கண்கள் அழகு பெற

Advertisement

Bhuvana

Well-Known Member
கண்கள் அழகு பெற :

1. சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் குறையும்.

2. ஆப்பிள் பழத்தை நறுக்கி, சுத்தமான தேனில் நனைத்துச் சாப்பிட வேண்டும்.சில கண்கள் அழகு பெறுவதோடு சிறந்த பிரகாசத்தையும் பெறும்.

3. வெள்ளரி,தக்காளி இரண்டையும் சேர்த்து அரைத்த கலவையை தடவி 10 நிமிடம் கழித்து கழுவி வர கண்களை சுற்றி உள்ள கருவளையம் மறையும்.

4. பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.

5. தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெயை தடவிக் கொண்டு படுத்தால் புருவங்கள் மிருதுவாகவும்,வசீகரமாகவும்இருக்கும்.

6. வெண்ணெயுடன் கொத்தமல்லிச் சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்களில் உள்ள கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.

7. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.

8. வெதுவெதுப்பான பாலில் காட்டன் துணியை நனைத்து தினமும் கண்ணில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்க கருவளையம் குறையும்.

9. துளசி சாறு, புதினா சாறு, பன்னீர் மூன்றையும் கலந்து கண்ணில் தடவி வர கருவளையம் குறையும்.

10.கற்றாழையின் சோற்றுப் பகுதியினை பன்னீருடன் கலந்து தினமும் கண்ணுக்கு கீழ் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் கண்களிலுள்ள கரு வளையம் குறையும்.

11.இளம் சூடான ஒரு லிட்டர் தண்ணீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு முகம் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

12.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கரு வளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top