தாங்க முடியாத பல் வலியா ?

Advertisement

Eswari kasi

Well-Known Member
தாங்க முடியாத பல் வலியா ?

பல்வலி தாங்க முடியாது. பற்கள் மூளைக்கு அருகில் இருப்பதால் பல் வலியால் நரம்புகளும் பாதிக்கும். அதனால் தலைவலியையும் உண்டாக்கும்.

அதிக இனிப்பு சாப்பிடுவதாலும் சரியான பராமரிப்பு இல்லையென்றாலும் பற்களில் கிருமிகள் தாக்கம், பற்சிதைவு, ஈறு வீக்கம் ஆகியவை உண்டாகக் கூடும். இதன் காரணமாக வரும் பல்வலி தாங்க முடியாததாக இருக்கும்.

ஆரோக்கியமான ஈறு பற்களை இறுக பற்றியிருக்கும். பிரவுன் மற்றும் பிங்க் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஈறாகும். அதுவே செக்க சிவப்பாய் சிவந்திருந்தால் அந்த ஈறு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது என அர்த்தம்

பல் பிரச்சனையை போக்குவதற்கான இயற்கை வழி :

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கிராம்பு பொடி - அரை தேக்கரண்டி

செய்முறை :

முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போலக் கலக்குங்கள்.

இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும்.

இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும். தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top