என்னை சிரிப்பால் சிதைத்தவளே 9

Advertisement

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer

அத்தியாயம் 9


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


“Hey stop laughing ashok. Am I look like a joker? You have to be in my situation… then only you come to know...How sad I am?”

அவன் எவ்வளவு கவலை படுகிறான் என்பதை புரிந்து கொண்ட அசோக், “hey I’m very sorry da. I’m seriously talking… learn tamil da aswanth…. Then every problem will be solved… you can understand what she is talking and can communicate also”.

“No way da… oh god… learning tamil is such a typical task for me. It’s not possible… so I’m not going to try this stupid idea”.

“Instead of learning tamil, I will teach her english”.

“You forgot one thing aswanth…. Atleast she knows little english, but your side…you are completely zero in tamil”.

“So atleast, you have to learn some basics in tamil. That’s it. If you want, you can learn. It’s your wish” இதற்கு மேல் நீதான் முடிவெடுக்கணும் என்று கூறிவிட்டு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் அசோக் திரும்பி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்து விட்டான்.

அவன் இதற்கு முன்னாடி தமிழ் படிக்க ட்ரை பண்ணியதே இல்லை என்றெல்லாம் கூற முடியாது.

சகுந்தலாவின் வற்புறுத்தலால் அவன் ஒருமுறை தமிழ் படிக்க முயற்சி செய்தான். அவன் கைகளில் இருந்த ‘learn tamil through english’ என்ற புக்கினை ஐந்து நிமிடம் கூட திருப்பி பார்த்திருக்க மாட்டான், “grandma” என்று அழைத்தவன்,”this book is really tough. I’m not getting anything… is it really needed to learn or what? You know english and company people also knows. Then why I want to learn” என்று அந்த புக்கினை ஒரு மூலையில் தூக்கி போட்டு விட்டான். அதன் பிறகு அவன் தமிழ் படிக்க சுத்தமாக முயற்சி பண்ணவே இல்லை.

இப்பொழுது அந்த புக்கினை எடுத்து திரும்பவும் படிக்கணுமா என்று நினைக்கவே அவனுக்கு மலைப்பாக இருந்தது.

அவன் மனதிற்குள்ளே பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தவன், கடைசியாக,”No aswanth... You can’t. So teach her english. This is best” என்று முடிவெடுத்தவனாய் அதன் பிறகு வந்த வகுப்பில் கவனம் செலுத்தினான்.

அங்கே அஸ்வந்த்திடம் பேசிவிட்டு வகுப்பிற்கு சென்ற வைதேகியோ பத்து நிமிடம் லேட்டாக வகுப்பிற்கு வந்திருந்தாள்.

“Sorry mam sorry mam” என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டிவிட்டு “this is the last warning” என்ற வார்த்தைகளுடன் உள்ளே நுழைந்தாள்.

தன்னிடத்தில் அமர்ந்த வைதேகியால் பாடத்தை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. அவளையே கவனித்து கொண்டிருந்த சுவேதா என்ன ஆச்சு இவளுக்கு என்று நினைத்து கொண்டு, ஓகே இண்டெர்வல்ல விசாரிச்சுக்குவோம் என்று விட்டுவிட்டாள்.

இண்டெர்வலுக்கான நேரமும் வந்தது, ஆனால் வைதேகி தன்னுடைய யோசனையிலிருந்து கலைவதாய் இல்லை. இவன் ஏன் நம்ம கிட்ட பேச இவ்ளோ தவிக்கிறான். அவளுடைய எண்ணம் முழுவதும் அஸ்வந்த்தே நிறைந்திருந்தான்.
இவளுக்கு என்னதான் ஆச்சு என்ற நினைத்த சுவேதா, "ஹே வைதேகி வா கொஞ்சம் வெளில போயிட்டு வரலாம்”

“நான் வரலடி நீ போய்ட்டுவா”

இவள இப்படியே விட்டா சரிப்பட்டு வராது என்று அவளது கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

வெளியே அவளை இழுத்து சென்று நிறுத்தியவள், “அன்னிக்கு லேப்லயே சொல்றேன்னு சொல்லிட்டு எதுவுமே சொல்லல. நீ இந்த டூ டேஸ்சா ஏதோ சரியில்லடி. எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கன்னு தெரியுது”.
“I think he is the reason. Am I right?”

அவள் கேட்டதில் அதிர்ச்சியுற்ற வைதேகி, "அப்படியெல்லாம் இல்ல... கொஞ்சம் உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு. அதான் டல்லா இருக்க மாதிரி உனக்கு தெரியுறேன்".

“Stop lying vaithegi. Tell me everything from the beginning”.

‘இவகிட்ட சொல்லாம விடமாட்டா போலயே’ என்று நினைத்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து காலை நடந்தது வரை அனைத்தையும் கூறி முடித்தாள். தன் மனதில் தோன்றிய “உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு” என்ற எண்ணங்களை மட்டும் கூறாமல் மறைத்து விட்டாள்.

ஏனெனில் அவளுக்கே தன் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஏன் வந்தது என்று புரியவில்லை. அதனால் அவளிடம் சொல்லி ஏன் அவளையும் குழப்ப வேண்டும் என்று மறைத்து விட்டாள்.

வைதேகி சொல்லிய அனைத்தையும் உள்வாங்கிய சுவேதா, “ஒரு வேல அவன் இவள லவ் பன்றானோ” என்ற சந்தேகம் அவளுள் எழுந்தது.

எதையும் கன்பார்ம் பண்ணாம நம்ம பாட்டுக்கு அவகிட்ட உளறி வைக்கக்கூடாது என்று நினைத்தவள் வைதேகியை பார்த்து, “இனிமேல் நீ எங்க போனாலும் என்னையும் கூட கூட்டிட்டு போ” என்று கூறிவிட்டு "வா கேன்டீன்ல போய் ஒரு காபீ சாப்டுட்டு வருவோம்” என்று அழைத்தாள்.

“Hmm சரி” என்று அவளுடன் புறப்பட்ட வைதேகிக்கு, சுவேதாவிடம் அனைத்தையும் கூறியவுடன் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.

எல்லாம் அஸ்வந்த்தை பார்க்கும் வரை தான், மாலையில் டிபார்ட்மென்ட் முன்னாடி மறுபடியும் அவனை பார்த்தவளின் மனதில் ஏனென்று புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை கடந்து செல்லும் வரைக்கும் தன்னையே அறியாமல் அவனை பார்த்து கொண்டே சென்றாள்.

வைதேகியுடன் வந்த சுவேதா டிபார்ட்மென்டின் எதிரில் நின்ற அஸ்வந்த்தை கண்டு விட்டாள். அவன் பார்வை முழுவதும் வைதேகியிடமே இருப்பதை கண்டவள். அவன் கண்களில் ஒரு தவிப்பு தெரிவதை கண்டாள். இவனுக்கு அப்படி என்ன தவிப்பு என்று யோசித்து கொண்டே அவளும் வைதேகியுடன் நடந்தாள். இருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஒருவர் மற்றவருடன் பேசாமல் தங்களது உலகத்தில் சஞ்சரித்தவர்களாக நடந்து கொண்டிருந்தனர்.

அங்கு நின்று கொண்டிருந்த அஸ்வந்த்திற்கோ வைதேகி தன்னையே பார்த்துக்கொண்டு செல்வதை கண்டு அவனால் சுத்தமாக அங்கே நிற்கமுடிய வில்லை. தன் மனதில் தோன்றிய உணர்வுகளை அவளிடம் கொட்டி தீர்க்கவேண்டும் என்று தவித்தான். அவனுடைய மனமோ “நீ என்ன சொன்னாலும் அவளுக்கு புரிய போறதில்ல” என்று அவனை அங்கிருந்து நகரவிடாமல் தடுத்தது.

இதுக்கு மேல முடியாது என்று நினைத்தவன்,”I’m going to learn tamil. Yes. This is only for you smilee…” என்று தன்னை நினைத்தே சிரித்து கொண்டு தான் ஏறவேண்டிய பேருந்தை நோக்கி கிளம்பினான்.

அங்கே வைதேகியோ எனக்கு என்ன ஆச்சு நான் ஏன் அவனை பற்றியே யோசிச்சிட்டு இருக்கேன் என்று குழம்பி கொண்டிருந்தவள் சிரிது நேரத்தில் விடை தெரியாததால் தனக்கு தானே "ச்ச வைதேகி நீ நீயாவே இல்ல டி...

இனிமேல் நீ அவனை பற்றி நினைக்க கூடாது. அவன் யாரோ நீ யாரோ... வா டீ குடிச்சிட்டு விளையாட கிளம்புவோம்” என்று அவனை மட்டும் சிந்திக்கும் தன் மனதை வலுக்கட்டாயமாக திருப்பினாள்.

கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கிய அஸ்வந்த் வீட்டினுள் நுழையும்போதே “grandma…grandma…” என்று கத்திக்கொண்டு போனான்.

அங்கு ஹாலில் அமர்ந்திருந்த கணேசனோ, “what happened aswanth… any problem” என்று கேட்டார். அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த சொப்னாவோ அவனை பார்த்து முகத்தை திருப்பினாள்.

அவளுடைய முக திருப்பல்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காத அஸ்வந்த், “nothing uncle. Where is grandma?”

அவன் அவரிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே தன்னுடைய அறையில் இருந்து “என்னடா கண்ணா” என்று கேட்டு கொண்டே சகுந்தலா வெளியே வந்தார்.

“Grandma…. Where is that book?”

இவன் எந்த புக்க கேட்கிறான் என்று நினைத்தவர், “which book aswanth?” என்று கேட்டார்.

“That book grandma… hmm… learn tamil through english book”.

அவன் கூறிய புக்கின் பெயரை கேட்டவருக்கு ஒருநிமிடம் தன் காதில் எதுவும் தவறாக விழுந்து விட்டதோ என்று சந்தேகம் வந்து விட்டது. அதனால் அவர் அஸ்வந்த்திடம் “repeat again” என்று அவன் கூறியதை திரும்ப கேட்டார்.

‘ப்ச்’ என்று சலித்தவன்…”learn tamil through english book” என்று மறுபடியும் கூறினான்.

“நம்ம ஒழுங்கா தான் கேட்டிருக்கோமா ஆனா நம்ம படிக்க சொன்ன போதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப என்ன திடிர்னு என்று தோன்றியதை” அவனிடமே கேட்டார்.

“Why suddenly aswanth”

“Simply” வேறு எதுவும் அவன் கூறவில்லை.

ஆனால் சகுந்தலாவிற்கு ஏதோ புரிவதை போல் தோன்றியது... ஒருவேளை அன்று ஒரு பெண்ணை பற்றி பேசி கொண்டிருந்தானே அவளால் இருக்குமோ என்று நினைத்து கொண்டவர்க்கு அஸ்வந்த் தமிழ் கற்று கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சிதான்.

ஏனெனில் அவருக்கு தமிழ்நாட்டில் பிறந்தவனுக்கு தமிழ் பிடிக்கவில்லை என்று கூறியது அவருக்கு வருத்தமாக இருந்தது. அதனால் முகம் தெரியாத அந்த பெண்ணிற்கு மனதார நன்றி கூறினார்.

அவர்கள் பேச்சில் இடையிட்ட சொப்னா,”hey asu... what da..are you going to learn tamil?”
“Hmm” என்று மட்டும் அவளிடம் கூறியவன் சகுந்தலாவிடம் மறுபடியும் “where is that book?” என்று கேட்டான்.

“It’s in your room only aswanth… in that book loft”

“Thanks grandma” என்று சொல்லிவிட்டு தன் ரூமிற்கு ஓடினான்.

அவனின் செயல்களை புரிந்து கொள்ள முடியாத சொப்னா, “what’s going on here” என்று சகுந்தலாவை பார்த்து கேட்டாள்.

“Nothing da shopna. Have some tea” என்று வேலைக்காரி கொண்டு வந்த டீயினை எடுத்து அவளுக்கு கொடுத்தார்.

மேலே தன் அறைக்கு சென்ற அஸ்வந்த் அந்த புக்கினை தேடி எடுத்து கடவுளே புரியனுமே என்று வேண்டிக்கொண்டே திகிலுடன் அதனை திறந்தான்.




என்னை சிரிப்பால் சிதைத்தவளே
தொடரும்.......
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
கிராண்ட்மா சகுந்தலா சொல்லி
படிக்காத நம்ம அஷுத் தம்பி,
அவனோட ஸ்மைலீ-க்காக
டமில் படிக்கப் போறானா?
அஸ்வந்த், தமிழ் படிச்சுடுவானா,
தாரணி டியர்?
 

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...........
கிராண்ட்மா சகுந்தலா சொல்லி
படிக்காத நம்ம அஷுத் தம்பி,
அவனோட ஸ்மைலீ-க்காக
டமில் படிக்கப் போறானா?
அஸ்வந்த், தமிழ் படிச்சுடுவானா,
தாரணி டியர்?
hmm.... padichu dhaana aganum.... anaa athukkulla enna padu padaporaannu therlaye....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top