எல்லையற்ற பேரழகே!!!

Advertisement

barathi kannama

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே...நான் மீண்டும் உங்கள் பாரதி கண்ணம்மா!!...என்னுடைய மூன்றாவது கதையான எல்லையற்ற பேரழகே ஓட வந்துருக்கேன்.....இப்போதைக்கு தை 1 -ம் தேதி டீஸர் மட்டும் போட்டுட்டு ஓடிடலாம்னு இருக்கேன்....டீஸர் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க....மீ ஆவலுடன் வெய்டிங்....அடுத்த வாரம் முதல் கதை பதிவிடப்படும்....

"டேய்....அர்ஜுன் என்னடா ரொம்ப நேரமா எதையோ தேடிட்டு இருக்க....என்னனு சொன்னா நாங்களும் தேடுவோம்ல...." என்று நண்பர்கள் கூட்டம் அவனை பார்த்து கேட்க....அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் அவர்களுக்கு பதில் சொல்லாமல் தன்னை தனக்கே தெரியாமல் பின் தொடரும் அந்த உருவம் யார் என்பதை கண்டுபிடிப்பதில் மும்முரமாய் இருந்தான்....

இன்று நேற்று அல்ல....கடந்த ஒரு வருடமாக இதே உணர்வை அவன் கல்லூரியில் சேர்ந்த 3 -ஆம் ஆண்டிலிருந்து உணர்ந்திருக்கிறான்....

எவ்வளவோ முயன்றும் அது யார் என்பதை அவனால் கண்டறிய இயலவில்லை....

"மச்...ஒன்னும் இல்ல வாங்கடா..." என்று தன் குத்தீட்டி கண்ணால் சுற்றும் முற்றும் பார்த்தவாறு சென்றான்...

அவனின் விழி அசைவை சற்று ஒதுங்கி உதட்டில் குறும்பு புன்னகையுடன் கண்களில் தன் மொத்த காதலையும் தேக்கி....தூணின் பின் புறம் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் அவள் அந்த அர்ஜுனனின் இல்லை இல்லை நம் கண்ணனின் கண்ணம்மா....


1547533378809.png

--பாரதி கண்ணம்மா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top