குளிர் நிலவே

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"குளிர் நிலவே
குறையற்ற
உன் அழகில்
குற்றவாளியாய் மாறிடத்தான்
ஆசை வந்தடி
உன் கொள்ளை அழகை
கொள்ளை கொண்டிட"


"சிரித்திடும் உன் இதழில்
சில்லென்ற பனிதான்
சித்திரையிலும்
பொழியுதடி"


"பிறை நெற்றியின்
நடுவில் இருக்கும்
சந்தன பொட்டு அது
நானாக இருந்திடத்தான்
சாமியிடம் வேண்டினேனடி"


"சந்நியாசி என்னையும்
சாய்த்து விட்டாயே
சஹாராவில் வந்த
என் குளிர் நிலவே"


"உன் முகம்
காணாத ஓர் நொடிதான்
நூறு முறை
நொந்தேனடி
அமாவாசை இரவில்
அம்புலியை காணவேண்டும் என
அடம்பிடிக்கும் அறியாத பிள்ளை போல"


"குளிர் நிலவே
கொதித்திடும்
என் கோபம் கூட
ஆவியானதடி
அழகியே உன்
கடைக்கண் பார்வையிலே"


"குணம் அடைந்திடுவேனடி
கொல்லும் நோய் வந்தால் கூட
குளிர் நிலவே
உன் நிழல்படத்தைக்கண்டால் கூட"


"குளிர் நிலவே
என் குறைகளை சொல்லி
உன் மடிசாய்ந்திடத்தான்
நெஞ்சம் துடிக்கிறது
இரணத்தையெல்லாம்
குணப்படுத்திடத்தான்
இரத்தினமே நீ வருவாயா?"


"குளிர் நிலவே
என் குறையற்ற அழகே
என் நெஞ்சமதில்
குடியிருந்திடத்தான் வருவாயோ
என் வாசல் தேடி"


"விடை தேடி
உன் மடிதேடி
நான்
உன்னுடன் நான்
சேரும் நாள் எதிர்நோக்கி"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top