I R Caroline
Well-Known Member
பீச்ல எங்க பக்கத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டது...
அம்மா, "என்னங்க பொண்ணு போட்டோ பாருன்னு சொன்னா, உங்க பையன் என்ன சொல்றான்னு கொஞ்சம் கேளுங்க"
அப்பா, "தேவா பொண்ணு போட்டோ பார்த்துட்டு பிடிச்சிருக்கா சொல்லுன்னா அம்மாட்ட என்ன சொன்ன"
தேவா, "நான் FB-ல பார்த்து ஒரு பொண்ண லவ் பண்ணேன்பா"
"லவ் பண்ணியா... இப்ப பண்ணலயா... ஏன் என்ன ஆச்சு அந்த புள்ள வீட்ல பிரச்சினை பண்றாங்களா நான் வந்து பேசுறேன்"
"பிரச்சினை அவங்க இல்லைபா பொண்ணுதான்" அவங்க மக வேடிக்கை பார்த்துட்டு இருந்தவ திரும்பி தன் அண்ணனை கவனிக்க ஆரம்பிச்சா...
"அந்தப் பொண்ணு இன்னொரு பொண்ண லவ் பண்றாபா, கல்யாணம் பண்ணிட்டு அவள திருத்தலாம்னா, அவ முடியாதுனு சொல்லிட்டாபா" தங்கை தலை அடித்துக் கொண்டாள், ஆஹா இன்ரஸ்டிங்கா இருக்கேன்னு, நாங்க நல்லா திரும்பி உட்கார்ந்து கேட்க ஆரபிச்சோம்.
"பொண்ணு பொண்ண லவ் பண்றாளா... என்ன சொல்றான் உம்மவன்" அந்தம்மா அவர் காதில் சொன்னார், அவர் முகம் மாறி, "ம்ம்... சரி அது முடிஞ்சு போச்சு வேற என்ன"
"FB-ல வேற பொண்ண லவ் பண்ணேன்பா, அவளத் தேடி போனா, அவளுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குபா"
"ம்ம்... மேல சொல்லு"
"இன்னொரு பொண்ணு பார்த்தேன்பா, அவகிட்ட எந்த பிரச்சினையும் இல்லைபா, கல்யாணம் பண்ணிக்கவும் ஓகே சொல்லிட்டாபா, ஒரு வருஷம் கழிச்சு உனக்கும் எனக்கும் சரி வராதுன்னு சொல்லிட்டாப்பா"
"ம்ம்... மேல சொல்லு" அவன் தங்கையோ கன்னத்தில் கை வைத்து, அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள், நாங்களோ இன்னும் என்னதான் வருதுன்னு பார்ப்போம்னு கேட்டுக் கொண்டிருந்தோம்.
"இப்ப வேற பொண்ண லவ் பண்றேன்பா, அவ இல்லாம நான் இல்லை, நான் இல்லாம அவளும் இருக்க மாட்டா"
"ம்ம்... தெய்வீக காதலோ..."
அம்மா, "ம்கூம்... ரொம்பவே தெய்வீகம் அதையும் என்னனு கேளுங்க" மகளோ தன் அம்மாவை சந்தேகமாக பார்த்தாள், "என்ன ஏன் பார்க்க அவன் சொல்றத கேளு"
அப்பா மகனைப் பார்த்தார், "அப்பா என் கனவுல கடவுள் வந்து, நீ கட்டினா அந்தப் பொண்ணதான் கட்டனும், அப்பதான் நீ நல்லா இருப்ப, வேற பொண்ண கல்யாணம் செஞ்சா, அடுத்த நாளே செத்துருவன்னு சொன்னார்பா"
அம்மா, "ஆமாங்க தெய்வீக காதல்ங்க"
"ம்ம்... கடவுள் உன் கனவுல சொன்னாரா, சரி அந்தப் பொண்ணு யாரு என்ன செய்றா, அவ குடும்பத்தப் பத்திச் சொல்லு"
"அவ சினிமால நடிக்காப்பா"
அவன் சொன்னதும், அவன் தங்கை அவனை நல்லா உத்து உத்துப் பார்த்துட்டு, "சினிமாலயா... துணை நடிகையா நடிக்காளா..."
அம்மா, "ம்கூம்... ஆமா உன் அண்ணன நல்லா பாரு கோலமாவு கோகிலா படத்துல ஹீரோவா நடிச்ச புள்ளைக்கும், இவனுக்கு எந்த வித்தியாசமும் இல்ல, அப்படியே உன் அப்பா மாதிரி"
அப்பா, "நான் நல்லா இருக்கேனுதான கட்டிகிட்ட, அப்ப அவனுக்கும் அப்படியொரு புள்ள கிடைப்பா"
அம்மா, "எனக்கு தாய் தவப்பன் இல்ல, வேற போக்கிடம் இல்ல, தாய்மாமன் உங்கள கட்டிகிட்டேன், அந்தப் புள்ளைக்கு என்ன வந்துச்சு"
"உனக்கு ரொம்ப திமிரு, உன்ன பாவம் பார்த்து தாலி கட்டினேன்ல, அதுக்கு நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ, நீ சொல்லுப்பா யார் அந்தப் பொண்ணு"
எங்களுக்கும் ஆர்வம் தாங்கலை, அந்தப் பொண்ணு யார்னு தெரிஞ்சிக்க, ரொம்ப உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சோம், அதைவிட அவன் தங்கச்சி அண்ணன் நடிகையை லவ் பண்றான் என்றதும் "ஆ"-னு வாயைத் திறந்தவ மூடலை...
"காக்கிச் சட்டை படத்துல நடிச்சிருக்காப்பா"
தங்கச்சி, "அந்த படம் நான் பார்த்திருக்கேன் சிவகார்த்திகேயன் நடிச்சது, இவ எந்த கேரக்டர்ல நடிச்சிருக்கா"
"அவதான் ஹீரோயின்" அப்பா, "ஆ" வென்று நெஞ்சில் கை வைத்தார்.
அம்மா, "என்ன நெஞ்சு வெடிக்குதாக்கும், தெய்வீக காதல் அப்படித்தான் இருக்கும்"
தங்கச்சி, "அம்மா நிஜமாவே அந்த புள்ள இவன லவ் பண்ணுதா"
"ம்கூம்... அந்த மொபைல்ல அந்த புள்ள போட்டவ எடுத்து, இவன் பக்கத்துல வச்சு பாரு, அந்த புள்ள நெஞ்சு வெடிச்சு போயிடாது"
தேவா, "அம்மா கோலமாவு கோகிலா படத்துல, நயன்தாராதான் ஹீரோயின், அது மாதிரிதான் நாங்க" அவன் தங்கையோ சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சிட்டு இருந்தா.
அப்பாக்கு பயங்கர கோபம், "போறப்ப அந்தக் கடல்ல இவன தள்ளிட்டு போயிருவோம், அதான் அந்த புள்ளைக்கும், மத்த புள்ளைகளுக்கும் நாம செய்ற நல்ல காரியம்" என்றார்.
நாங்க அந்தப் பையனையே பார்த்துட்டு இருந்தோம், அம்மா எங்களிடம் திரும்பி, "சிரிக்கன்னா சிரிச்சிருங்க, நல்லா சிரிச்சா உடம்புக்கு நல்லது"
அம்மா, "என்னங்க பொண்ணு போட்டோ பாருன்னு சொன்னா, உங்க பையன் என்ன சொல்றான்னு கொஞ்சம் கேளுங்க"
அப்பா, "தேவா பொண்ணு போட்டோ பார்த்துட்டு பிடிச்சிருக்கா சொல்லுன்னா அம்மாட்ட என்ன சொன்ன"
தேவா, "நான் FB-ல பார்த்து ஒரு பொண்ண லவ் பண்ணேன்பா"
"லவ் பண்ணியா... இப்ப பண்ணலயா... ஏன் என்ன ஆச்சு அந்த புள்ள வீட்ல பிரச்சினை பண்றாங்களா நான் வந்து பேசுறேன்"
"பிரச்சினை அவங்க இல்லைபா பொண்ணுதான்" அவங்க மக வேடிக்கை பார்த்துட்டு இருந்தவ திரும்பி தன் அண்ணனை கவனிக்க ஆரம்பிச்சா...
"அந்தப் பொண்ணு இன்னொரு பொண்ண லவ் பண்றாபா, கல்யாணம் பண்ணிட்டு அவள திருத்தலாம்னா, அவ முடியாதுனு சொல்லிட்டாபா" தங்கை தலை அடித்துக் கொண்டாள், ஆஹா இன்ரஸ்டிங்கா இருக்கேன்னு, நாங்க நல்லா திரும்பி உட்கார்ந்து கேட்க ஆரபிச்சோம்.
"பொண்ணு பொண்ண லவ் பண்றாளா... என்ன சொல்றான் உம்மவன்" அந்தம்மா அவர் காதில் சொன்னார், அவர் முகம் மாறி, "ம்ம்... சரி அது முடிஞ்சு போச்சு வேற என்ன"
"FB-ல வேற பொண்ண லவ் பண்ணேன்பா, அவளத் தேடி போனா, அவளுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குபா"
"ம்ம்... மேல சொல்லு"
"இன்னொரு பொண்ணு பார்த்தேன்பா, அவகிட்ட எந்த பிரச்சினையும் இல்லைபா, கல்யாணம் பண்ணிக்கவும் ஓகே சொல்லிட்டாபா, ஒரு வருஷம் கழிச்சு உனக்கும் எனக்கும் சரி வராதுன்னு சொல்லிட்டாப்பா"
"ம்ம்... மேல சொல்லு" அவன் தங்கையோ கன்னத்தில் கை வைத்து, அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள், நாங்களோ இன்னும் என்னதான் வருதுன்னு பார்ப்போம்னு கேட்டுக் கொண்டிருந்தோம்.
"இப்ப வேற பொண்ண லவ் பண்றேன்பா, அவ இல்லாம நான் இல்லை, நான் இல்லாம அவளும் இருக்க மாட்டா"
"ம்ம்... தெய்வீக காதலோ..."
அம்மா, "ம்கூம்... ரொம்பவே தெய்வீகம் அதையும் என்னனு கேளுங்க" மகளோ தன் அம்மாவை சந்தேகமாக பார்த்தாள், "என்ன ஏன் பார்க்க அவன் சொல்றத கேளு"
அப்பா மகனைப் பார்த்தார், "அப்பா என் கனவுல கடவுள் வந்து, நீ கட்டினா அந்தப் பொண்ணதான் கட்டனும், அப்பதான் நீ நல்லா இருப்ப, வேற பொண்ண கல்யாணம் செஞ்சா, அடுத்த நாளே செத்துருவன்னு சொன்னார்பா"
அம்மா, "ஆமாங்க தெய்வீக காதல்ங்க"
"ம்ம்... கடவுள் உன் கனவுல சொன்னாரா, சரி அந்தப் பொண்ணு யாரு என்ன செய்றா, அவ குடும்பத்தப் பத்திச் சொல்லு"
"அவ சினிமால நடிக்காப்பா"
அவன் சொன்னதும், அவன் தங்கை அவனை நல்லா உத்து உத்துப் பார்த்துட்டு, "சினிமாலயா... துணை நடிகையா நடிக்காளா..."
அம்மா, "ம்கூம்... ஆமா உன் அண்ணன நல்லா பாரு கோலமாவு கோகிலா படத்துல ஹீரோவா நடிச்ச புள்ளைக்கும், இவனுக்கு எந்த வித்தியாசமும் இல்ல, அப்படியே உன் அப்பா மாதிரி"
அப்பா, "நான் நல்லா இருக்கேனுதான கட்டிகிட்ட, அப்ப அவனுக்கும் அப்படியொரு புள்ள கிடைப்பா"
அம்மா, "எனக்கு தாய் தவப்பன் இல்ல, வேற போக்கிடம் இல்ல, தாய்மாமன் உங்கள கட்டிகிட்டேன், அந்தப் புள்ளைக்கு என்ன வந்துச்சு"
"உனக்கு ரொம்ப திமிரு, உன்ன பாவம் பார்த்து தாலி கட்டினேன்ல, அதுக்கு நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ, நீ சொல்லுப்பா யார் அந்தப் பொண்ணு"
எங்களுக்கும் ஆர்வம் தாங்கலை, அந்தப் பொண்ணு யார்னு தெரிஞ்சிக்க, ரொம்ப உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சோம், அதைவிட அவன் தங்கச்சி அண்ணன் நடிகையை லவ் பண்றான் என்றதும் "ஆ"-னு வாயைத் திறந்தவ மூடலை...
"காக்கிச் சட்டை படத்துல நடிச்சிருக்காப்பா"
தங்கச்சி, "அந்த படம் நான் பார்த்திருக்கேன் சிவகார்த்திகேயன் நடிச்சது, இவ எந்த கேரக்டர்ல நடிச்சிருக்கா"
"அவதான் ஹீரோயின்" அப்பா, "ஆ" வென்று நெஞ்சில் கை வைத்தார்.
அம்மா, "என்ன நெஞ்சு வெடிக்குதாக்கும், தெய்வீக காதல் அப்படித்தான் இருக்கும்"
தங்கச்சி, "அம்மா நிஜமாவே அந்த புள்ள இவன லவ் பண்ணுதா"
"ம்கூம்... அந்த மொபைல்ல அந்த புள்ள போட்டவ எடுத்து, இவன் பக்கத்துல வச்சு பாரு, அந்த புள்ள நெஞ்சு வெடிச்சு போயிடாது"
தேவா, "அம்மா கோலமாவு கோகிலா படத்துல, நயன்தாராதான் ஹீரோயின், அது மாதிரிதான் நாங்க" அவன் தங்கையோ சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சிட்டு இருந்தா.
அப்பாக்கு பயங்கர கோபம், "போறப்ப அந்தக் கடல்ல இவன தள்ளிட்டு போயிருவோம், அதான் அந்த புள்ளைக்கும், மத்த புள்ளைகளுக்கும் நாம செய்ற நல்ல காரியம்" என்றார்.
நாங்க அந்தப் பையனையே பார்த்துட்டு இருந்தோம், அம்மா எங்களிடம் திரும்பி, "சிரிக்கன்னா சிரிச்சிருங்க, நல்லா சிரிச்சா உடம்புக்கு நல்லது"
Last edited: