்மொழி கழுத்திலும் தாளியை கட்டினர்.

துருவனை கவனித்தவர்கள் ஆதவ் விஷ்ணுவின் செயலால் மேலும் அதிர்ந்து நிற்க.

தேன்மொழி கழுத்தில் தாளி கட்டிய விஷ்ணுவோ யாரையும் பார்க்காமல் சட்டென வெளியேற. பெண்கள் மூவரும் எதிர்பாராத திருமணத்தில் சற்று அதிர்ந்துதான் நின்றனர்.

நீ(யே)யா....?
 

Shaloo Stephen

Well-Known Member
Super epi.
Naan ippadi ethavathu twist irrukum nu ethirparthan aana triple twist??? Ha ha ha....
Ellam thirudanuga.
Ippo Harini,Thenu, Ruthra reaction????
Interesting.
veegam varennae.
Waiting eagerly for next epi.
 
Super epi.
Naan ippadi ethavathu twist irrukum nu ethirparthan aana triple twist??? Ha ha ha....
Ellam thirudanuga.
Ippo Harini,Thenu, Ruthra reaction????
Interesting.
veegam varennae.
Waiting eagerly for next epi.
Super epi.
Naan ippadi ethavathu twist irrukum nu ethirparthan aana triple twist??? Ha ha ha....
Ellam thirudanuga.
Ippo Harini,Thenu, Ruthra reaction????
Interesting.
veegam varennae.
Waiting eagerly for next epi.

Tqq
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top