*தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்*

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
********************************************

ஓர் சுருக்கமான பதிவு......

தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247

உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள் 18
உயிர் மெய் எழுத்துக்கள் 216
ஆய்த எழுத்து 1

உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும்.

மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது.

உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும்.

ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க


மனித இனத்திற்கு முதன்முதலில் மொழியாக சிவபெருமானால் உருவாக்கபட்ட முதல் மொழி தமிழ் மொழி

முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அதை மேம்படுத்தினார்

அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார்.

இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம்

மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும், வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.

மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400 சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும் மற்ற 7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த 7200 சுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என சுவாசம் குறித்து கூறுகிறார் யூகிமுனி.

இப்போது உயிர்மெய்களுக்கு வருவோம் உயிர் மெய் எழுத்துகள் 216

சுவாசம் 21600, ஒர் உயிர்மெய் எழுத்தினுடைய சுவாசம் 100 மூச்சு பலனை தரகூடியது

ஆக 216×100=21600

நீங்கள் உயிர்மெய் எழுத்துகளை சொல்லும்போது 100 மூச்சு வீணாவது தடுக்கபடும்

தமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கவில்லை நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை

தமிழுக்கும் அமுது என்று பேர் இப்பாடல் முழுவதையும் ஆராய்க

அதாவது நமது தலையில் அமிர்தத்தை தருவதற்கு ஒரு எழுத்து உள்ளது அது ""ழ்"" இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்


அதேபோல் தமிழ் எழுத்தை வைத்து பஞ்சபூதங்களை இயக்க முடியும்.

மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து இருப்பதை அறியலாம். அதை முருக பெருமான் ஏன் கொடுத்தார் என ஆராய்க

தமிழ் எழுத்தில் கவனம் அதிகம் கொடுக்காத எழுத்து ஒன்று உள்ளது அதை தமிழரின் படைகருவிகளில் உபயோகபடுத்தியுள்ளனர்
அது ஆதியில் இ என்ற எழுத்துக்கு கொடுக்கபட்டது அது என்ன என கருத்தில் கொண்டு ஆராய்க.

குறிபிட்ட தமிழ் எழுத்துகள் கொண்டு சத்தம் எழுப்பி மனிதரின் மூளையை செயல் இழக்க செய்தனர் அது என்ன, என்ன எழுத்து என ஆராயவும்.

தமிழில் ஒரே ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ந்து சொன்னால் உயிர் பிரிந்து விடும் அதை ஆராய்க.

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை அது என்ன, என்ன எனவும், ஏன் எனவும் ஆராய்க.

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,ங

இதையும் கருத்தில் கொள்க

இறைவனால் கற்று கொண்டு வந்த இரண்டு உயிர் எழுத்து உ + அ = (குவா)

இன்னும் எம் தமிழில் நிறைய ரகசியம் உள்ளன.

தமிழை அதிகமாக பேசி சக்தி பெற முடியும்... வாழ்த்துகளுடன் l
 

Sumathi Thirumurugan

Active Member
அருமையான பதிவு
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
வாழ்க தமிழ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top