என் உறவென வந்தவனே 8

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
hii... frds & siss.... en uravena vandhavane epi 8 post pannivitten ... padithuvittu comments kodukka marakkadhinga... happy reading....



அத்தியாயம் - 8

பார்த்தவுடன் காதலா...
என்று நினைத்த என்னை...
ஆம் காதல் தான்...
என்று நினைக்க வைத்துவிட்டாய்....
சொல்லவும் வைத்தாய்...

இரவு ஒன்பது மணியளவில் உணவு விற்பவன் வர... "அக்கா.. தோசை,இட்லி இருக்கு உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க..." என்று தனுவிடம் அவன் கேட்க... "எனக்கு எதுவும் வேணாம் தம்பி.. நீங்க போங்க..." என்று சொல்லிவிட்டு ஜான் வாங்கிக்கொடுத்த பிஸ்கட்டை பிரித்து சாப்பிட்டவள்... தூங்குவதற்கு தேவையானவற்றை செய்து விட்டு... "ரெஸ்ட் ரூம் சென்று வரலாம்..." என்று அங்கே சென்றாள்... அங்கே ஒருவன் குடித்துக்கொண்டு நின்றிருந்தான்...
மீண்டும் தன் இருக்கைக்கு செல்ல திரும்பியவள்... அங்கே கையை கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஜான்...

"ம்ம்... என்னாட்சி தனு..." என்று கேட்டுக்கொண்டே அவளின் அருகில் வந்தவன்... எட்டி பின்னால் பார்த்தவன்... புரிந்துக்கொண்டான்... "நீ போ..தனு... நான் இருக்கேன்ல..." என்று சொல்ல..அவளும் எதுவும் சொல்லாமல் ரெஸ்ட் ரூமிற்கு சென்றாள்... அவள் வெளியே வந்தவுடன் அவளின் பின்னாடியே சென்றவன்.. அவனின் இருக்கை வந்ததும்.. "தனு.. ஒன் மினிட்... நான் இங்க தான் இருப்பேன் எதாவது அவசரம்னா... என்ன கூப்பிடு.. ஓகே..." என்று சொன்னவனிடம் வெறும் தலையசைப்பை மட்டும் தந்துவிட்டு சென்றாள் தனு...

"ம்ம்... மௌன தேவதையாகிட்டா போலருக்கு...." என்று புலம்பியவன் படுக்க சென்றான்... தனுவிற்கு கொஞ்சம் பயமாக இருந்தது அவளுடைய கம்பார்ட்மென்டில் இவள் மட்டுமே... "பேசாமல் அவனை இங்கே வர சொல்லலாமா..." என்று நினைத்தவள்... "வேண்டாம்.. அது நல்லாருக்காது..." என்று மீண்டும் அவளுக்குள்ளே சொல்லிக்கொண்டு படுத்துக்கொண்டாள்...

அனைவரும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க... ஒருவன் மட்டும் தூங்காமல் ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்டையும் பார்த்துக்கொண்டே சென்றவன்... ஒரு இடத்தில் நின்று சுற்றிமுற்றிப்பார்த்தவன் அங்கே உள்ள பேகில் இருந்து பணத்தை திருடியவன்... வேகமாக ரயிலில் இருந்து இறங்க சென்றான்... போகும் முன் தனுவின் இருப்பிடத்தை பார்த்தவன் யாரும் அங்கே இல்லாததை கண்டுவிட்டு தனுவின் அருகில் வந்தவன்... அவளின் கழுத்தில் இருக்கும் செயினை எடுக்க முற்பட... அவள்தான் உறங்கவே இல்லையே... கண் விழித்த பானு கத்த ஆரம்பிப்பதற்குள் அவளின் வாயைப்பொத்தியவன்... "ஏய்.. கத்தாத.. இங்கபாரு நான் உன்ன எதுவும் பண்ணமாட்டேன்... நான் இப்போ போயிடுவேன்... அதுவரைக்கும் நீ கத்தாம இருக்கணும்.." என்று சொன்னவனிடம்... தலையை மட்டும் ஆட்டினாள்... அவன் மெதுவாக கையை எடுக்க... அவனை பிடித்து கீழே தள்ளியவள்... ஜான் இருக்கும் இடத்திற்கு விரைந்தவள்... அவனை எழுப்பினாள்... அவள் உலுக்கிய வேகத்தில் அடித்துபிடித்து எழுந்தவன்... தனுவைக் கண்டதும் பதட்டமானான்... "என்னாச்சி த..." என்று சொல்லி முடிக்கவில்லை... அவனை கட்டிக்கொண்டவள்... "அங்..அங்க ஒருத்தன்..." என்று தேம்பினாள்... உடல் நடுங்கியது அவளுக்கு ... இவனும் அவளை கட்டிபிடித்தபடி அந்த இடத்திற்கு செல்ல... அங்கே ஒருவன் காலில் அடிப்பட்டிருக்க எழுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்... பக்கத்தில் பணம் மற்றும் நகைகள் சிதறிக்கிடந்தது... இதிலேயே அவன் யார்.. என்று புரிந்துக்கொண்ட ஜான்... அவனை புடிக்கப்போக... ஆனால் தனு அவனைவிட்டு விலகுவதாக இல்லை... என்று அதை புரிந்துக்கொண்டவன்... "தனு கொஞ்ச நேரம் அப்படி உட்காரேன்..." என்று சொல்ல... "ம்ம்..ம்ஹும்.." என்று மறுத்துவிட்டாள்... அதற்குள் சத்தம் கேட்டு எழுந்து சிலப்பேர் வர... அந்தத்திருடனை பார்த்தவர்கள் தங்களின் உடைமைகள் சரியாக இருக்கிறதா... என்று ஆராய அதில் சிலரது பணம், நகைகள் காணவில்லை... அவர்கள் மட்டும் அவனைப்பிடித்து அடிக்க... அதில் ஒருவர் மட்டும் "நிறுத்துங்கப்ப... செத்துறப்போறான்... அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி போலீஸ்ல புடுச்சிக்கொடுத்துடுவோம்..." என்று சொன்னார்... ஜான் "ம்ம்.. இவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்..." என்று நினைத்து தனுவை அழைத்துக்கொண்டு சென்றவன்... இருக்கையில் அமர்ந்து "தனுமா.. ஒன்னும் இல்ல... அவன் ஒரு திருடன்..." என்று சொல்ல.... "ம்ம்... "என்று குரல் வந்ததே தவிர.. அவனை நிமிர்ந்துக்கூடப்பார்க்காமல் தோளில் சாய்ந்தபடியே இருந்தாள்...

கொஞ்ச நேரம் பொறத்துப்பார்த்தவன்... இதற்கு மேல் முடியாது என்று அவள் பிடித்திருந்த தன் கரத்தினால் அவளின் கரத்தை இறுகப்பற்றியவன்.. "தனு..." என்று அழைக்க... "ம்ம்..." அவள் சொல்ல... "உனக்கு என் மேல் முழுநம்பிக்கை இருக்கா..." என்று கேட்க... நிமிர்ந்து அவனை பார்த்தவள்... "ம்ம்..." என்று சொல்லிக்கொண்டே மேலும் கீழும் தலையாட்டியவளின் கண்களில் நீர் வழிந்தது... அவளின் இருக்கன்னத்திலும் கைவைத்தவன் "ஐ லவ் யூ.. சோ மச்.. தனுமா... இந்த நம்பிக்கை நம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்..." என்று சொன்னவனிடம்... "நானும்..உங்.. உங்கள விரும்புறேன்... ஆனா நான் ஒரு அநா..." என்று சொல்ல வந்தவளின் வாயை தன் கரத்தால் மூடியவன்... "வேண்டாம்.. நான் இருக்கேன்ல.." என்று சொல்ல..."நீங்க இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்...ஆனா உங்க வீட்ல என்னை ஏத்துப்பாங்களா..." என்று கேட்டவளிடம்... "ம்ம்... அப்பாவுக்கு ஹன்ரட் பர்சன்ட் ஒகே... ஏன்னா உன்னை பற்றி இரண்டு வருஷத்திற்கு முன்னாடியே அவருக்கு தெரியும்... ஆனா அம்மாதான் கொஞ்சம்.. ஸ்ட்ரிட் ஆபீஸர்... அதுக்காக காதலுக்கெல்லாம் அவங்க எதிரி கிடையாது.. அப்பாவும் அம்மாவும் லவ் மேரஜ்தான்... எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்... ஓகே..." என்று சொன்னவனை பார்த்து மென்மையாக சிரித்தாள்...

"சரி.. தனு நீ படுத்துக்கோ.. நான் போய் என்னோட பேக்கை எடுத்துட்டு வந்து அப்போசிட்டில் படுத்துக்கொள்கிறேன்..." என்று ஜான் சொல்ல... தனு மறு படியும் "ம்ம்..." மட்டுமே சொல்லிவிட்டு விலகாமல் இருக்க... சிரித்துக்கொண்ட ஜான் "தனு மேடம்... கொஞ்சம்.. உத்தரவு கொடுத்தீங்கன்னா போயிட்டு உடனே வந்துடுவேன்..." என்று சொன்னவனை பார்த்து அசடு வழிய நகர்ந்து அமர்ந்தவள் "ஆமா... உங்க நேம் ஜான் மட்டும் தானா..." என்று கேட்க... "ம்ம்.. ஃபுல்நேம் ஜான்தஷ்வந்த்..." என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு சென்றான்... "ஜான்தஷ்வந்த்... ம்ம்.. தஷ்....இல்ல இல்லை தஷு... தஷு தனு..."என்று சொல்லிப் பார்த்துக்கொண்டாள் தனு...

இருவரும் உறங்கமுற்பட்டனர்... எதிர்எதிராக படுத்துகொண்டு தங்களுக்கு காதல் வந்த தருணத்தை பற்றிப்பேசி உறங்கியும்விட்டனர்... இருவர் மனதிலும் சந்தோஷம் மட்டுமே இருந்தது...

பொழுதும் அழகாக விடிய... எட்டு மணியளவில் சென்னையை வந்தடைந்தவர்கள்... ப்ரெஷப்பாகி தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு இறங்கினர்... ஒரு டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க... ஜானின் மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தவன் "அம்மா" என்றதும் அட்டண்ட் செய்து "சொல்லுங்கம்மா..." என்று சொல்ல... "என்னத்தடா சொல்றது... இன்னும் வீட்டுக்கு வராமா என்ன பண்ற... முதல்ல வீட்டுக்கு வா.. இல்ல நீ எங்க இருக்கன்னு சொல்லு நான் அங்க வரேன்..." என்று விடாமல் பேசினார் சகுந்தலா... "அய்யோ... அம்மா ...இன்னும் அரைமணி நேரத்துல உங்க முன்னாடி நிற்பேன் போதுமா..." என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் ஜான்...

ஒரு ஆட்டோ புடித்தவன்... "தனு ஏறு..." என்று சொல்ல அவளும் ஏறி அமர.. "நீ எங்க தங்கியிருக்க.. "என்று ஜான் கேட்க... இடத்தை சொன்னாள்... அவளின் முகம் வாடியிருக்க... "தனுமா... இப்போ என்னாச்சுன்னு... சோகமாயிட்ட... கொஞ்ச நாள் பொறுத்துக்கோ... அதுக்கப்புறம் நீயே என்னவிட்டு போகணும்னு நினைச்சாலும் முடியாது..." என்று சொன்னவனை பார்த்து "இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு தஷு..." என்று சொன்னவளை கையில் கிள்ள அவள் லேசாக கத்த... "கனவு இல்ல நிஜம்தான் தனுமா..." என்று சொல்லி சிரித்தான் ஜான்....

அவளின் ஹாஸ்டல் வந்ததும் இறங்கியவர்கள்... தனுவிடம் "நான் வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்..." என்று ஜான் சொல்ல... "ம்ம்..சரி... நான் போயிட்டு வரேன்..." என்று சொல்லிவிட்டு திரும்பியவளை "தனு" அழைத்தவன் "ஐ லவ் யூடி..." என்று சொல்லி கண்ணடித்துவிட்டு சென்றான்... அவளும் வெட்கம் மற்றும் மகிழ்ச்சியுடன் தன் அறைக்கு சென்றாள்...

-தொடரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top