நம்பிக்கை அதுதான் வாழ்க்கை

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அன்புடையீர் வணக்கம்

இதை படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.
இறைவன் படைப்பில் நாம் எதற்காக பூலோகத்திற்கு வந்தோமோ அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் நமக்கு மரணம் சம்பவிக்காது

பயம், கவலைகளை விட்டு நிம்மதியாக வாழுங்கள்
கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன ஒரு புல் கூட நம் மரணத்துக்கு காரணமாகி விடும்
படைத்த ஆண்டவனே நினைத்தால் கூட நம்மை காப்பாற்ற முடியாது

கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட MGR & ராதா இருவருமே சாகவில்லை
ஆனால் கட்டுமஸ்தான உடல் பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார்

புராணங்களிலும் இதற்கான உதாரணம் உண்டு
பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடியப் போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்பிக்க மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு பூ நாகம் தீண்டி உயிரிழந்தார்

அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதனாலும் நம்மைக் கொல்ல முடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள்

பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும்

தென்னை மரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்தவனும் உண்டு
திண்ணையிலிருந்து விழுந்து உயிர் போனவனும் உண்டு.
அமைதியும் ஆனந்தமும் பெற்று வாழ்க!

நம்மை படைத்த இறைவன் நம்மை முழுமையாக காப்பாற்றுவான் என்று நம்பிக்கையுடன் வாழ்வோம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top