தேவதையிடம் வரம் கேட்டேன் P10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
download (24).jpg


அக்ஷையும் மதியும் வண்டியை நிறுத்தி விட்டு அக்ஷயின் வீட்டுக்குள் நுழைய



"நிர்மல் எங்க இருக்கான்?" ஸ்வீட்டி மதியின் கையை பிடித்து நிறுத்திக் கேக்க



அவளை புருவம் உயர்த்திப் பார்த்த மதியோ! "நீ நிர்மல காதலிக்கிறாயா?" என்று கேட்க ஸ்வீட்டியின் கண்கள் கலங்கி இருந்ததே ஒழிய பதிலில்லை.



அவள் கலங்கிய கண்களை பதிலாக எடுத்துக் கொண்ட மதி "நிர்மல் அந்த வீட்டில் இருக்கிறான் போய் பார்த்து விட்டு வா" என்றவள் அக்ஷையோடு உள்ளே செல்ல ஸ்வீட்டி நிர்மலை பார்க்க சென்றாள்.

download (14).jpg

ஸ்வீட்டியாக இருக்கும் ஸ்வீட்டியின் அக்கா ப்ரீத்தி வருமுன் ஸ்வீட்டியை அங்கே இருந்து அழைத்து செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் அக்ஷையையும் மறந்து வாசலுக்கு வந்த மதி மாவிலையை எவ்வாறு கழற்றுவதென்று யோசிக்க அக்ஷய் அவளிடம் வந்திருந்தான்.



"என்ன ஆச்சு மதி"



அவனைக் கண்டு முகம் மலர்ந்தவள் காதில் கிசு கிசுக்க அவள் நெருக்கம் தந்த கிரக்கத்திலையே! அவள் சொன்னது போல் சோம்பல் முறித்து தவறுதலாக மாவிலை தோரணம் கையில் சிக்கி கழன்றது போல் பாவனை செய்தவன் மதி வெளியேறியபின் அதை இருந்தது போல் கட்டி விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான்.



"ஏன் மதி அதை கழற்றி விட்டே வந்திருக்கலாமே! எதற்கு தற்செயலாக கழன்றது போல் பாவனை செய்யணும்" தனக்குள் எழுந்த சந்தேகத்தை கேட்க



"இந்த தடவ மந்திரம் தெரிஞ்ச ஆவியோட மோதுறோம், அதோட பலம் என்னனு நமக்கு தெரியல, அதான் அப்படி செய்ய சொன்னேன்"



"ஸ்வீட்டி வந்துட்டாங்களா?"



"ஆமா பின்னாடிதான் அமர்ந்திருக்கா"



"கண்ணாடி வழியாக பின்னாடி பார்த்தவாறே ஸ்வீட்டிமா உனக்கு அண்ணனா நான் இருக்கேன். உன் பிரச்சினையை சரி பண்ணலாம் ஓகே வா" என்றவாறே வண்டியை கிளப்ப



"இவனுக்கு இப்படியெல்லாம் பாசமாக பேச வருமா?" என்று ஆச்சரியமான பார்வையை அக்ஷயின் புறம் வீசினாள் மதி.



அவனோ அவளைக் பார்த்து "நிர்மல் உனக்கு ப்ரெண்டுனா? அவன் வைப் எனக்கு தங்கச்சியாக இருக்க கூடாதா?" என்று கண்சிமிட்ட



"வர வர இவன் பண்ணுறதெல்லாம் ஏடா கூடமாகவே இருக்கு மதி" தனக்கு தானே புலம்பிக் கொண்டவள் அமைதியாக அமர்ந்துக் கொள்ள வண்டியை வீட்டுக்கு செலுத்தினான் அக்ஷய்.

images (6).jpg

நிர்மல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க அவனருகில் சென்ற ஸ்வீட்டி "நீ கண்டிப்பா என்ன தேடி வருவான்னு தெரியும். உன்ன ஒரு தடவையாவது பார்க்கணும் னு தான் அத்தனை வலியையும் தாங்கிக் கொண்டு இருந்தேன். உன்ன பார்த்துட்டா போதும் னு இருந்தேன். பார்த்த பிறகு உன் கூட பேசணும், உன் கூட வாழனும் னு ஆசையா இருக்கு. என்ன செய்றது னு தெரியாம அழுது கிட்டு இருக்கும் பொழுது தான் மதி வந்தா. எனக்கு நம்பிக்கை இருக்கு, கூடிய சீக்கிரம் நீ என்ன பார்ப்ப, நாம சந்தோசமா வாழத்தான் போறோம்" என்றவள் அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அக்ஷையின் வீட்டையடைந்தாள்.



அக்ஷையின் வீட்டில் மதி ஒரு புறமும் அக்ஷய் ஒரு புறமும் அமர்ந்திருக்க, பிர்ஜு இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தான்.



"ஆ... பிர்ஜு இனி மேல் நான் காபி சாப்பிடுறதாக இல்ல. எனக்கு ப்ரெஷ்…..ஷா ஜூஸ் கொண்டுவா" அழுத்தி சொன்னவனின் கண்களோ! மதியின் உதட்டில் இருக்க





தன்னை வேண்டுமென்றே சீண்ட சொல்கிறான் என்று மதிக்கு நன்றாகவே புரிய அவனை கண்டு கொள்ளாது காபியை அருந்திக் கொண்டிடுந்தாள் மதி.



இப்போ தான் எழுத ஆரம்பிச்சேன் டீஸர் கேட்டதுக்காக போட்டேன்.:love::love::love::love::love:
 

rajienia

Well-Known Member
Akshay un kanuku sweety therinjala madhi payapilla una crt pana steps eduka arambichutan getha eru papom
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top