கற்பூர முல்லை Episode 11

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 11


தமிழுக்கு நிர்வாக பொறுப்புகளை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. இதற்கிடையில் காயூ விடம் பேசவும் நேரத்தை ஒதுக்கினாள். அகிலன் வார இறுதியில் தன் வீட்டிற்கு வர சொன்னதை மறந்தே விட்டாள்.

ஆனால் இங்கு அகிலனின் நிலையோ எப்பொழுது ஞாயிற்றுக்கிழமை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். இதற்கிடையே அவனுக்கு தமிழை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு ஆபிஸில் சென்று பார்க்கலாமா? என்று எண்ணினான். அது முறையல்ல என்று மனதுக்கு தோன்றினாலும் வேறு வழியில்லை என்றே தோன்றியது. இந்த நினைப்பு வந்தவுடன் மனம் உற்சாகம் அடைந்தது. அதற்கு தடை போடாமல் தமிழின் ஆபிஸிற்கு சென்றான்.

வரவேற்பில் விசாரித்து அனுமதி பெற்று அவள் அறைக்குள் நுழைந்தான். நிமிர்ந்து பார்த்த தமிழ் இவனை சற்றும் எதிர்பார்க்க வில்லை. அது அவள் பார்வையிலேயே தெரிந்தது. என்ன மேடம் என்னை எதிர்பார்க்க வில்லை போல் தெரிகிறது என்றான். அதற்கு அவள் ஆமாம் என்று சொன்னாள். தாங்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை தான் இங்கே ஒரு கேஸ் விஷயமாக வர வேண்டி இருந்ததால் உங்களையும் பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தேன் என கூறினான்.

ஓ...சரி என்றாள். அதற்கு அவன் ஞாயிறன்று வருவதாக கூறியது நினைவிருக்கிறதா......? என்றான். அச்சோ அதை மறந்தே விட்டேன் என்றாள். கூடவே அதை காயூவிடம் கூட சொல்லாததும் நினைவிற்கு வந்தது. தற்போது அதையெல்லாம் விடுத்து அகிலனுக்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல் இருந்தாள். அதை அவன் புரிந்து கொண்டவன் போல் தாங்கள் பல வேலைகளில் இருப்பீர்கள்.....இதெல்லாம் நினைவிருக்குமா என்ன...? என்றான். அவள் சாரி என்றாள். அவன் பரவாயில்லை ஆனால் மறக்காமல் வாருங்கள் என்றான். இதை சொல்லிவிட்டு டைம் ஆகிவிட்டது நான் வருகிறேன் என்றான். ஏதாவது சாப்பிட்டு.. ......என்று சொல்ல வாயெடுக்கவும் இல்லை ஒன்றும் வேண்டாம் நான் வருகிறேன் என்று கூறிவிட்டு அட்ரஸ் மெசேஜ் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான். இவ்வளவு தூரம் கூப்பிடுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என யோசித்து அதன் முடிவு தெரியாமல் அலுவல்களை கவனிக்கலானாள். கூடவே இதை காயூவிடம் சொல்ல வேண்டும் அதற்கு அவள் என்ன சொல்வாளோ என தெரியவில்லை என்று நினைத்தாள்.


இரவு இதை சொன்ன போது என்னடி... ..இதெல்லாம் என்று கேட்டாள். வாராவாரம் விருந்திற்கு செல்வதற்காகவா சென்னை சென்றாய் என்றாள். தமிழிற்கு என்ன பதில் உரைப்பது என்றே தெரியவில்லை. அதற்காக அகிலன் அழைப்பை மறுக்கவும் முடியாது இருந்தாள். காயூவிற்கு இவள் நிலை புரியவே உன் நல்லதுக்கு தான் சொன்னேன். உனக்கு இஷ்டம் இருந்தால் போய் வா எனக்கு இதில் ஒன்றும் ஆட்சேபனை இல்லை உன் நலன் தான் முக்கியம் என்றாள். தமிழுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

அகிலன் கூறிய நாளும் வரவே வேலைக்கார பெண்மணியை வர வேண்டாம் என்று சொல்லியிருந்தாள். கிளம்பும் முன் காயூவிடம் சொன்னாள். அவள் எதற்கும் கொஞ்சம் கவனமாக இரு என்றாள். சரியென்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டு கிளம்பினானள். ஸ்கூட்டியை எடுத்து சென்றால் அட்ரஸ் கண்டு பிடிக்க லேட் ஆகும் என்று நினைத்து கேப் புக் பண்ணி டிரைவரிடம் அட்ரஸ் சொன்னாள்.

அகிலன் இவள் வரப்போவதை அனைவரிடமும் சொன்னபோது அவர்களும் ஒரு வித எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால் அகிலன் மனம் அவளிடம் விழுந்திருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இது யதார்த்தமாக நடக்கும் விஷயம் என்றே எண்ணினார்கள்.

அங்கு இவள் சென்று இறங்க வாசலிலேயே காத்திருந்தான் அகிலன். இந்த இவளை கண்டதும் வாங்க தமிழ் என்று வரவேற்றான். இவள் வருவதால் நாய்கள் இரண்டையும் சங்கிலியால் பிணைத்து இருந்தார்கள். ஆனாலும் புது ஆள் என்பதால் இவளை பார்த்ததும் குறைத்தது. காம்பவுண்ட்டிற்குள் வந்ததும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான் அகிலன். சொல்லிக்கொண்டிருக்கும் போதே குமாரும் மனைவியோடு வந்து சேர்ந்தான்.

ராசாத்தி அக்கா எல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று காலை உணவு உபசரிப்பில் இறங்கினாள். உடனே மாமாவும் நானும் பரிமாறுகிறேன் என்று இறங்க அந்த இடமே கலைகட்டியது. அகிலன், தமிழ், தங்கை திவ்யா, தம்பி கார்த்திக், இந்த குமார், பவி, குழந்தைகள் என அனைவரும் அமர இருவரும் பரிமாறினர். பின்பு அவர்கள்இருவரை அமர வைத்து பவியும், தமிழும் பரிமாறினர்.

பிறகு தமிழை உட்கார வைத்து ராசாத்தி அக்கா எல்லாவற்றையும் விசாரித்தாள். தமிழ் பிறந்தது முதல் நடந்தவை அனைத்தையும் விரிவாக சொன்னாள். இனி நீ எதற்கும் கவலைபடாதே.... நாங்க இருக்கிறோம் என்றாள் ராசாத்தி அக்கா. இனிமேல் கண்டிப்பாக வாரம் ஒருமுறை வர வேண்டும் என்றான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அகிலனுக்கு அவளை அனைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. பின்பு அகிலன் குமார் இருவரும் ஸ்டேஷனில் வேலை இருப்பதாக கூறி மதியம் வருவதாக சொல்லி சென்றனர். ராசாத்தி அக்கா மதிய சமையலை செய்வதற்காக சென்றாள். உதவி செய்வதாக கூறி பவியும் தமிழும் உடன் சென்றனர். அவள் மறுத்தும் இருவரும் விடவில்லை. கார்த்திக், திவ்யா இருவரும் குழந்தைகளுடன் விளையாடினர்.

இவ்வாறே மதியம் சமையலும் முடிந்தது. முதலில் குழந்தைகளை சாப்பிட வைத்தனர். அதற்குள் வெளியே சென்றவர்களும் வந்து விட அனைவரும் சாப்பிட்டனர். பின்பு வாருங்கள் எங்கள் வீட்டை சுற்றி பார்க்கலாம் என திவ்யா அவளை அழைத்து போனாள். அவர்கள் வீடு அதே காம்பவுண்ட்டிற்குள் கீழ் போர்ஷனில் இருந்தது. மேல் போர்ஷனில் இருக்கும் வீட்டில் அகிலன் அறை இருந்தது. படுப்பதற்கு மட்டும் அங்கு செல்வான். மற்றபடி மேல் போர்ஷன் கீழ் போர்ஷன் இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தது.

பிறகு மேல் பகுதியில் அகிலனின் அறையை காட்ட கூட்டி சென்றாள். அங்கே அகிலன் இருந்தான். இதை கவனித்த குமார் திவ்யாவை கீழே கூப்பிட்டான். இப்போது அகிலனும் தமிழும் மட்டுமே அங்கு இருந்தார்கள். அகிலனுக்கு ஒரு நிமிடம் தன் காதலை சொல்லிவிடலாம் என தோன்றியது ஆனால் இது தகுந்த சமயம் அல்ல என நினைத்து விட்டுவிட்டான்.

அகிலன் அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது. பின்பு ஹாலுக்கு வந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இனி எப்பொழுது கோயம்புத்தூர் செல்வீர்கள் என கேட்டான். எப்போது வேலை குறைவாக இருக்கிறதோ அப்பொழுது என கூறினாள். ஆபீஸ் நிர்வாகம் முதல் தற்போது நடப்பவை வரை அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான். பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. மாலை ஆகிவிட்டது.

மாலை ஆனதும் ராசாத்தி அக்கா இரண்டு டீ கோப்பைகளுடன் மாடிக்கே வந்து விட்டாள். கொடுத்துவிட்டு இவர்களுக்கு இடைஞ்சல் செய்யாமல் சென்று விட்டாள். இருவரும் குடித்து விட்டு கீழே சென்றனர்.
தமிழ் கிளம்புகிறேன் என்று சென்றதும் யாரும் விடவில்லை. அவர்களின் அன்பிற்கிணங்கி இரவு உணவை முடித்து கொண்டே செல்வதாக கூறினாள்.

இரவு உணவு முடிந்ததும் பவியும் குமாரும் சொல்லி கொண்டு கிளம்பி விட்டனர். தமிழ் கேப் புக் செய்வதாக சொன்னதும் அகிலன் மறுத்தான். வேண்டாம் தமிழ் இந்நேரத்தில் கேப் ல் செல்வது நல்லதல்ல நானே டிராப் செய்கிறேன் என்றான் . அவளுக்கு மறுக்க தோன்றவில்லை. அது எதனால் என அவளுக்கே தெரியவில்லை. பின்பு அவளும் அகிலனும் கிளம்பினர்.

அவளை பத்திரமாக டிராப் செய்தான். ஏதாவது என்றால் கால் செய் என்று சொல்ல வர பின்பு நாக்கை கடித்து விட்டு கால் செய்யுங்கள் என்றான். அவளும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிக் கொண்டு காயூ விடம் அனைத்தும் சொன்னாள். பின்பு உறங்க சென்றாள். கண்களை மூடியதும் தெரிந்த உருவம் அகிலன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top