கல்யாண கண்டிஷன் அப்ளே.... Teaser -2

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க...

இதோ அடுத்த டீசரோடு வந்துட்டேன்... முன்னாடியே போட வேண்டியது ஆனா நான் கொஞ்சம் சோகம் ஆயிட்டேன் அதுனால போடல... சாரி டியர்ஸ்...

டீசர் படிச்சுட்டு ஹாப்பியா காலை பொழுதை ஆரம்பிங்க செல்லம்ஸ்....

அவளது பார்வையை அவனும் சளைக்காமல் எதிர் கொள்ள.இருவரும் ஒருவர் விழியினுள் மற்றோருவர் உணர்வுகளை தேட முற்பட்டனறோ என்னவோ... அப்பொழுது பார்க்கிங்க்கு வந்த வேறு ஒரு வாகனத்தின் ஹாரன் ஒளியில் கலைத்தனர் இருவரும்.

தன்னை எதற்கு பின் தொடர்ந்து வந்தாள் என்று தெரிந்தும் அவள் அதற்காக இன்னும் தன்னிடம் சண்டை பிடிக்கவில்லையே என யோசித்தக் கொண்டு இருக்க, தாம் அவனை பின் தொடர்ந்து வந்த நோக்கம் நினைவிற்கு வர, கோபமாக அவன் புறம் திரும்பினாள்.

அதை கவனித்தவனோ மனதில், " ஆஹா... நியாபகம் வந்துருச்சு போல.... ஆரம்பிடி ராசாத்தி...."

" உன் கிட்ட என்ன டா சொன்னேன்....." கோபத்தில் முகம் சிவக்க அவள் கேட்க,

" என்ன சொன்ன....???" கூலாக பாண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்து எதிர் கேட்டவனை கொலவெறியில் பார்த்தவள்,

" சும்மா சைட் அடிக்குறதே வேலையா போச்சு இவளுக்கு.... கொஞ்சம் ஹான்சம்மா இருந்திர கூடாது பார்வையிலே சாப்பிட்டுறுவா...." அவளுக்கு கேட்கும் வண்ணம் சற்று சத்தமாகவே முணுமுணுத்தான்.

சிறிது நேரத்திற்கு முன்பு அவன் செய்த செயலில் கோபத்தில் இருந்தவள் இப்பொழுது அவனது இந்த பேச்சில் மேலும் அவளது கோபத்திற்கு தூபம் போட சண்டைக்கு முழு வீச்சில் தயார் ஆனாள்.

" அன்னைக்கு கோவில்ல என்ன சொன்ன.... இன்னைக்கு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பண்ணின.... அன்னைக்கு பெருசா வீர வசனம் பேசுன... இன்னைக்கு எங்க போச்சு அந்த வசனம் எல்லாம்...." கோபத்தில் அவள் எகிற,

நிதானமாக இரு கைகளையும் நெஞ்சிற்க்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்து, " கடையில் வச்சு நீ நடந்துக் கிட்ட விததிற்கும், பேசுன பேச்சுக்கும் கிடைச்ச தண்டை தான் அது.... "தொடர்ந்தான்

" அப்புறம் என்ன சொன்ன வீர வசனமா??? அத நான் மறக்கலே மேடம்.... " என்றவனை கேள்வியாக பார்த்தவளின் பார்வையில் அவனது செயலுக்கான விளக்கத்தை கேட்கும் தோரணையை புரிந்து கொண்டவன்,

"என்ன பார்க்குற? நான் உன்னை தொட மாட்டேன்னு சொன்னேன் அதே போல நான் உனக்கு நேரடியா எதுவும் தரல.... நல்லா யோசிச்சு பாரு..." என்று பாதியில் நிறுத்த, முழுவதுமாக குழம்பி போனாள் மஹா....

'இல்லையே.... அவன் முத்தா குடுத்தானே... ஒரு வேலை கனவு கண்டோமோ....' என யோசித்தபடி தன் ஷாலின் நுனியை திருகியவாறே நின்றவளின் கண்கள் அகல விரிந்தது. அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது கண்கள் புரிந்த பாவனையில் அவளுக்கு புரிந்து விட்டது என்று அவன் புரிந்துக் கொண்டான்.....

;););):p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top