அருமையான பதிவு மித்ரா பரணி.என்ன தான் காபியின் காதலனாக இருந்தாலும் மனு ஜலதோஷத்துக்கு மருந்தாக கூட இஞ்சி,துளசி டீ குடிக்க மாட்டானா.
விசாகனுக்கு பாசப் புதையல்,மரியாதை சுரங்கம்,ஹீரோ.மனுவுக்கு தன்னம்பிக்கையின் தனிச்சுரங்கம்,பேனா முனையை போல கூர்மையானவர்,எழுதும் எழுத்தைப் போல அர்த்தமானவர், அழுத்தமானவர் என மனுவின் பெற்றோர்களை பற்றி கூறியது அருமை.
வெறித்தனமான காபி வெறியர்.உமையாளிடம் இருந்ததின் இணை கடிகாரம் மனுவிடம் எப்படி.அப்பாவின் "காதல் வந்ததும்" கவிதை தொகுப்பை மனு படிக்கும் நேரம் வந்து விட்டதா.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மித்ரா பரணி.