தரையில் படுத்து உறங்குவதனால் கிடைக்கும் நன்மைகள்...

Advertisement

Eswari kasi

Well-Known Member
தரையில் படுத்து உறங்குவதனால் கிடைக்கும் நன்மைகள்...

கட்டிலில், அதுவும் பஞ்சு மெத்தையில் உறங்குவதை விட வெறும் தரையில் பாய் அல்லது துணியை விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. உடல் உஷ்ணம் குறையும், நீண்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது.

2. பொதுவாக முதுகின் கீழ் பகுதி வலியால் பாதிக்கபட்டவர்கள் தரையில் படுத்து உறங்கும் போது, ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது.

3. நீண்ட நேரம் தரையில் படுத்து உறங்கும் போது முதுகு தண்டு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை.

4. எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.

5. உங்கள் முதுகுத் தண்டிற்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவதே உங்கள் முதுகு தண்டு தான்.

6. தோள்கள், மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எழும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் ஏற்படும் வலிகள் அனைத்தும் நீங்கும்.

7. தரையில் படுத்து தலையணை இன்றி உறங்குவதால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

8. பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயதில் முதுகு கூண் விழுவதை தடுக்கிறது.

நல்ல தோற்றத்தில் மற்றும் நல்ல நிலையில் படுக்கும்போது, உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது. இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டபட்டு மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top