சாரல் 24

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer

ஹாய் நட்பூஸ்,


சாரல் 24 செய்துட்டேன். எப்பவும் லைக் கமெண்ட் செய்து எனக்கு ஆதரவு தரும் அன்பு உள்ளங்கள் எல்லாருக்கும் நன்றி. நான் எவ்வளவு லேட்டா எபி கொடுத்தாலும், அட போடான்னு கோச்சுக்கிட்டு போகாம, என்னுடனே பயணிக்கும் எல்லா நட்பூஸ்க்கும் என்னோட நன்றி நன்றி நன்றி.


A special thanks to shanthy durai aananthan sis, kalai karthi sis, sarojaa sis, rajammal sis, அஞ்சாயாள் சண்முகம் சிஸ், saras hp sis, sathish sis, saraswathy gurusamy sis, ketheeswary suresh sis, sahira safi sis, daffodil sis, indu karthick sis, vijirsn sis, anita karan sis, vanaja vanesh sis, siva geetha sis, srinithi sis keerthukutti sis, anitha mohan sis, elakkiya prakash sis, sanju saraka sis, renugarajan sis, sathya sis uma sai sis, ums sis, kavitha subramani sis, latha veerasamy sis, shobha kalirajan sis, padmavathy sis, jayabharathi senthil kumar sis, krishnavani krishnan sis, veena sis, vijaydharuayar sis, raji mani sis, n. Palaniappan sis, amudha vinoth sis, rsakthi sis, rabi sis, lakshmi murugan sis, thenmozhi kavitha sis, rohini kanishka sis, ammu ammukutty sis, fathima naziah sis, sathya sspmk sis, lekshmikala sis, subha senthilkumar sis, priyadharshini ratheesh sis, ela mathi sis, remo raj sis, dharun adithya sis, sathish sis, Msmurthy sis, kalai vani sis, rose mary sis, malina jankiram sis, indra muthu sis, porkodi balaji sis, jahubar sis, moorthy sis, uma sugumar sis, sridevi sri sis, sowmiya balaji sis, priyatharshini vamadevan sis, venmathi.m sis, devi tamil sis, எல்லாரையும் சொல்லிட்டேன் என்றே நினைக்கிறேன். Ud எழுதுறதை விட இந்து தான் கடினமான வேலை என்று நினைக்கிறேன் மக்களே. யாரையாவது விட்டுவிட்டேன் என்றால் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்படி குறிப்பிட மறந்துட்டேன் என்றால் மன்னிச்சுக்கோங்கமக்களே.


சிலர் படிக்க கஷ்டமா இருக்கு என சொல்வதால் தான் font size பெருசாவே போடுறேன் நட்பூஸ். யாருக்காவது அது கஷ்டமா இருந்தா சொல்லுங்க. அதே மாதிரி போன ud1800

வார்த்தைகள். என்னோட சரித்திரம் பூகோளம் எல்லாத்துலையும் இப்ப தான் 1500ku மேல ud டைப்பே பண்றேன். அதை சின்னதுன்னு சொல்லி என்னோட மனசை உடைக்காதீங்க மக்கா. ஆனா இன்னைக்கு சின்ன ud தான் 1300. அதே மாதிரி எனக்கு சோல்டர் pain இருக்கு. ரொம்ப ஸ்டைன் செய்தா என்னோட வீட்டு வேலையை கூட என்னால பார்க்க முடியாது. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா பதிவு போட்டுடுறேன் அதே மாதிரி அன்று பதிவு போடுறேன் என்றால் சொல்லிடுவேன் மக்களே. கோச்சுக்காதீங்க ப்ளீஸ்.


இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

நான் உங்கள்

சுதீக்ஷா ஈஸ்வர்






சாரல் 24


பிருந்தாவின் முகவாட்டத்தில் மனம் வாடிப் போன விஷ்வா, அவளது ஆசைக்காக நாளை அவளை அழைத்து செல்வதாக வாக்கு கொடுத்தான். அதனைக் கேட்டு பிருந்தா துள்ளி குதிக்காத குறையாய் மகிழ, அவளது மின்னும் விழிகளைக் கண்டு புருவம் சுருக்கினான். அவனது பார்வைக் கண்டு உசாரானவள், “அடியேய்! கொஞ்சம் அடக்கி வாசி! அப்புறம் மாமா கண்டுப்பிடிச்சா… அவ்வளவுதான்!” மனம் மணி அடிக்க, தனது உற்சாகத்தை மறைத்துக்கொண்டு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள். அடுத்த நாள் விஷ்வாவும் அவளுக்காக காத்திருக்க, குதித்துக் கொண்டு வந்தவள், “மாமா மாமா! அந்த பேக்கரில சூடா பப்ஸ் கிடைக்கும் சாப்பிடாலாமா?” பாவமாய், ஆர்வமாய் அவள் கேட்க,


“இதற்குத்தானா?” எனும் பார்வை பார்த்தவன், “நெனச்சேன் அப்பவே இப்படி எதாவது ஒன்னு இருக்கும்னு!” அவளை செல்லமாய் வைதாலும், அழைத்து செல்லவும் மறக்கவில்லை.

தங்களுக்கு ஒரு டேபிள் பார்த்து அமர்ந்துக் கொண்டவள், அடிக்கடி வெளியே பார்ப்பதும் படபடப்பாய் நகம் கடிப்பதுமாக இருக்க, ஓரக்கண்ணால் அவளது செய்கை அனைத்தையும் விஷ்வா கவனிப்பதை முதலில் அவள் உணரவில்லை. “பிந்து எதுக்கு இவ்வளவு டென்ஷநா இருக்க?” விஷ்வாவின் கவனம் மெனுகார்டில் நிலைத்திருந்தாலும், குரல் பிருந்தாவிடம் வினவியது.


அதில் திடுக்கிட்ட பிருந்தா, “நானா… நா…ன் நான் எதுக்கு டென்ஷனா இருக்க போறேன்? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!” பதற்றத்தை மறைக்க இலகுவாக உரையாட முயன்றாலும், உள்ளதை உள்ளது போல் காட்டும் அவளது பளிங்கு முகத்தை அவன் ஏறிட்டு பார்த்துவிட்டு அமைதியாக இருந்தான்.


சிறிது நேரத்திற்கெல்லாம் சரண்யா அங்கே வந்துவிட, கண்ணாடி தடுப்பின் வழியே தோழியைக் கண்டவள், பெருமூச்செறிந்தாள். இவர்களைக் கண்டதும் சரண்யாவின் முகம் பளிச்சென்றாகிவிட, கதவில் கை வைப்பதற்கு முன் தன்னை ஒருமுறை சரிசெய்துக் கொண்டாள்.

உதட்டில் முகிழ்த்த குறுநகையுடன் இவர்களை நோக்கி வந்த சரண்யாவின் ஹாய் எனும் குரலில் தான் தனது தலையை நிமிர்த்தினான் விஷ்வா. “ஹாய்!” மரியாதைக்கு அவனும் சொல்ல, “நீங்க பேசிக்கிட்டு இருங்க! நான் எதாவது சூடா இருந்தா வாங்கிட்டு வரேன்!” என பிருந்தா நடையைக் கட்ட,


“ஒஹ் பக்கி இதுக்குதான் நம்மை வர சொன்னுச்சா!” என நினைத்தபடி அமர்ந்திருந்தான், விஷ்வா. லேசாய் சரண்யா தனது தொண்டையை செரும, அதில் தனது கவனத்தை அவள் புறம் திருப்பிய விஷ்வா, அவளையே பார்த்திருக்க, “ஹா…ய் நா…ன் சரண்…யா..!” எனும் சரண்யாவின் தடுமாற்றத்தில் விஷ்வா லேசாய் புன்னகைக்க, “ஐயோ சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கானே! என்ன சொல்ல வந்தேனே மறந்துடுவேன் போலயே!” சரண் மனதிற்குள் நினைக்க, “ம்ம்ம் சொல்லுங்க” என்றான் விஷ்வா, இலகுவாய்.


“அது… நான் உங்களை உங்களை…” அவள் தடுமாற, முகத்தில் எதையும் காட்டாது சுற்றி முற்றி பார்த்தான் விஷ்வா. அவனது கவனம் சுற்றுபுறத்தில் பதிந்திருந்தாலும், அதில் பாதி பிருந்தாவை சுற்றி தான் இருந்தது. அவனது கவனம் தனது பேச்சில் இல்லை என்பதை தாமதமாக உணர்ந்துக்கொண்ட சரண்யாவும், அவனது பார்வை போகும் திசையை பார்க்க, அவளிதழில் ஒரு மலர்ச்சி தோன்றியது.


“நீங்க பிருந்தாவை விரும்புறீங்களா?” சட்டென கேட்க, பிருந்தாவிடம் பார்வையை பதித்திருந்த விஷ்வாவுக்கு சில நொடிகள் கழித்தே அவளது வார்த்தைகள் சென்றடைந்தது. அதில் அதிர்வுடன் எதிரில் இருப்பவளை பார்க்க, ஒருநொடி மொழி புரியாதவன் போல புருவம் சுருக்கி புரியாது பார்க்க, அவனுக்கு புரியாததை உணர்ந்து, “நீங்க பிருந்தாவை லவ் பண்றீங்களானு கேட்டேன்?” நிறுத்தி நிதானமாய் ஒரு வார்த்தையாய் அவள் உச்சரிக்க, அப்பட்டமான அதிர்வு அவன் முகத்தில்,

நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவன், இல்லை எனும் விதமாய் தலையசைத்து மறுக்க, “பொய் சொல்லாதீங்க! நீங்க அவ இங்கிருந்து போன இந்த பத்து நிமிஷத்துல உங்க கண்ணு சுத்தி வேடிக்கை பார்க்கிற மாதிரி இருந்தாலும், அது அவளை மட்டும் தான் அதிக நேரம் பார்த்துச்சு!” சரண்யா பட்டென சொல்ல, பெரும் திகைப்பு அவனிடம்.


“அப்படியெல்லாம் எதுவுமில்லை நீயா எதுவும் சொல்லாத!” விஷ்வாவின் குரலில் கோபமில்லை. அதனை சரண்யாவும் உணர்ந்தே இருந்தாள். “இப்பகூட நான் சொன்னதுக்கு நீங்க கோபப்படலை! அப்ப கன்பார்ம்மா அதுதான்!” என்றவளுக்கு,


“நீயா எதாவது சொல்லாத! சின்ன வயசுல இருந்து அவ அவங்க வீட்டுல அவங்க அம்மாக்கூட இருந்த நேரத்தை விட, அவ எங்க வீட்டுல என் கையை பிடிச்சுட்டு இருந்த நேரம் தான் அதிகம்!” பதிலிறுத்த விஷ்வாவுக்கு,


“ஒஹ் அப்ப இது லவ் இல்லைன்னு நீங்க சொல்றீங்க?” கிண்டலாய் சரண்யா கேட்க, “உன்ன ஊர்ல இதுதான் லவ்வா? தானும் கிண்டலாய் கேட்டான்.


“இல்ல அவ எழுந்து போனதுல இருந்து இந்த நொடி என்கிட்ட இல்லைன்னு சொல்லி பேசிக்கிட்டு இருந்தாலும், அவ மீதான உங்க பார்வையில மாற்றம் இல்லை. ஒரு வேளை இது லவ்வா இருந்தா அவளுக்காக நான் ரொம்ப சந்தோசப்படுவேன்!” என்றவளின் முகத்திலும், குரலிலும் நிச்சயம் பொறாமையின் சுவடு கிஞ்சிதுமில்லை. அதில் தோழிக்காக மகிழும் ஒரு நல்லெண்ணம் தான் மிகுந்திருந்தது.


அவளது கூற்றில், திகைப்பு மாறாது அவளையே பார்த்திருந்தான் விஷ்வா. என்ன பெண் இவள் என்று தான் அவனுக்கு தோன்றியது.

“ஹலோ என்ன நான் சொன்னது கரெக்ட்டா?” அவள் கேட்க,


“இல்ல நீ எப்படி பட்ட பொண்ணுன்னு யோசிக்கிறேன்!” மறைக்காது மொழிந்தான் விஷ்வா. அதற்கு மலர்ந்த புன்னகை தான் அவளிடமிருந்து. “ஆமா என்னைய நினைக்கிற இதயம் தானே எனக்கு வேண்டும்! உங்க இதயம் தான் உங்ககிட்ட இல்லையே!” என்ற சரண்யாவை திகைத்துப் போய் பார்த்தான் விஷ்வா.


“போதும்ங்க ரொம்ப ஷாக் ஆகாதீங்க! நான் பார்த்தவரை நீங்க ரொம்ப நல்ல பையன் தான். என் பிரெண்ட்க்கு அவளை புரிஞ்சிக்கிட்ட, அவளுக்கு எல்லாத்துலையும் பக்கபலமா இருக்க, அவளை சின்ன வயசுல இருந்து கண்ணும் கருத்துமா பார்த்துக்கிற, நீங்க, அவளோட லைப் பார்ட்னரா வந்தா… அவளை விட நான் தான் அவளுக்காக ரொம்ப ரொம்ப இந்த உலகத்துலயே சந்தோசப்படுவேன்!” தோழிக்காக அகம் மகிழ்பவளின் எண்ணம் ஈடேறி இருந்திருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது! இருவரும் பிரிந்து தங்களது வாழ்வை தொலைத்து, நடைபிணமாய் வாழ வேண்டும் என்பது தான் விதியோ!


அவளது வார்த்தைகளைக் கேட்டு அகமகிழ்ந்து போனான் விஷ்வா. அதன் விளைவாய், அழகாய் கன்னக்குழி தெரிய அவன் புன்னகைக்க, “அப்பா! ஆணழகங்க நீங்க! இப்படியெல்லாம் சிரிச்சு என்னைய வில்லி ஆக்கிடாதீங்க!” குறும்பாய் அவள் சொல்ல, பெரிதான புன்னகை அவனிடம்.



“அப்பா உங்க சிரிப்பை நாள் முழுதும் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல. இதை சொன்னதுக்கு தான் ஒருத்தி அன்னைக்கு சாமி ஆடினா!” போற போக்கில் அவள் சொல்லிவிட, அந்த சம்பவத்தின் பின்னணியை கேட்டு அறிந்துக் கொண்டான், விஷ்வா. பிருந்தா வரவும், அவளிடம் சொல்லிவிட்டு இவள் புறப்பட, இவனை நச்சரிக்க ஆரம்பித்தாள், பெண். “மாமா… மாமா அவ என்ன சொன்னா மாமா?” விடாது கேட்க, அவனிடம் தான் பதிலில்லை. அவனது மனமோ பிருந்தா சரண்யாவிடம் பேசியதிலேயே நிலைத்திருந்தது. அதையே அவள் விதவிதமாய் வித்தியாசமாய் வழி நெடுக கேட்டு வைக்க, ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் வாய் மூடி மௌனியானாள். “இரு இரு எங்கிட்ட மாட்டாமலா போவே அப்ப உன்னை கவனிச்சுக்கிறேன்!” என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டவள், இறங்கும் நேரம் அதனை அவனிடம் சொல்லவும் செய்தாள்.


மனம் முழுதும் சரண்யாவின் வார்த்தைகள் தான் அவனுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அதையே நினைத்தபடி வீட்டுக்குள் விஷ்வா வர, “வா விஷ்வா சாப்டியா? இவ உன்னை ரொம்ப படுத்திட்டாளா?” சிநேகமாய் கேட்ட கீதாவைக் கண்டு, தனது எண்ணம் போகும் பாதையைக் கண்டு அதிர்ந்துப் போனான்.


“இதை எப்படி நான் மறந்துப் போனேன்? உன்னை நம்பி தானே அவங்க வீட்டுக்குள்ள விட்டுருக்காங்க! அவங்களுக்கே நீ துரோகம் செய்ய பார்த்தியேடா விஷ்வா!” அவன் மனசாட்சி இடித்துரைத்ததில் நிலைக்குலைந்துப் போனான், ஆணவன். மனதெங்கும் பாரமேறி போக, அத்தையிடம் உணவை மறுத்துவிட்டு தனதறைக்கு வந்தவன் உடையைக் கூட மாற்ற தோன்றாது அப்படியே படுக்கையில் வீழ்ந்தான். ஏதேதோ நினைத்தவன் மனம் புயலில் சிக்கிய படகாக தத்தளித்தது. பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், “என்னோட எண்ணம் அத்தைக்கு மட்டுமில்லை யாருக்குமே தெரியக்கூடாது. என்னோடது காதலே கிடையாது. அந்த சரண்யா பொண்ணு சொல்லவும் கொஞ்சம் தடுமாறிட்டேன்!” தனக்குள் பலமுறை உருப்போட்டுக் கொண்டவன், மனதுக்கும் மூளைக்குமான போராட்டத்தில் சோர்ந்து போனாலும், இறுதியில் தனக்குள் ஒரு முடிவெடுத்தவனாய் உறக்கத்தை தழுவினான் விஷ்வா. அவனது முடிவு வெற்றி பெறுமா? தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பானா விஷ்வா?



அவனது முடிவுக்கு சோதனை அடுத்த நாள் காலையிலேயே விடிந்தது. “டேய் டேய் விஷ்வா ப்ளீஸ் எனக்கு ஒரு உதவி செய்றியா?” என்ற கீதாவிடம், “ஏன் அத்தை! உதவினா கேட்கணுமா? செய்டானா செய்யப் போறேன்!” தானே வாயைக் கொடுத்து மேனியை புண்ணாக்க போவது அறியாது வாக்கு கொடுத்தான் விஷ்வா. “இந்த பிருந்தாவை இன்னைக்கு போய் காலேஜ்ல விட்டுட்டு வந்துரியா? அவ காலேஜ்ல ஏதோ பங்ஷனாம். இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்காம் உங்க மாமாக்கு. எனக்கும் வீட்டுல வேலை நிறைய இருக்கு இந்த உதவி மட்டும் செய்டா கண்ணா!” அண்ணன் மகன் தவறாக நினைத்திடுவானோ என கிட்டத்தட்ட கெஞ்சினார், கீதா.


“ம்ம்ச் அத்தை நீங்க போய் அவளை வர சொல்லுங்க நான் வெளிய வெயிட் பண்றேன்!” தவளை தானே வாயை கொடுத்து மாட்டிக்கொண்டது. வண்டி துடைத்துக் கொண்டவன், “ம்மா நான் போயிட்டு வரேன்!” என்றவளின் குரலில் எதேச்சையாய் நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவன் தனது கண்களையே நம்ப முடியாது திகைப்பில் ஆழ்ந்தான். பிங்க் நிற புடவையில், அதற்கு தோதாக கடல் நீல நிற ப்ளவுஸ் அணிந்து தலைக்கு குளித்திருப்பாள் போலும், முடியை தளர பின்னி அதில் சரமாய் மல்லிகைப்பூ சூடி, மயக்கும் வன மோகினியாய் “மாமா போலாமா?” அவனிடம் தலையசைத்து கேட்க, அவளது அசைவுக்கேற்ப அவள் காதில் குடிக்கொண்டிருந்த குடை ஜிமிக்கியும் அவளுடன் நர்த்தனமாட, முந்தைய நாள் எடுத்த முடிவை செயல் படுத்த மிகுந்த பிரயத்தனப்பட்டான் விஷ்வா.



அவனிடம் அசைவில்லாது போகவும், “மாமா….. உன்னை தான்….. கேட்டேன்…. போகலாமா?” கத்தி கேட்க, அதில் தன்னிலை அடைந்தவன், நொடியில் தனது எண்ண குதிரைக்கு கடிவாளமிட்டு, “ஆஆ ஏண்டி இப்படி கத்துற? நீ கத்துறதுல எனக்கு காதே கேட்காம போய்டும் போல! காது கேட்காம போச்சுனா யாருடி எனக்கு பொண்ணு தருவா?” விஷ்வா சாமர்த்தியமாய் தன்னை மறைத்துக் கொண்டு சீண்டலாய் கேட்க,


அதில் ஒருநொடி அவனை ஆழ்ந்து பார்த்த பிருந்தா, தனக்கே உரிய குறும்பு கொப்பளிக்கும் விழிகளுடன், “என்ன மாமா திடீர்னு பொண்ணு கிண்ணுலாம் பேசுற? என்ன விஷயம்? ஏதாவது பொண்ணு எதுவும் பார்த்து வச்சுருக்கியா? யார் அந்த பொண்ணு? சரண்யாவா? நீ தயங்காம சொல்லு நான் யாருக்கிட்டயும் சொல்ல மாட்டேன்!” இருபுருவம் உயர்த்தி கிண்டலாய் கேட்டவள், பின் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே, குரலை தனித்து அவனிடம் ஆர்வமாய் வினவ,


அவளது பாவனையில் தொலைய துடித்த மனதை சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன், “யே வாலு இப்ப என்கிட்ட வசமா மாட்டினியா? மொளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள என்னென்ன வேலையெல்லாம் பார்த்து வச்சிருக்க?” என்றபடி அவளது காதினை பற்ற,


“ஐயோ… அம்மா…. என் காது… காது வலிக்குது! வலிக்குது விடு மாமா! விடு மாமா ஐயோ ரொம்ப வலிக்குது தயவு செஞ்சு விடேன் அம்மா அம்மா!” பெண்ணவள் அலற,


“கூப்பிடு.. கூப்பிடு.. நல்லா அத்தையை கூப்பிடு நானும் எங்க அத்தைக்கிட்ட நீ செஞ்ச வேலையை பத்தி சொல்றேன்!” விஷ்வா மொழிய, அதில் ஜெர்கானவள், “மாமா மாமா ப்ளீஸ் மாமா அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாத.. என் தோலை உறிச்சு உப்புக்கண்டம் போட்ருவாங்க. ப்ளீஸ் ப்ளீஸ்!” கண்கள் சுருக்கி அவள் கெஞ்ச, இதழ்களோடு அவளது விழிகளும் கெஞ்ச, அவளது விழி மொழிதனில், தான் எடுத்து வைத்திருந்த சங்கல்பம் அனைத்தும் தவிடு பொடியாகி, கரைந்து காணாமல் போவதை அதிர்வுடன் உள்வாங்கியவன், இனி மீளவே கூடாதெனும் உறுதியோடு அவளது விழிகள் எனும் ஆழியில் தன்னை தொலைத்திட, அவளுள் கரைந்து காணாமல் போய்விட, முடிவு செய்தான் மாயவன்…



சாரல் அடித்தது….

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top