தேய்வது நிலவல்ல

Advertisement

வணக்கம் மக்களே,

இதே தேய்வது நிலவல்ல - 6 பதிவு செய்து விட்டேன், படித்து தங்கள் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை பகிருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

சென்ற பதிவிற்க்கு கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றி தோழமைகளே:):):)


தேய்வது நிலவல்ல



அத்தியாயம் – 6



Medical counselling நல்ல படியாக முடிந்து, நேத்ரா எதிர்பாத்தபடி அவளுக்கு அரசு கோட்டாவில் சீட் கிடைத்திட, அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அவள் மதிப்பெண்ணுக்கு சென்னையில் சீட் கிடைத்தாலும், அவள் மதுரையை தேர்ந்து எடுத்தால்.

தெடர்ந்து தான் சென்னையில் இருந்தால், தன்னால் தன்னிச்சையாக செயல் பட முடியாது, மேலும் அது தன் எதிர்கால திட்டங்களுக்கு தடையாக இருக்கும்.

என நினைத்தவள், மதுரையை தேர்ந்து எடுத்தால். அவளது வீட்டினர்க்கும் இதில் எந்த மணசுனக்கமும் இல்லை.

தன் முயற்ச்சிக்கும், மருத்துவம் பற்றிய தன் எதிர் கால கனவிற்க்கும், சென்னையில் இருந்து படிப்பது, அவளுக்கு சரிவராது.

அடுத்த வாரமே காலேஜ் வந்தவள், உரிய கல்லூரி கட்டணத்தையும்,விடுதி கட்டணத்தையும், சொலுத்தி, மற்ற எல்லா வேலைகளையும் முடித்தவள், கல்லூரி திறக்க இன்னும் இருபது நாட்கள் இருப்பதால் மீண்டும் சென்னை வந்தாள்.

அது மட்டும் அல்லாது அவள் படித்த பயிற்சி மையத்தில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஒரு கெட் டூ கெதர் நடக்கவிருந்தால், அதில் கலந்துக்கொள்ளவும், சென்னை வர வேண்டியிருந்தது.

இவள் சென்னை பயனம் மே இவளின் வாழ்வில் எதிர் கொள்ளபோகும் எல்லா பிரச்சைக்கும் காரணமாகும் என்பதை அவள் அறியால்.



.....................

அதியன் தன் வேலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தான், அவனின் கத்துக்கொள்ளும் ஆர்வமும், இந்த துறையில் அவனுக்கு இருந்த ஈடுபாடும், பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் விதமும்.

அவனுக்கு மிக பெரிய ஒர் வாய்ப்பை அவனுக்கு பொற்று தந்தது.

உலகின் முன்னனி நிறுவனங்களின், வலைதளங்கள் உருவாக்குவதும், அதனை பராமரிப்பதும் இவர்களின் வேலையாகும்.

அதில் சமீபமாக ஒரு பிரபல ஆன்லன் ஷாப்பிங் தளம், தன் வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில், இவர்களை அனுகியிருந்தனர்.

அதாவது பொதுவாக ஒருவர் தெடர்ந்து ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது அவருக்கு கிரடிட் பாய்ன்டுகள் கிடைக்கும், இவ்வாறு சேரும் பாய்டுகள் கொண்டு இலவச பரிசு பொருட்கள் அல்லது இலவச ஷாப்பிங் செய்யலாம்.

ஆனால் இந்த மாதிரி ரிவாட் பாயின்டுகளை பலர் பயபடுத்துவது இல்லை, பலர் இதை பற்றி அறிந்து இருப்பது இல்லை, இதை பயன் படுத்தி சிலர், இவர்களின் அக்கவுன்டை ஹக் செய்து அந்த ரிவாட் பாயின்டுகளை, தங்கள் தேவைக்கு பயன்படுத்தி பெருட்களை வாங்கிக்கொள்வர். (அதாவது பனம் செலுத்தாது).

ஒரு வாடிக்கையாளர், தனது ரிவாட் பாயின்டுகளை தான் பயன்படுத்தவே இல்லை என்றும், ஆனால் அதன் மூலம் பெருட்கள் வாங்கி இருப்பதாக மெசேக்ஜ் வந்ததாகவும், அந்த ஆன்லன் தளத்தில் புகார் தெரிவிக்க, அந்த நிறுவனம் அதன் உன்மை தன்மையை ஆராய்ச்சி செய், அவர்களுக்கு கிடைத்தே பல அதிர்ச்சி தகவல்கள்.

இந்த மாதிரியான திருட்டு வெகு நாட்களாக அந்த தளத்தில் நடைபெறுகிறது என்று கண்டுபிடித்தனர், ஆனாலும் அதை தவிர்க்க அவர்களால் முடியவில்லை.

அதனால் அவர்கள் அதியன் வேலை செய்யும், நிறுவனத்தை நாடியிருந்தனர்.

இந்த சவாலான வேலைக்கு அந்த நிறுவனம் அதியனை தேர்வு செய்த்து.

அதன் படி அவன் இன்னும் இரு தினங்களில் அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது.

இந்த வாய்ப்பு அவனுக்கு கிடைத்தில் அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, எல்லாமே அவன் வசபட்டதை போல் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.

வீட்டில் எல்லோரிடமும் தன் வெளிநாடு போவதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தான், எல்லோரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அவன் தங்கை தனக்கு அங்கு இருந்து வாங்கி வரவேன்டிய பெருட்களை பட்டியல் இட ஆரம்பித்தால்.

அவன் அன்னைக்கோ எவ்வளவு சம்பளம் கூடுதலாக கிடைக்கும் என்று கேட்டு அதற்கு கணக்குகளை போட ஆரம்பித்து இருந்தார்.

அதிகம் பேசாத வளவன் கூட தனக்கு புதிய மாடல் மடிகணினி வாங்கி வர சொன்னான்.

அதியன் தன் தந்தையிடம் வர, அவர் அவன் தலை தடவி அவனை தோளோடு அனைத்து, தட்டிக்கொடுத்தார்.

உங்களுக்கு பா ?

பத்திரம்மா திரும்பி வா, எல்லோரையும் பாத்துக்க என்றவர், அறைக்குள் சொன்றுவிட்டார்.

இப்படி சந்தோஷ மனநிலையில் கிளம்பி போகும் அதியன், திரும்பும் போது, வீட்டின் நிலை தலைகீழாக இருக்கும் என்றோ, தன் பிரியத்து உரியோரை இழந்து இருப்பான் என்றோ, அதில் தான் முற்றிலும் நிலைக்குலையும் நிலை வரும் என்றோ அறிந்து இருந்தால்? இந்த பயனத்தை தவிர்த்து இருப்பான்னோ என்னவோ?

.......................

நேத்ரா அன்று மாலை அவள் பயின்ற பயிற்சி மயத்தின் விழாவுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தால், ஒரு வெள்ளை நிறத்தில் பிங் எம்ராயிடிங் செய்யபட்ட அனார்கலி அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்து.

அதற்கு தகுந்த இமிட்டேட் நகைகளை அனிந்தவள், கண்ணாடியில் தன்னை சரிபார்த்தவள் கிளம்பி இருந்தாள்.

அவன் அணியும் எந்த உடையும் அவளுக்கு அழகையும், ஒரு நிமிர்வையும் கொடுக்கும்.

அந்த பயிற்சி வகுப்பில் பயின்றவர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் அதன் பங்கு தார்கள் என விழா ஆரம்பித்து.

சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துகளும், சில அறிவுரைகளும் கூற, பின் சிலர் பேசி முடித்தபின், பஃபே முறையில் உணவு வழங்கபட்டது.

அவரவர் தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு தங்கள் அங்கு அமைத்து இருந்த இடத்தில் அமர்ந்தே, நின்றோ உண்டுக்கொண்டு இருந்தனர்.

அவளுக்கு இந்த மாதிரி பார்ட்டிகள் அலர்ஜி, அதற்கு காரணம் இவள் வீட்டார், மாதத்தில் எப்படியும் 3 அல்லது 4 பார்ட்டிகள், அதில் அவர் அடிக்கும் குத்தும், நாகரிகம் என்ற பெயரில் பரிமாறப்படும் மதுவும், இவளுக்கு அறவே பிடிக்காத விஷயம், ஆனால் அதை தவீர்க்க முடியாது.

ஆனால் முடிந்த வரை தனியான இடத்தில் அமர்ந்தே அல்லது அங்கு வரும் சிறுவர்களுடன் கலந்தோ நேரத்தை ஒட்டிவிடுவாள்.

இங்கு அதே மாதிரி சற்று தனியான இடத்தில் தன் உணவு தட்டுடன் அமர்ந்துவிட்டாள்.

அவள் தோழிகள் இவளை விட சற்று மதிப்பெண் குறைந்தால், வேறு மாநிலத்தில் தான் அவர்களுக்கு சீட் கிடைத்து, அதனால் அவர்கள் இன்று வரவில்லை.

இன்னும் அரை மணி நேரம் இருந்து விட்டு கிளம்பிவிடலாம், என்ற யோசனையில் இருந்தவள் மீது, மொத்தமாய் கவிழ்ந்து அவள் எதிரில் இருந்தவன் கையில் வைத்திருந்த ஸ்டாபரி ஐஸ்கீரிம்.

நிமிர்தவள் அவன் கண்ணில் தெரிந்த பாவத்தில், அவன் இதை தெரிந்தே செய்யவில்லை என்பதை உணர்த்தின!

அவன் மண்ணிப்பை ஏற்றவள், அந்த எல் ஹாலின் விட்டு வெளிவந்தவள், அருகே இருந்த கழிவறையில் நிறைய பேர் இருந்தால், அடுத்த தளத்தில் இருந்த கழிவறை நேக்கி சென்றாள்.



அவள் அணிந்து இருந்த வெள்ளை நிற சுடிதாரில் கரை பட்டிருந்து உடனே அதை கழுவாவிட்டால் கண்டிப்பாக துணி பாழ்தான், அதே சமயம் அந்த வெள்ளை நிறம் ஈரம் பட்டவுடன், அப்படியே உடலோடு ஒட்டிக்கொள்ளும்.



அந்த நிலையில் திரும்ப இங்கு வர முடியாது, அங்கேயே நிற்கலாம் என்றால் அங்கு நிறைய பேர் இருந்தனர், அதனால் இங்கு வந்திருந்தாள்.



கழிவறையின் உள்ளே சென்று நன்றாக துடைத்துவிட்டு, சற்று ஈரம்மாக இருந்தால், அங்கேயே சற்று வெளிச்சம் குறைவான இடத்தில் நின்று இருந்தால்.



பொதுவாக நேத்ராவிற்க்கு எங்கு சென்றாலும் அந்த சூழ்நிலையை மாற்ற நினைக்கமாட்டாள், எந்த இடத்தில் இருந்தாலும் முந்தவரை அந்த சூழலில் தன்னை இனைத்துக்கொள்வாள், அவள் கடற்கரை சென்றாள் அந்த சூழல் மட்டுமே அவள் மனதில் மற்றவற்றை பற்றி சந்திக்கமாட்டாள்.

இப்போதும் அந்த சூழல் வெகு அமைதியாக இருந்து அதை அனுபவித்தபடி நின்று இருந்தால், அப்போது அந்த குரல் கேட்டது.



அது யாருடையது என்பதை ஊகிக்க அதிக நேரம் தேவைபடவில்லை, அது அந்த மையத்தின் ஒரு பங்கு தார்ர் ஆன வளவன் னுடையது, ஆனால் அந்த பெண் குரல்???

இவர் எப்போது இங்கு வந்தார்???

இவ்வளவு நேரம் ஹாலில் தானே இருந்தார்?????

ப்ளிஸ் சார் என்னை விட்டுங்க என் தம்பி, தங்கையின் எதிர் காலம் என்னை நம்பிதான் இருக்கு, எங்க அம்மா இந்த மாதிரி ஒரு விஷயம் கேட்டா உயிர்ரோடவே இருக்கமாட்டாங்க, நான் இதை யார்கிட்டையும் சொல்லமாட்டேன்.............

என்று தேம்பியது?!?!

ஆனால் இது எல்லாம் எனக்கு பொருட்டல்ல என்று சற்றும் இளாகது, எல்லாம் முதல அப்படிதான் சொல்லுவிங்க, அப்பறம் ...... எனக்கு தெரியாத எத்தன பேரபாத்து இருக்கேன்...!!!!! என்றது அவன் குரல்.



இங்க பார் இன்னும் உனக்கு 2 நாள் டயம் தரேன் அதுகுள்ள எனக்கு எல்லாம் நடக்கனும், அதை விட்டு வேற மாதிரி எதாவது பண்ணலாம் நினைச்ச விளைவுகள் என்னனு உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல...........

என்று மீரட்டியது அவன் குரல்............

பின் அவள் அழுகை ஒலியும்.... மேலும் சில குரல் கேட்டாலும் அது யார் என்று அனுமானிக்க முடியவில்லை......

சிறிது நேரம் கழித்து அனைவரும் வெளியேற, இவளும் ஒடி சென்று பார்தாள் அங்கு படியின் அருகில் ஒரு பெண் அழுதுக்கொண்டிருந்தாள்.

அவள் தோளில் கை வைத்து திருப்பியவள் அது தேவி என்றதில் அதிர்ந்து நின்றாள்!!!!!!!!!!!

நேத்ராவை அங்கு எதிர் பார்க்காத தேவிக்கும் அதே நிலை தான்!!??

அவளை அழைத்து சொன்று ஒர் இடத்தில் அமர வைத்தவள், அவள் பருக தண்ணீர் தந்தாள், பின் அவளை நோக்கி தப்பு செய்யாம ஏன் அழற......

என்ன நடந்து என்று அவள் கூற கேட்டவள், கண்களில் தீயின் சுவாலை.........................

நிலவு தேயும்.......























 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top