என் இதய விழி நீயே 29 2

Advertisement

achuma

Well-Known Member
ஹாய் , எல்லாரும் எப்படி இருக்கீங்க, மோர் ஒன்னு எபிசொட்
in that two paart
will come
im thanking you all for adjusting me:love:
thanks for all your like n comments
please be on giving comments
now next i send






ஆதியும் ஸ்ரீ அவ்வளவு தெளிவாக பிரேமாவின் பெயர் கூறுகிறாள் என்றாள் , அவன் இன்னும் தீவிரமாக , விசாரிப்பதில் இறங்கினான் .சந்தீப்பும் ஆதியும் அதனை பற்றிய விசாரணையில் இருந்தனர்..

"டேய் ஆதி , எப்படி டா அண்ணி அவ்வளவு தெளிவா சொல்றாங்க , அதான் எனக்கும் யோசனை ..
அபியும், எதுவும் தெளிவா தெரியாம எப்படி சொல்றதுன்னு, அங்க கம்பெனியில் நடக்கறது, எல்லாம் பாதி வெளிய கொண்டு வந்துட்டா" ..

"அப்போவே எப்படி பிரேமா அத்தைக்கு , இது எல்லாம் தெரியாம இருக்கும்னு, எனக்கு சந்தேகம்," என்றான் ஆதி ..

"கம்பெனி, கணக்கு எதுவும் நீ இது வரைக்கும் பார்த்து இருக்கியா, எங்கயாவது உனக்கு பிரச்னைனு தெரிஞ்சிதா?" சந்தீப் ஆதியிடம் கேட்டான் .

"இல்ல சந்தீப், நான் எதுவுமே வேணாம்னு, அப்போ மேம்போக்கா இருந்தேன், உனக்கே தெரியாத, எதுவும் சரியா கவனிக்கல , அதன் பெரிய தப்புனு இப்போ உணறேன், எல்லாம் பிரான்ச்க்கும்,அப்பா ஒவ்வொருத்தர்னு ஆர்கனைஸ் பன்ன வெச்சிட்டாரு, சரி நானும் ஹாஸ்பிடல் போதும்னு, இருந்துட்டேன் ,"

"கணக்கு எல்லாம்....."டேய் சந்தீப் , தேங்க்ஸ் டா , கணக்குனு சொன்னதும், எனக்கு நம்ம ஆடிட்டர் அங்கிள் ஸ்ட்ரைக் ஆகுறார் , அவர் அப்பாவோட பிரென்டு தான் , அவருக்கு எதுவும் தெரியாமயா இருக்கும், நம்ம கம்பெனிக்கும், அவர்தான் ஆடிட்டர்."

"பெட்டெர் நம்ம அவரையே போய் பார்க்கலாம்," என்று இருவரும் அவரின் இல்லம் நோக்கி சென்றனர் ..

ஸ்ரீ , நிஷாவுக்கு அழைத்தாள் அவளிடம் இது பற்றி பேசுவது என்று, அவள் பிரேமாவிடம் எப்பொழுதும் விலகியே இருப்பதற்கு காரணம் என்ன என்று அறிய முற்பட்டாள் , ஏதேனும், தகவல் தெரிந்தால், இனி பிரேமாவை இந்த குடும்பத்தில் இருந்து விளக்கி வைக்கலாம் என்று முடிவிற்கு வந்துவிட்டாள் ..

இன்னும் ஒரு வாரத்தில் சீமந்தம் என்று முடிவானதால் கிஷோர் மற்றும் ஷோபா விஜயனை வற்புறுத்தி அங்கு தங்க செய்தனர் , அவரும் மகளின் வீட்டில் சீமந்தம் முடியும் வரை இருப்பது என்று அங்கே இருந்து கொண்டார் ..

"அண்ணா , பிரேமா அண்ணி கிட்ட நானே பேசுறேன், நீங்க கவலை படாதீங்க, அவங்கள உங்க சொந்தகாரங்க சீமந்ததுக்கு வரும்போது, அவங்களும் வர மாதிரி நான் பார்த்துகிறேன், சம்மந்தி முறையில நான் தான் அவங்கள அழைக்கணும், அது செஞ்சிட்டு போறேன் , நீங்க இப்போவே ஏன் அவங்க வர மாட்டாங்கன்னு கவலை படுறீங்க," என்று ஷோபா விஜயனிடம், சீமந்ததிற்கு , பிரேமாவை அழைப்பதாக கூறினார் ..

நீங்க ஏன் அவங்களுக்கு போன் செய்து பேசணும், எதுக்கு அவமான படணும், என்று நிஷா அவள் மாமியாரிடம் படபடதாள் ..

"எதுவும் பேசாமலயே, நீயே ஏன் மா உங்க அம்மா என்னை அவமான படுத்துவாங்கனு சொல்றே," விஜயனுக்கும் அதே கேள்வி தான் , நிஷாவும், அன்னையின் மீது எப்பொழுதும் இப்படி கோவத்தில் இருக்கிறாளே, எதற்கு அன்னை மீது இப்படி ஒரு கோவம், என்று அவருக்கும் புரியாமல் , மகளையும் இப்பொழுது, கேள்வி கேட்கும் நேரமும் இல்லை என்று, நினைத்து இருந்தார் ..

"எனக்கு அவங்கள பற்றி நல்ல தெரியும் , அதான் வேற எதுவும் கேட்காதீங்க," என்று அவள் ஷோபாவிடம் பேசும்போதே ஸ்ரீயிடம் இருந்து அழைப்பு ..

"ஹாய், அக்கா எப்படி இருக்கீங்க, என்ன இரண்டு நாளா போன் இல்ல ?"
ஸ்ரீ ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள் , அபி ஸ்ரீயின் தொழில் அழுத்தம் கொடுத்ததும், சுயத்திற்கு வந்த , ஸ்ரீ, உன்கிட்ட ஒன்னும் கேட்..
என்று பாதியிலே விட்டு, "எப்படி இருக்க ," என்று அவளின் நலத்தை முதலில் விசாரித்தாள் ..

"உன் பிரஷர் லெவல் எல்லாம் நோர்மல் இருக்குதா?" என்று அவளின் உடல் நிலை பற்றி தெரிந்து அதன் பிறகு என்ன பேசுவது என்று அமைதியாக இருந்தாள் ..

"அக்கா , நீங்க என் கிட்ட ஏதாவது பேசனுமா , எதுக்கு இவ்வளவு டீடெயில்ஸ் , ஏதோ கேட்கணும்னு பாதிலேயே விட்டீங்க , நான் நோர்மல் தான், சொல்லுங்க" என்றாள் ..

"தனியா எங்கயாவது வந்து பேசு, எங்க இருக்க," என்று ஸ்ரீயும் கேட்டாள் ..
"பயங்கர பீடிகை தான் , வெய்ட்" என்று, ஷோபாவிடம், "மாடிக்கு போறேன் ," என்று வெளியே வந்து படிக்கட்டு வழி ஏறினாள் ..

அவள் தந்தையும் எங்கு என்று பார்த்தாள் , அவர் இல்லாதது கண்டு எங்கேனும் வெளியில் சென்று இருப்பார் என்று, ஷோபாவிடம் மட்டும் கூறி விட்டு மாடி ஏறினாள் ..

"ஹ்ம்ம், இப்போ சொல்லுங்க என்றாள் , என்ன சொல்றது நிஷா, உங்க அம்மா பற்றி தான், நான் உன் கிட்ட கேட்கணும் , அம்மாவா , நா ..ன் என்ன சொல் ..றது ," நிஷாவுக்கு தொண்டை வறண்டது..

"நீ ஏன் இப்படி திக்குற , என்ன நடந்துச்சு, உனக்கும், உங்க அம்மாக்கும் , என்ன பிரச்சனை , இங்க அவங்க கிட்ட கொடுத்த கம்பெனி சரி இல்லை" ..
"எனக்கு இப்போவே நீ மறைக்கிற விஷயம் தெரியணும், ப்ளீஸ் டா , நம்ம குடும்பத்துக்கு நல்லது நடக்கணும்னு, நீ நெனச்சினா , அவங்க , சுயரூபத்தை எல்லாருக்கும் காட்டணும் ," கம்பெனியில் நடந்தது முதல், மருத்துவமனையில் பிரேமாவிடம் பேசியது வரை அனைத்தும், ஸ்ரீ நிஷாவிடம் கூறினாள் ..

"ஹம்ம, உங்களுக்கு இப்போ தெரிஞ்சது எனக்கு பத்து வயசுலயே தெரிஞ்ச விஷயம் அக்கா.."

"என்ன டீ சொல்ற, இருவரும் அதிர்ந்தனர் , "

அதே நேரத்தில் ஆதி ஆடிட்டர் வீட்டில், அவனின் சந்தேகளை கூறினான் , அவரிடம்..

ஆனால் , அவரோ அவனின் முகத்தை நேர் கொண்டு பார்க்க வெட்க பட்டு, ஆதியின் கைகளை எடுத்து அவர் கண்களில் ஒற்றி கொண்டு, "என்ன மன்னிச்சுடு ஆதி , உங்க அப்பாக்கு நான் நல்ல பிரெண்டா , இல்ல," என்று அழுதார் ..

"அங்கிள் இவ்வளவு பணம் கணக்குல வரல, ஆனா எப்படி , நீங்க தானே ஆடிட் பண்றது," கம்பெனியில் போலீசிடம் சிக்கியவர்கள் , அவன் கொள்ளை அடித்த பணம், என்று அனைத்தும் அவரிடம் கேட்டான் ..

"இவ்வளவு நடந்தும், என்னை நீ சந்தேக படலேயே , எனக்கு அதுவே போதும் ஆதி , அவங்க பணம் அடிச்சதுக்கு நானும் ஒரு வகை மறைமுகமா உடந்தையா இருந்து இருக்கேன் பா ,"என்று அழுதார்


"இப்போ அந்த பொறுக்கிங்க போலீஸ்ல மாட்டுனாங்கனு நீ சொல்றதால , நான் உனக்கு ஒரு உண்மையை சொல்லுறேன்..

"ஏன் ஆதி எல்லா போடோஸும், போலீஸ் கிட்ட கெடச்சிடுச்சு இல்ல , இனி ஒன்னும் பிரெச்சனை இல்ல தானே" , என்று மீண்டும் மீண்டும், கேட்டார் ..

"அங்கிள் நீங்க இவ்வ்ளவு பயப்படறது , எனக்கும் புரியற மாதிரி இருக்கு, அந்த பொறுக்கீங்க பற்றி, உங்களுக்கு முன்னாடியே தெரியுமா , அவங்க போன் லேப்டாப், இன்னும் அவங்க தகவல் எல்லாம் இப்போவே
போலீசில் அழிச்சிட்டாங்க , இனி ஆயுசுக்கும் அவங்களால வெளிய வர முடியாது "..

"நீங்க எதுவும் இனி பயப்பட வேணாம் , உங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சுனா சொல்லுங்க, இல்ல உங்கள் நீங்க வருந்திக்காதீங்க," பார்த்துக்கலாம் விடுங்க அங்கிள்," என்று அவரை தேற்றினான் ..
சந்தீப் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்று விட்டான் ..

ஆதி அந்த பிரேமா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை பா, பணம் ஆசை கொண்ட பேய்..
அந்த பொம்பள வந்ததுல இருந்து எந்த கணக்கும் சரி இல்லை ..
நிறைய காசு அடிச்சி இருக்கா , அதுலயும் அந்த சந்தோஷ் கும்பல் , இவளோட எப்படி லிங்க் ஆச்சுன்னு , தெரியல , ஒரு நாள் , என் பொண்ணு குளிக்கிற வீடியோ எனக்கே காமிச்சாங்க பா , ஒரு அப்பாவ, நான் எப்படி அந்த நேரத்துல இருந்து இருப்பேன் , என்று அவரின் அழுகையில், ஆதிக்கு பிரேமாவை கொள்ளும் வெறியே ..

ஆடிட் வரும் போது எல்லாம், அவங்களுக்கு சாதகமா நான் எல்லா சரியாய் இருக்குனு சொல்லிட்டு போய்டணும், இல்ல அந்த விடீயோவை , வெளில விட்டுடுவேன் எனக்கு பிளாக் மெயில் செய்து வெச்சிருந்தாங்க" ..

"போலீஸ்க்கு போனாலும், என் பொண்ணோட மானத்துக்கு பயந்து, யாருகிட்டயும் எதுவும் சொல்லாம எனக்குள்ளயே மறைச்சி வெச்சி வாழறேன் பாரு, அதுக்கு நான் செத்துடலாம்" ..

எப்படி என் பொண்ணு தங்கி படிக்கிற ஹாஸ்டல் போனாங்க , இன்னும் யாரு எல்லாம் இதுல இருக்காங்கனு , எனக்கு ஒன்னும் புரியாம, நானும் உங்க கம்பெனிக்கு , உண்மையா இருக்க முடியல ..

இப்போ எல்லாரும் மாட்டுனதா சொன்னியே, இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு , இனி பிரச்னை இல்லை பாரு , என்று என்று அவர் கண்களை துடைத்து கொண்டு , நிமிர்ந்து அமர்ந்தார் ..

பிரேமாவும் இதுல இருக்கா , ஆனா , அந்த சந்தோஷ் சொல்ல மாட்டான் , அவனுக்கு வெளி உலகத்துல இருந்து, செயல்படறத விட, மக்களோட ஒன்றி இருந்தா , அவனுக்கு பிரச்னை இல்லனு, உங்க கம்பெனியே தேர்ந்து எடுத்து இருக்கிறதா சொன்னியே , அதுக்கு பிரேமா தான் உதவி இருக்கணும் "..

நான் என்ன பண்ணனும்னு நீ இப்போ எதிர் பார்க்கிற ஆதி , என்றார் ..
ஆதிக்கு தான் என்ன சொல்லுவது என்று தெரியாமல் , இரு கைகளையும் அழுத்தி கண்கள் மூடி அமர்ந்து இருந்தான் . இந்த தகவலில் ..

"பெண்களுக்கு பாவம் செய்றவங்க , நம்ம குடும்பத்திலா , இவங்கள
இத்தனை நாள் எப்படி நம்ம குடும்பத்துக்குள்ள விட்டு வெச்சோம் "..

"என்ன ஆதி ", என்று அவர் ஆதியை அழைத்து , பிறகு நிகழ்வுக்கு வந்த ஆதி , அனைத்தும் சிவநேசனிடம் கூறுமாறு கேட்டான் ..

"நான் என் நண்பன் கிட்ட சொல்றது பிரச்னை இல்லை ஆதி, இன்னும் சொல்ல போனா , நான் இவ்வளவு நாள் அவனுக்கு துரோகம் தான் செய்து இருக்கேன், ஒரு போன் காட்டியே என்னை மிரட்டி வெச்சிருந்தாங்க ..
இனி அந்த கவலை இல்லை பாரு.. நான் இப்போவே வரேன் ..

ஒவ்வொரு முறையும், உங்க கம்பெனிக்கு ஆடிட் பண்ணும் போது, நான் செய்ற துரோகம் , பேசாமல் எல்லாம் எழுதி வெச்சிட்டு செத்துடலாமா தோணும்,"

"ஆனா என் பொண்ணுக்கு எந்த பிரெச்சனையும் வர கூடாது, இந்த விஷயம் என் மனைவிக்கும், பொண்ணுக்கும், இந்த உலகத்துக்கும் தெரியக்கூடாதுனு , நான் ஒரு நடைபிணமா இருந்தேன் .."

"அங்கிள் , எனக்கு, உங்க வருத்தம் புரியது, நானும் எதுவும் இந்த கம்பெனிய கவனிக்காம இருந்துட்டேன், என் தப்பு தான்" ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top