நினைவெல்லாம் நீயா அத்யாயம்._5

Advertisement

முதல்வரிடம் பேசிவிட்டு அங்கிருந்த காவலரின் உதவியுடன் தன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டாப்ரூமை நோக்கி சென்றான் விஷ்ணு. அங்கிருந்த HOD யிடம் தன்னுடைய பணிநியமன பேப்பரை காட்டி தன்னுடைய வேலையை உறுதி செய்துக்கொண்டான்.

HOD விஷ்ணுவிடம் சில சுயவிவரங்களை பற்றி பேசிவிட்டு, வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார்.
கடைசி வகுப்பறைக்குள் நுழைந்தபோது மாணவர்கள் அனைவரின் சலசலப்பும் எழுந்து நிற்கும் ஓசையும் கேட்டு எழுதிக்கொண்டிருப்பதை விட்டு வாயில் பக்கம் திரும்பினாள் தேன்மொழி.


HOD உடன் விஷ்ணு நின்றிருப்பதைப்பார்த்து அதிர்ந்தவள்.
பின் HOD கூறியதைக்கேட்டு விரைத்து நின்றாள்.


குட் மார்னிங், ஸ்டுடென்ஸ், இது நம்முடைய நியு ஸ்டாப் மிஸ். விஷ்ணு.
இன்னில இருந்து உங்களுக்கு வகுப்பு எடுக்க தொடங்குவார்.என HOD கூறிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பியுன், மேம் உங்கள பிரின்சிபால் சார் வர சொன்னார். என கூறி சென்றான்


ஓகே, விஷ்ணு நீங்க உங்கள அறிமுகப்படுத்திக்கோங்க. என கூறிவிட்டு, தேன்ழொழி கொஞ்சம் வெளியே வாங்க என கூறியபடி வெளியே சென்றார்.
மாணவர்களுக்கு முதுகை காட்டியபடி, வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த தேன்மொழியை பார்த்து கண்ணடித்தான் விஷ்ணு.


விஷ்ணுவை முரைத்தபடி, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பொறுக்கி என்று சொல்லி சென்றாள்.

HOD, தேன்மொழியிடம் இனி நீங்களும் விஷ்ணுவும் சப்ஜெட் ஷேர் பண்ணிக்கொங்க. இன்னிக்கு மட்டும் அவரோட கோ_ ஆடினேட் பண்ணுங்க என கூறி சென்றுவிட்டார்.

தனியே வெளியே நின்ற தேன்மொழி, கடவுளே, இவ கூடயொல்லா சேர்ந்து வேல செய்யனுங்கிறது என் தலை எழுத்து என புலம்பியப்படி வகுப்பறையுனுள் சென்றாள்.

ஹலோ சார், ஐம் தேன்மொழி, இனி நீங்களும் நானும் சப்ஜெக்ட் ஷேரர். இன்னிக்கு உங்க
கூட
கோ_ ஆடினேட் பண்ண சொன்னாங்க.
நீங்க கிளாஸ் எடுங்க நா பின்னாடி இருக்கேன் என பின் பெஞ்சில் அமர்ந்துக் கொண்டாள்.


ஹாய் ஸ்டுடென்ஸ், நா விஷ்வா உங்க தேன்ழொழி மேம் என்ன பாடம் எடுக்கறாங்களோ இனி நா அத கோ_ ஆடினேட் பண்ணுவேன். முதல்ல நமக்குள்ள ஸ்டுடென், டிச்சர்னு பாண்டிங் இல்லாம ஒரு நல்ல பிரண்டா இருக்கலாம். ஏன்னா என்ன பொருத்தவர ஒரு நல்ல பிரண்டாலதா, நல்ல ஸ்டுடண்டையும், டிச்சரையும் உருவாக்கமுடியும் சோ வீ ஆர் பிரண்ஸ் (அதனால் நாங்கள் நண்பர்கள்) என கூறியபடி பெண்களிடம் சென்று தங்களைப் பற்றி
சொல்லும் படி கூறினான்.


இதை கவனித்த தேன்மொழி, எல்லாரையும் பேசியே கவுத்திடுவா.பொறுக்கி , அது என்ன முதல்ல பொண்ணுங்க பேரதா கேக்கனுமா, பசங்க பேர முதல்ல கேட்டா என்னவா என நொடிந்து கொண்டாள்.

அன்றைய நாள் இருவருக்கும் டாம் அன் ஜெரி சண்டை சத்தமில்லாம தொடர தேன்மொழி மாலை சீக்கிரமே வீட்டிற்கு சென்றாள்.

மாலை நேரம், கையில் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் நுழைந்தான் துருவன்.

அவனை முதலில் பார்த்து அதிர்ந்த மீனாட்சி, ஏய்யா பேராண்டி என்னயா ஆச்சி, கைய்யெல்லா ரத்தமா இருக்கே என மீனாட்சியின் குரலைக்கேட்டு சமையல் அறையில் இருந்த கயல்விழி, உமையாள், ஹரிணி மூவரும் ஹாலை நோக்கி சென்றார்.

அதெல்லா ஒண்ணும்இல்ல அம்மாச்சி, என கையை உருவ முயன்றுக்கொண்டிருந்தான்.

என்னடா ஒண்ணும்இல்ல கைல ரத்த வழியுது என்ன ஆச்சு வா ஆஸ்பெட்டல் போகலாம் என துருவனின் கையை திருப்பி திருப்பி பார்த்த படி கூறினார் கயல்விழி.

அம்மா அதெல்லா ஒண்ணும் வேணாம், கழுவிட்டு ஆயில்மெண்ட் போட்டா சரியாகிடும் என்றபடி தன் கையை உருவ முயன்று கொண்டிருந்தான்.

ஹரிணி, ஓடிச்சென்று அலமாரியில் இருந்த முதலுதவி பெட்டியுடன் துருவனின் கையைப் பிடித்து சோபாவில் அமரவைத்து பச்சுக்களைக் கொண்டு கையில் உள்ள ரத்தத்தை துடைத்து எடுத்து சில மருந்துகளை வைத்து கட்டு கட்டினாள். பிறகு வீட்டு வேலையாளிடம் சில மருந்துகளை வாங்கிவர சொன்னாள். மருந்துகள் வந்ததும் காயம் செப்டிக் ஆகாமல் இருக்க துருவனின் திரண்ட புஜத்தில் மெல்லிய சிரஞ்சியை செலுத்தினாள்.

ஹரிணி சிகிச்சை அளிக்கும் போது அவள் கவனத்தை சிதைக்காதவண்ணம்
அமைதியாக அவள் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தவன் சிரஞ்சியின் உதவியுடனே சுயநினைவிற்கு வந்தான்.


உடனே மீனாட்சி, பக்கத்திலயே டாக்டரவச்சிக்கிட்டு வச்சிகிட்டு நம்ப புலம்பிக்கிட்டு இருக்கிறோம் கயலு, என மகளின் கையை பிடித்துக் கூறினார்.

தன் அத்தையிடம் சென்ற ஹரிணி, மாத்திரைகளைப் பற்றி கூறிக்கொண்டிருந்த போது, என்ன வழியெல்லாம் ரத்தமா இருக்கு என எண்ணியபடி உள்ளே நுழைந்த தேன்மொழியின் கண்ணில் முதலில் பட்டது கையில் கட்டுடன் இருந்த துருவன் தான்.

ஓடிச்சென்று, என்னடா என்ன கையில கட்டு? என கையை பிடித்து பார்த்தாள்.

இன்னக்கு ஒரு ரவுடிய புடிக்க போனஇடத்துட கம்பி கிழிச்சிடுச்சி.என்றான் சாதாரணமாக.

லூசாடா நீ கம்பி இருக்கறது கூடவா தெரியல? என்றாள் கோபமாக.

நான் என்ன உன்ன மாதிரியாடி எல்லா மெதுவா செய்ய கொஞ்சம் விட்டிருந்த அந்த ரவுடி மிஸ் ஆகியிருப்பா. அதா சரியா கவனிக்காம ஓடிட்ட என்றபடி.
என்ன அம்மாச்சி எல்லாரும் ஒண்ணாவந்திருக்கிங்க என்ன விஷயம்? என பேச்சை மாற்றினான்.


அவனின் பேச்சால் அனைவரையும் கவனித்த தேன்மொழி சிரித்தபடி ஹரிணியிடம் சென்றாள்.

அதுவந்து பேராண்டி, நாளைக்கு நம்ப புதுசா கட்டபோற மாலுக்கு பூஜ போடுறோம் அத சொலுலிட்டு போலானு வந்தேன். நீயும் வந்திடுடா என பேரணியின் கையை பிடித்துக் கூறினார்.

அதற்கு பிறகு அனைவரும் சற்று நேரம் பேசிவிட்டு புறப்பட்டனர்.

நாளை பூமி பூஜையில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுக்கு காத்திருப்போம்.

படித்து விட்டு கதை எப்படி உள்ளது என கமாண்ட் பந்துங்க பிரண்ஸ் .....

நீ(யே)யா.........?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top