ஏரிக்கரை 6

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
காண்பவர் அனைவரையும் ரசிக்க வைக்கும் சிரிப்பு ஒன்று உண்டெனில் அது மழலையின் சிரிப்பு மட்டுமே....


ஏரிக்கரை 6 :

குழந்தையை தன் தோளில் சாய்த்து தூங்க வைத்தவன் அதன் தூக்கம் கலையாதவண்ணம் தூக்கிக்கொண்டு தானிருந்த இடத்திலிருந்து வெகுதூரம் நடந்து சென்றான் . கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த பின்பு நின்றவனின் எதிரே இருந்தது அவ்வில்லம் .
அவ்வில்லத்தின் பெயர் "இறைவனின் நிழல் " . ஆம் அது இறைவனின் நிழல் தான் பல குழந்தைகளுக்கு நிழலாய் இருந்து வருகிறது .தன் கையில் இருந்த குழந்தையை ஒருமுறை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு இல்லத்தின் வாசலில் வைத்தவன் , வாசலின் அருகில் இருந்த பெரிய மணியை ஒரு முறை அழுத்தி அடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து விரைந்து நகர்ந்துவிட்டான் . கடந்த இரு மாதங்களில் இதேபோல் இரண்டு தடவை நடந்ததை நினைவில் கொண்ட அவ்வில்லத்தின் நிறுவனரான அப்பெண்மணி அவசர அவசரமாக வெளியே வந்து அங்கிருந்த குழந்தையை கண்டவர் சுற்றும்முற்றும் அருகில் எவரேனும் இருக்கிறார்களா என பார்த்தார் . எவருமில்லாததில் அக்குழந்தையை தன்னுடன் அணைத்துக்கொண்டு உள்ளே எடுத்துச் சென்றார் . அக்குழந்தையின் உடலில் இருந்த சிறு சிறு காயங்களையும் அவற்றிற்கு மருந்து இடப்பட்டிருந்ததையும் பார்த்து இதுவும் வழக்கம் தான் என்பதை போல் குழந்தையை சிறிதுநேரம் தடவிக்கொடுத்தவர் அங்கு ஓர் அறையில் ஏற்கனவே இருந்த குழந்தைகளின் அருகில் சென்று இக்குழந்தையை வைத்தார். இக்குழந்தையையும் சேர்த்து அவ்வில்லத்தில் தற்பொழுது 340 பேர் உள்ளனர்.


.................................................

குழந்தையை ￰அவ்வில்லத்தில் விட்டு விட்டு மனம் கனக்க வந்தவனின் கண்கள் வீட்டினுள் நுழைகையில் சிறுத்தையாய் பளபளத்தது .

அவ்வீட்டினுள் நுழைந்தவுடன் பெரியதாய் ஒரு அறை. அதன் மூன்று பக்கமும் கதவுகள் .முதல் அறையின் கதவை திறந்து சென்றான் .அவ்வறையினுள் ஒரு சிறு பல்பு மெல்லிய வெளிச்சத்தை பரவ வைத்திருந்தது . அங்கிருந்த நாற்காலியின் அருகில் சென்று அதில் இருந்த பழைய துருப்பிடித்த பிளேடை எடுத்து ரொம்ப நேரமா உன்ன காக்கவச்சுட்டேன்ல ம்ம்ம்ம் அதுக்கு பதிலா இப்போ உனக்கு ரொம்ப பிடிச்சதை நான் தரப்போறன் என சொல்லிகொண்டே திரும்பினான் .

அருகில் அன்று வெறுமையாய் இருந்த டேபிளில் இன்று ஓர் உருவம் சுயநினைவின்றி படுத்திருந்ததை பார்த்து ...இன்னிக்கு உனக்கான பரிசு இந்த பொம்மை தான் என்ன பாக்குற இந்த பொண்ண பொம்மனு சொல்றானேனா ...பின்ன பொண்ணுனா சொல்ல முடியும் பொண்ணுனா அது நம்ப சாரதாம்மா மட்டும் தான் . சாரதாம்மா அவரின் பெயரை சொல்லும்போதே அவனின் குரலில் அத்தனை அத்தனை மென்மை . அவரை பற்றி எண்ணியதில் இளக தொடங்கிய மனம் அதனுடன் தொடர்ந்த சில நினைவுகளில் இரும்பாய் இருகியது . அவ்வேளையில் அப்பெண்ணிர்க்கு மயக்கம் தெளிவதுபோல் தோன்ற பிளேடு துண்டை மிக வேகமாக சரக் சரக் என அப்பெண்ணின் உடலில் தனக்கு தோன்றிய இடங்களில் எல்லாம் கீறினான் . ரத்தம் சொட்ட சொட்ட இருந்த பிளேடை ஆசையுடன் இதழில் வைத்து அழுத்தி ஆஆஆ இப்போவும் எனக்கு சந்தோஷமா இல்லை என அதை தூக்கியெறிந்தான் ....வெளியே வந்து மற்றொரு கதவை திறந்தவன் அங்கிருந்த வலையில் சிறு இறைச்சித்துண்டை வைத்து அருகில் இருந்த நீச்சல் குளத்தினுள் வீசினான் .அவ்வலை சாதாரணமான மீன் பிடி வலைபோல் அல்லாமல் சற்று பெரியதாய் இருந்தது ....சிறிது நேரம் கழித்து அவ்வலையை இழுத்தவன் அதனுள் நண்டுகள் பல அவ்விறைய்ச்சியை பிய்த்து கொண்டிருந்ததில் ஹாஹாஹா என பயங்கரமாய் சிரித்து, செல்லங்களா ரொம்ப பசில இருக்கீங்களோ உங்களுக்கு தேவையான உணவ இப்போ குடுக்குறன் என்று வலையில் இருந்த நண்டுகளை பிய்த்து திரும்ப அந் நீச்சல் குளத்தினுள் போட்டவன் வெளியே சென்று அப்பெண்ணை தூக்கி வருகையில் அவளின் உடலில் உள்ள கீறல்களின் வலியில் அவள் அம்மயக்க நிலையிலும் துடிப்பதை கண்டவன் ...இது போதாது உனக்கு இது போதாது ... என வெறியுடன் முனங்கி கொண்டே வலையில் அவளை சுருட்டி அந்நீச்சல்குளத்தினுள் எறிந்தான் . சிறிது மயக்கம் தெளிந்த அப்பெண்ணை சூழ்ந்த நண்டுகள் அவளின் கீறல்கள் மூலம் வந்த ரத்தத்தை சுவைத்து அதை கடிக்க ஆரம்பித்தன ..தண்ணியில் மூச்சிற்கு திணறியும் ... நண்டுகள் உடலில் ஒட்டி சதையை பிய்ப்பதில் உண்டான வழியுமென... உயிர் போகும் வலியில் மயக்கம் முழுதாய் தெளியாததால் கத்தகூட முடியாமல் தவித்தாள் . நண்டுகள் அவள் உடலை உயிருடன் பங்கிடுவதற்கு நேரம் கொடுத்தவன் சிறிது நேரம் கழித்து அவ்வலையை மேலே இழுத்தான் . உடலே தெரியாத அளவிற்கு நண்டுகள் அந்த பெண்ணின் உடலை சூழ்ந்திருந்தது ...நிதானமாக ஒவ்வொன்றாய் பிய்த்து எறிந்தவன் உயிர் போகும் வலியில் துடித்து கொண்டிருந்தவளை கண்டு "வலிக்குதா மை டியர் மாதா " என்றவனின் கண்கள் வேட்டையாடிய வெற்றியில் பளபளத்தது . அவளின் சதை பிய்ந்துபோன ரத்தம் சொட்டும் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு போய் வெளியில் இருந்த வண்டியின் டிக்கியில் கடாசி வண்டியை மெதுவாக ஏரிக்கரைக்கு செலுத்தியவன் . அவளை எடுத்து எரியுனுள் வீசினான் . ஏற்கனவே உயிர் போகும் வலியை அனுபவித்துக்கொண்டிருந்தவள் நீரினுள் மூச்சிற்கு திணறி சிறிது சிறிதாக தன் உயிர் நீர்த்தாள்.ஒரு சில மணி நேரங்களில் அவளின் உயிரற்ற உடலை மீன்கள் பங்கிட்டுக்கொள்ள ஆரம்பித்தன ...

--------------------------------------------
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top