சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 47

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.அர்ஜூன் முகம் சுளிக்காமல் சுத்தம் செய்தது தான் ஆருத்ரன் அவனை எதுவும் செய்யாமல் விட காரணம் என நினைத்தது சரிதான்:giggle::giggle::giggle:.

அன்னபூரணியும் கணவன் இதை செய்ய கடமை இருக்கு,அர்ஜூன் எந்தவித கூச்சமும் இல்லாமல் செய்வது பெரிய விஷயம் என மகனிடம் சொன்னதும் தான்,அவனை எதுவும் செய்யாமல் இருக்க காரணம்:sneaky::sneaky:.எல்லா கஷ்டங்களுக்கு பின் நல்லது காத்திருக்கு என நினைப்பதும்,இதுவும் நல்லதுக்கு தான் என ருத்ரன் சொல்வதும் அருமை(y)(y).

மாமியார் மேல உள்ள பாசத்துல பூரணி என மகளுக்கு பேர் வைக்கலாமான்னு கேட்க,மனைவி மேல் கொண்ட பிரியத்துல ஆசினி என வைக்கலாம்னு ருத்ரன் சொல்ல ஆசினினு என்னை மட்டும் தான் கூப்பிடனும் என அருள் சொல்ல ருத்ரன் என்ன பேர் வைக்க போறான்னு சஸ்பென்ஸா இருக்கு...

அமுதினியாள் அழகான பெயர்னு நெனச்சா,அருளோட அம்மா பெயரா:sneaky::sneaky:.அம்மா பெயர் வைத்ததை பார்த்து அருள் மகிழ்ச்சியில்:):):).அருள் சொன்னது போலவே அர்ஜூன் அவன் அம்மாவை அழைச்சுட்டு வந்துட்டான்(y)(y).
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஏண்டா ஏன் இப்படி :p:p:p
'ஆ'ருத்ரன்
அருளா'சி''னி'
ஆசினி ரைட்.......
பூர'ணி' ஆனால் அதுக்கு விளக்கம் சொன்ன பார்த்தியா :mad: அப்போ அது ஆசிணி தானே வரும்???
எப்படிடா 'னி''ணி' யம் ஒன்னாடா??? பேசாமல் 'அ ஆ பூ'-னு வச்சிடு.....
ப பா பூ னு வைக்கிறப்போ இதுவும் நல்ல தான் இருக்கும்.......

இந்த ஆசினி நம்மளை விட மண்டையை பிச்சிப்பா போல பேரென்னனு......
அமுதினியாள் :love: ஏண்டா டேய் இந்த பேர்ல ஒரு 'ஆ''ணி' யும் இல்லை :p

அடடா வர்றாண்டா உன் friend........ அவனுக்கும் ஒரு பொண்ணை பாருடா......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஆருத்ரன் சொன்னது உண்மைதான்
அர்ஜுன், அந்த ஆட்டோக்காரர் செஞ்ச மாதிரி எல்லோரும் கிளீனிங் செய்ய முன் வர மாட்டாங்க

இது தாய்மையை கௌரவிக்கும் ஒரு அருமையான செயல்
இதுக்காகவே அர்ஜுன் செஞ்ச எல்லாத் தப்பையும் மன்னிச்சுடலாம்

பாசம் காட்டிய மாமியார் பேரை குழந்தைக்கு வைக்க அருளாசினி ஆசைப்பட்டால் இவனோட மாமியார் பேரை ஆருத்ரன் வைச்சுட்டானே
இதுவும் நல்லாத்தானிருக்கு

குழந்தைக்கு செயின் போட அருள் சொன்னபடி அம்மாவுடன் வந்துட்டானா அர்ஜுன்?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அழகான
பேரு பாப்பாக்கு
அர்ஜுன் செஞ்ச நல்லத
நினைக்கும் அம்மா பையன்
ரெண்டு பேரும் சூப்பர்

அர்ஜுன் இங்க வருவது
தெரியும் ருத்ரனுக்கு
அம்மாவையும் கூட கூப்பிட்டு
வந்தது நல்லா இருக்கு
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top