என் இதய விழி நீயே-episode 5

Advertisement

achuma

Well-Known Member
hi friends
episode 5 potu irukaen
pls read n comment


என் இதய விழி நீயே



ஆதி அபி இருவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு மணி நேரம் ஆகிறது ...
இன்னும் குடும்பத்தினர் யாரும் நடந்து முடிந்த நிகழ்வில்லிருந்து இன்னும் வெளி வரவில்லை ...
அபி ஸ்ரீயின் அறையில் கண்களில் நீருடன் அமர்ந்திருந்தாள் , அருகில் ஸ்ரீ உடனிருந்தாள் .
ஆதி அவனின் அறையில் , இரு கைகளையும் அவன் பின்னங் கழுத்தினில் கோர்த்து கண்கள் மூடி அமர்ந்து இருந்தான்...
அவன் யோசிக்கிறானா என்ன செயகிறான் என்று நொடிக்கொரு முறை சந்தீப் ஆதி முகத்தினை பார்பதே வேலையாகிற்று ...
சிவநேசன் மற்றும் அர்ஜுன் இருவரும் சூழ்நிலையினை ஏற்று , மற்ற வேலைகள் செய்தனர் ...
அபிக்கு தன் வாழ்க்கையின் எதிர்காலம் தன் கையில் இல்லையே என்னும் அதிர்ச்சியா , இனி என்ன என்ற பயமா , ஒரு வித இயலாமையுடன் அமர்ந்து இருந்தாள் ...
நிச்சயம் முடிந்த இரவு ...
நிஷா இரவு உணவு முடிந்து அவள் அறையினுள் நுழைந்ததும் , அவளின் தோழிகளுடன் அவள் பயத்தினை பகிர்ந்து கொண்டாள் .
"ஹே லீனா எனக்கு இப்போ தான் இந்த மேரேஜ் நெனச்ச பயமா இருக்கு, ஏதோ வீட்ல பேசுனாங்க , சரினு ஒத்துக்கிட்டேன் , ஆனா ஆதி ஏதோ கல்லையும் மண்ணயும் பாக்குற மாதிரி என்ன பாத்து வைக்கிறான் ...
இது லைப் தான , எனக்கு இப்போவே இம்போர்ட்டன்ஸ் கொடுக்கணும்னு நான் சொல்லல , பட் எதுலையும் இன்டெரெஸ்ட் இல்லனா எதுக்கு ஒத்துக்கணும் ?" என்று அவளின் தோழிகளிடம் கேட்டு வைத்தாள் ...
இது அனைத்து பெண்களுக்கும் இருக்கும் குணம் , வரும் கணவன் நமக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்பதும் திருமண எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்.
நிஷா நடைமுறை ஏற்ப பழக்கப்பட்டவளாகினும் அவளும் பெண் அல்லவா , எதிர்பார்ப்பு இருக்கும் தானே ...
அதிலும் டெல்லியில் இரு வருடங்களாக கிஷோர் நிஷாவின் காதலுக்காக தவம் இருக்க, இங்கு ஆதியின் செயல் நிஷாவினால் நினைத்து பார்க்காமல் முடியவில்லை .
ஆம் ! இரு வருடங்களாக கிஷோர் நிஷாவின் காதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறான் ...
டெல்லியில் நிஷா தங்கி உள்ள பெண்கள் விடுதியின் அருகில் தான் கிஷோரின் இல்லம் உள்ளது . கிஷோர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் .கிஷோருக்கு அவன் அன்னை தவிர சொந்தம் யாரும் இல்லை ...
கிஷோரின் தந்தை அவனின் சிறு வயதிலே இறந்து விட்டார் ...
அதன் பிறகு கிஷோரின் அன்னையே கிஷோரின் எதிர்காலத்துக்கு அனைத்தும் என்று ஆகிற்று.


கிஷோர் சிறு வயதிலே தன் அன்னையின் உழைப்பு தெரிந்து வளர்ந்ததால் நன்றாக படித்து இப்பொழுது ஒரு தனியார் துறையில் நல்ல பதவியில் இருக்கிறான் ...

கிஷோர் இது வரை எந்த பெண்ணிடமும் மனதளவில் கூட கண்ணியம் தவறாது இருப்பவன் ...

நிஷா அவள் தோழிகளுடன் பல முறை கிஷோரை கடந்து அவள் கல்லூரிக்கு சென்று வரும் நேரம் கூட இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது ...

ஒரு முறை கிஷோரின் அம்மா மயக்கம் அடைந்து விழுந்த நேரம் நிஷாவால் மருத்துவமனை சேர்க்க பட்டார் .அப்பொழுது

கிஷோருக்கு தகவல் அளித்து அவனிடம் செய்தி கூறி மருத்துவமனை வர வைக்கப்பட்டது அனைத்தும் நிஷாவே ...

கிஷோரிடமும் அவளின் அன்னையிடமும் நிஷா மிகவும் இனிமையாக பழகியதால் கிஷோருக்கு நிஷாவை மிகவும் பிடித்து விட்டது.

கிஷோருக்கு நிஷா பெரிய இடத்து பெண் என்று எதுவும் தெரியாது .
பெண்களிடத்தில் அதிகம் பழகிறதா கிஷோர் , நிஷாவின் பேச்சால் கவரப்பட்டான் , கிஷோரின் அன்னை ஷோபனா , நிஷாவுடன் இருக்கும் நேரங்களில் , மிகவும் மகிழ்ச்சியாக பொழுது செலவழித்தார் , இவை அனைத்தும் கிஷோர் நிஷா மீது காதல் பெருக காரணமாயிற்று...


தனது காதலை ஒரு நாள் நிஷாவிடம் கூறினான் கிஷோர்.
நிஷா நிராகரித்து விட்டாள் , கிஷோர் காரணம் கேட்டதற்கு ,"பெருசா காரணம் தெரில, எந்த வகையிலாவது நான் உங்கள டிஸ்டர்ப் செஞ்சிருந்தா சாரி ," என்று கூறினாள் .


கிஷோரும் தனது காதலில் மாற்றம் இல்லை என்றும், இதன் காரணம் கொண்டு எப்பொழுதும் நிஷாவினை தொந்தரவு செய்வது இல்லை என்றும் கூறினான்.

ஆனால் இனி தன்னால் காதலை கூறிய பின்பு நட்புடன் பழகுவது கடினம் என்று நிஷாவுடன் பழகுவதை நிறுத்தி கொண்டான் ...

ஆனால் நிஷா கல்லூரிக்கு சென்று வரும் நேரம் நிஷாவினை பார்ப்பதற்காக , அவனின் வீட்டு மொட்டை மாடியில் அந்நேரம் காத்துக்கொண்டிருப்பான்.

நிஷாவிற்கு இது தெரிந்தாலும் ஏதும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .

நிஷாவும் கிஷோர் இல்லாத நேரங்களில் ஷோபனா(கிஷோரின் அன்னை) பார்க்க அவன் வீட்டுக்கு சென்று வருவாள் .

ஏனோ நிஷாவிற்கு ஷோபனா மீது மிகுந்த பிரியம் , பிரேமாவிடம் கிட்டாத அன்பு ஷோபனாவிடம் நிஷாவிற்க்கு கிடைத்தது.

ஷோபனாவிற்கும் நிஷாவின் துடுக்கு தனம் பிடித்து போயிற்று , கிஷோர் குடும்ப சூழ்நிலை காரணமாக அவனின் வயதிற்குரிய

எதிலும் நாட்டமில்லாமல் படிப்பு வேலை என்று இருந்து வந்தான்.
வீட்டினில் நிஷாவின் செயல் ஷோபனாவுக்கு ஏதோ உயிர்ப்புடன் இருப்பது போன்று இருந்தது . நிஷா கல்லூரி போய் வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நிஷாவால் கிஷோரை காண இயலாது...

தன்னால் நிஷா ஏதும் வருந்த கூடாது என்று , கிஷோர் உறுதியாக இருந்தான்.


ஆகையால் மற்ற நேரங்களில் நிஷாவால் கிஷோரினை காண இயலாது .

நிஷாவின் படிப்பு முடிந்து , நிஷாவும் பெங்களூரு வந்து சேர்ந்தாயிற்று , கிஷோரிடம் தகவல் கூற முயன்றாள் , முடியாமல் போயிற்று ...

அதன் பிறகு அவனுடன் பேசுவது என்று ஏதும் இயலாது போயிற்று.
பெங்களூரு வந்து இங்கு ஒரு முறை கிஷோர் தொலைபேசியில் அழைப்பு விடுத்தான் , ஆனால் , நிஷாவிற்கு அவளின் திருமண தகவல் கிஷோரிடம் கூற ஏதோ மணம் வலித்தது ...


அதன் பொருட்டு அவனின் அழைப்பு அவள் எடுக்கவில்லை , அவனின் தொடர் அழைப்பால் அவனின் தொலைபேசி எண்ணினை ப்ளாக் செய்து விட்டாள் ...

அவளின் திருமண தகவல் மூலம் கிஷோரின் மணம் வருந்துவது நிஷாவிற்கு விருப்பமில்லை ...

இனியும் கிஷோர் தன்னால் வருந்த வேண்டாம் என்று உறுதியாக இருந்தாள் ...

இவை அனைத்தும் மனதினில் நினைத்து அமர்ந்து இருந்தாள் நிஷா.
அதற்குள் அவளின் தோழிகள் , அவளை சகஜமாக்கி, அனைவரும் உறங்க சென்றனர் ...


லீனா உடை மாற்றி வருவதற்குள், நாக்கு வறண்டு போனது போல் நிஷாவிற்கு தோன்றியதால்,

அங்குள்ள ஜூஸ் எடுத்து பருகினால்.

அதில் இவளின் தோழி லீனா மது கலந்துள்ளது நிஷாவிற்கு தெரியாது .லீனாவிற்கு மது பழக்கம் உள்ளது ...

லீனா வெளி வரும் நேரம் காலி பாட்டில் கண்டு பதறி நிஷாவிவின் மற்ற தோழிகளிடமும் கேட்டாள் , அவர்கள் அப்பொழுதே பாதி உறக்கத்தில் இருந்ததால் நிஷா அருந்தியது தெரியவில்லை .
நிஷாவிடம் கேட்டதற்கு , அவள் குடித்து விட்டதாக கூறினாள் ...
பயம் கொண்ட லீனா நிஷாவிற்கு போதை ஏற்வதற்குள் அவளை உறங்க செய்தாள் ... இருப்பினும் போதையின் காரணத்தால் மனதில் உள்ள குழப்பங்கள் மறைந்து உறங்கினாள் ...


இரவெல்லாம் லீனா , நிஷா எங்கும் வெளிய போகாமல் இருக்க வேண்டுமே , என்று பயத்துடன் உறங்காமல் இருந்தாள் .நிஷா நன்றக உறங்கினாள் ...
விடியும் நேரம் முகுர்த்தம் என்பதால்,


அனைவரும் பரபரப்புடன் வேலைகளில் ஈடுபட்டனர் , அபியும்

பிரேமாவின் கண்களில் படாமல் அவளால் இயன்ற உதவி ஸ்ரீக்கு செய்து வந்தாள் .

இன்னும் நிஷா உறக்கத்தில் உள்ளதால் பிரேமா நிஷாவின் அறைக்கு சென்றாள் ...

எத்தனை ,முறை எழுப்பியும் நிஷா எழுந்துகொள்ளவில்லை ...

பிரேமாவிற்கு பதற்றம் , ஏதோ நிஷாவின் உடம்பிற்கு என்னகிற்றோ என்று, அவளின் கழுத்து பகுதியில் கை வைத்து பார்த்தாள் ...

உடம்பு சாதாரணமாக தான் இருந்தது .

"திருமணம் முடிந்த பிறகு தூங்கு நிஷா, இப்போ எழுந்துடு , என்று பலவாறாக நிஷாவின் தூக்கத்தினை விரட்ட முயற்சி செய்தாயிற்று ...

அதன் பிறகு திவ்யா நிஷாவின் அறைக்கு வந்து நிஷா தயாரா என்று கேட்க வந்தாள் ...

"ஸ்ரீ அக்கா பாத்துட்டு வர சொன்னாங்க ஆண்ட்டி, இன்னும் நிஷா எழுந்துகல? இன்னும் ஒரு மணி நேரத்துல சடங்கு ஆரம்பமாயிடும் ,

அதுக்குள்ள ரெடி ஆக சொன்னாங்க ஆண்ட்டி , என்று கூறினாள்

இதோ ம பாரு எப்படி தூங்குறானு என்று கூறினார் ... இன்னும் சின்ன பிள்ளை மாதிரியே இருக்கா , என்று புன்னகைத்தார் , நீயே அவளை எழுப்புமா என்றார் ...
ஆனாலும் பிரேமா மிகவும் பதற்றமாக இருந்தாள் ...

போன திவ்யா இன்னும் வரவில்லை என்று அர்ஜுன் மற்றும் ஸ்ரீ இருவரும் நிஷா அறை சென்றனர் ...


அதற்குள் திவ்யா, "ஆண்ட்டி, நேற்று ரொம்ப நேரம் லைட்டிங்ஸ் முகத்துல பட்டது , அப்புறம் நலங்கு வைக்கும் போது ஒரே இடத்துல இருந்ததுன்னு , கொஞ்சம் முடியாம இருக்கலாம் , நான் செக் பண்ணுறேன் , எதாவுது உடல் சோர்வா இருக்கலாம் , நான் அதுக்கு மருந்து தரன் , நீங்க சூடா காபி தாங்க , என்று கூறினாள் ...

பிரேமாவும் காபி எடுத்து வர அறையிலிருந்து வெளியேறினாள் ...
சுந்தரமும் , சிவநேசனும் கேட்டதற்கு , நிஷாவின் நிலையை கூறிய


பிறகு இருவரும் பதற்றத்துடன் நிஷா அறை நோக்கி சென்றனர் ...
அப்பொழுது திவ்யா நிஷாவின் நாடி பிடித்து பார்க்கும் போது


திவ்யாவின் முகம் குழப்பம் கொண்டது , திவ்யாவும் இரண்டு மூண்று முறை சரி பார்த்து பதற்றம் அடைந்தாள் ...

என்னவென்று கேட்டதற்கு , நிஷா கர்ப்பமாக இருப்பதாக கூறினாள் ...
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் ...


மேலும் " மது அருந்தியதால், தலைவலி மற்றும் மனக் குழப்பம் இவை அனைத்தும் சேர்ந்து இந்த நேரத்தில் , உடல் சோர்வும் சேர்ந்துள்ளதால்

நிஷா அதிக நேரம் உறங்கினாள் ..."
அ வளுடன் லீனா மட்டுமே அவ்வறையில் உள்ளதால் அனைவரும் லீனாவிடம் கோபத்துடன் என்னவென்று கேட்டதற்கு , லீனாவிற்கே இத்தகவல் அதிர்ச்சி தானே ?அவள் இனி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி , நேற்று இரவு அவள் வைத்து இருந்த மது நிஷா பருகியதால் "ஹாங் ஓவர் " என்று கூறினாள் ... மேலும் டெல்லியில் கிஷோரின் காதல் , நிஷாவின் மறுப்பு , இங்கு கிஷோர் லீனாவிற்கு பல முறை அழைத்தது , தோழிகளிடமும் நிஷாவிடம் பேச வேண்டும் என்று மெசேஜ் செய்தது, நிஷாவின் திருமணத்தால் , தோழிகள் யாரும் கிஷோரின் அழைப்பு ஏற்க வில்லை என்பது வரை கூறினாள் ...


ஆனால் நிஷாவின் கர்ப்பம் இது தோழிகளுக்கு அதிர்ச்சி .
" எங்களுக்கு தெரியாது !"


"அவங்க ரெண்டு பேரும் பேசுறது இல்லை " என்று கூறினாள் லீனா ...
சுந்தரத்துக்கும் பிரேமாவிற்கும் இத்தகவல் பேரதிர்ச்சி ...


சுந்தரம் மகளின் மீது நம்பிக்கை உள்ளவர் , அவரால் இதெல்லாம் கனவாக இருக்கக்கூடாதா என்று என்னும் அளவிற்கு மணம் வருந்தினார் ...

மனதளவில் மிகவும் உடைந்து போனார் .
மேலும் சகோதரியின் மகனுடன், திருமணம் ,இப்பொழுது ஆதியின்


திருமணம் நின்றால் அனைவரின் முன்பும் ஆதிக்கும் அவமானம் தானே ...

பூரணியின் மறைவிற்கு பிறகு ஆதியின் நிலைமை அனைவருக்கும் தெரிந்தது தானே ...

சிவநேசனிற்காக மட்டுமே ஆதி ஏதோ திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான் ...

ஆனால் இப்பொழுது ஆதியிடம் என்னவென்று கூறுவது , இவ்வாறு சுந்தரம் மேலும் மேலும் வருந்தினார் .
இனி ?
ஆதிக்கு விஷயம் சென்றது ...


முதலில் ஒரு மருத்துவனாக திவ்யாவிடம் நிஷாவின் நிலை அறிந்து கொண்டான் .

இவை ஏதும் அறியாது நிஷா உறக்கத்தில் இருந்தாள் ...

அறை மணி நேரம் கழித்து நிஷா எழுந்தாள் ...

அனைவரும் அவளின் அறையில் இருப்பதை பார்த்து என்ன என்று குழப்பம் அடைந்தாள், அவளால் கேள்வி கேட்கவும் முடியாத அளவிற்கு தலை மிகவும் பாரமாக வேறு இருந்தது ...

திவ்யா அவளின் மாதவிடாய் காலம் , பற்றி கேட்டதற்கு "நாட் ரெகுலர் ", என்று பதில் அளித்தாள் ...
அதன் பிறகே திவ்யாவின் கேள்வி , அனைவரும் தன்னையே உற்று நோக்குவது , நிஷாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது ...
"இது எப்படி? "


கிஷோர் பற்றி டென்ஷன்ல தான் சோர்ந்து இருக்கேனு நெனச்சேன் , அன்னைக்கு ? அப்போ? நிஷா மிகவும் உடைந்து போனாள் ?"

உடனே நிஷாவால் அவள் தாய் தந்தையை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை ...

திவ்யாவிடம் மட்டும் , "அவளின் கர்பத்தினை உறுதி செய்து கொண்டாள் ...

அதன் பிறகு "எனக்கு தெரிஞ்சி இந்த தப்பு நடக்கல , " என்று கதறி அழுதாள் ...

அதுவரை மகளின் மீது சினத்துடன் இருந்த சுந்தரம் நிஷாவை ஆதரவாக அணைத்துக்கொண்டார் ...

"அப்பா !"

"உங்க பொண்ணு தப்பு பண்ண மாட்டா பா என்று கதறினாள் ..."

"எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க பா , நானே இதுக்கு ஒரு முடிவு பன்றேன்! "என்றாள்...

எப்பொழுதும் மகளின் முடிவுக்கு துணை இருக்கும் சுந்தரம் , இதற்கு சற்று யோசித்தார் ...

நிஷா ஆதியிடம் மன்னிப்பு கூறினாள் ...

ஆதிக்கும் நிஷாவின் மீது ஏன்த சந்தேகமும் இல்லை ...

பிரேமா பேராசை உள்ளவள் என்றாலும் அவளின் வளர்ப்பு குறை கூறுவதற்கில்லை என்று ஆதிக்கு நன்றாக தெரியும் ...

ஆதி தனது தாய் மாமனின் வருத்தம் பொறுக்காது ,
மணமேடை சென்றான்...


அங்குள்ள அனைவரையும் பொதுவாக அழைத்தான் ...

ஆதியின் சத்தத்தில் என்னவென்று அனைவரும் மணமேடையில் உள்ள ஆதியின் பக்கம் திரும்பினர் ...

"எல்லோரும் என்ன மன்னிச்சிடுங்க , எனக்கு இந்த திருமணத்தில விருப்பம் இல்லை , நான் வேற ஒரு பொண்ண விரும்புறேன் , என் விருப்பம் இல்லாம இந்த திருமணத்துக்கு என்ன ஒத்துக்க வச்சுட்டாங்க...

அதான் நானும் இப்டி செய்ய வேண்டிதா போயிற்று , என்று அனைத்து தவர்களையும் தன் மேல் போட்டுக் கொண்டான் ஆதி ...
சிலர் அதிர்ச்சி அடைந்தாலும் , வயதில் பெரியவர்கள் " உன் பதவிக்கு நீ இப்டி செய்லாமா ?"
"பூரணி மகனா இப்டி? "
என்று ஆளாளுக்கு ஒரு கேள்வி ...
அனைவரிடமும் ஆதி மன்னிப்பு வேண்டி நிஷாவின் அறை சென்றான்


இன்னும் இந்த உலகம் எந்த ஒரு தப்புக்கும் பெண்கள் மேல் குற்றம் சொல்றத நிறுத்துல ...
இந்த விஷயம் இப்டியே இருக்கட்டும் ...
இனி அடுத்த நீ தான் யாரு என்னனு உன் பெற்றோருக்கு சொல்லணும் , என்று கூறினான் ...
ரொம்ப தேங்க்ஸ் ஆதி , என்று நிஷா மற்றும் சுந்தரம் கண் கலங்கினர் ...
ஆதி சுந்தரத்தின் கைகளை ஆதரவாக பற்றினான் ...
இதில் எதுவும் கலந்து கொள்ளாமல் பிரேமா கண்கள் கலங்கி ,"


" அன்றைக்கு வீட்டுக்கு வந்தானே , அவனா இருக்குமோ ? அசிங்க படுத்தி அனுப்பனுமே ' சே "
இவ்வாறு யோசித்தாள் ...


நிஷா கிஷோரின் எண்ணிற்கு அழைத்தாள் ...

நிஷாவின் அழைப்பு என்றதும் கிஷோர், உடனே தொடர்பு ஏற்று ,

"நிஷா ,நிஷா , ப்ளீஸ் பைவ் மினிட்ஸ் மட்டும் கேளு "

"நான் உங்க வீட்டுக்கு வந்தேன் , உங்க அம்மா என்ன திட்டி அனுப்பிட்டாங்க ",

"நிஷா! நீ லைன்ல இருக்கியா ?"

"எதாவுது பேசு ப்ளீஸ்!"

"சொல்லு கிஷோர் !"

"அன்னைக்கு ஹோட்டல்ல என்ன நடந்தது?" நிஷா !

சொல்லுன்னு சொன்னேன் !

"நீ எங்க இருக்க ?"

"பெங்களூரு தான் ."

நான் சொல்ற இடத்துக்கு உடனே வா , கிஷோர்

இதோ வரேன் வரேன்...

நிஷா அவள் இருக்கும் இடத்தை கூறியதும் கிஷோர் மண்டபம் நோக்கி சென்றான் ...

இனி ?
cleardot.gif

 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா டியர்

நிஷாவும் பாவம் நல்ல பெண்தான்
எங்கோ தப்பு நடந்திருக்கு
கிஷோரும் கண்ணியவானாகத்தான் இருந்திருக்கிறான்
அல்லது நடித்தானோ?
ஹோட்டலில் என்ன நடந்தது?
கிஷோர் வந்தால்தான் தெரியுமோ?
ஆதி கல்யாணத்தை நிறுத்திட்டான்
அப்புறம் எப்படி அபியைக் கல்யாணம் செய்தான்?
கொஞ்சம் குழப்பமாக இருக்கே, சரண்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top