என்னுள் சங்கீதமாய் நீ 28 1

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 28



“ஹர்ஷ்.. இந்த ஃப்ரைடே என் டே... அன்னிக்கு புல்லா நீ என்கூடத்தான் இருக்க போற.. சோ அன்னிக்கு உன்னை ப்ரீ பண்ணிக்கோ.. லாட்ஸ் ஆப் சர்பரைஸ் இஸ் தேர் பார் யூ.. பி ரெடி..” என்ற ஜெயின் குதூகல குரல்,

நான்கு நாள் முடிந்த பின்னும் இன்னும் ஹர்ஷினியின் காதில் ஒலித்து கொண்டே அவளை பரவச படுத்தி கொண்டிருந்தது.

அன்று மாலில்.. அவன் காதலை சொல்லவில்லை என்று கேட்ட போது.. “இப்போயெல்லாம் சொல்ல முடியாதுடி.. அதெல்லாம் சொல்லும் போது பக்காவா சொல்லுவோம்.. இன்னும் கொஞ்ச நாளுக்கு மாமா எப்போ லவ்வை சொல்வேன்னு வெய்ட் பண்ணிட்டே இரு..” என்று முடித்துவிட்டான்.

அதற்கு பிறகு இருவர் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள்.. “ஹர்ஷினி தன் படிப்பை முடிக்கவும், ஹோட்டல் பொறுப்பை எடுத்து கொள்ளும் படி ஆச்சார்யா எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காதவள், சுபத்ராவும், ரேணுகாவும் சொல்லத்தான் கேட்டாள்”.

அதுவும் “முதலாளியாக இல்லாமல் எப்போதும் போல் வேலை மட்டுமே பார்ப்பேன்..” என்று உறுதியாக நின்றுவிடவும், வேறுவழி இல்லாமல் “வர ஒத்துக்கொண்டதே போதும்..” என்று ஆச்சார்யாவும் விட்டு விட்டார்.

ஜெய்.. சுபத்ராவிடம் பயிற்சி முடித்ததும், முதலில் சில கஷ்டங்கள் வந்தாலும், தன்னம்பிக்கையுடன் போராடி தன் திறமையின் மூலம் ஒரு டான்ஸ் மாஸ்டரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டான், சேர்ந்த பின்னும், எடுபடி வேலை தான் செய்ய வேண்டியிருந்தது,

அவனுக்கு முன்னால் ஏற்கனவே நான்கு பேர் அந்த டான்ஸ் மாஸ்டரிடம் உதவி இயக்குனராக இருந்தனர். இருந்தாலும் முட்டி மோதி தன் திறமையை காட்டி சில பாடல்களுக்கு சில ஸ்டெப்ஸ்கள் கிடைத்தன, அதையும் தன் தனி ஸ்டைலில் சூப்பராக செய்யவும் தான் அடுத்து சில வாய்ப்புகள் கிடைத்தன,

பல மாத போராட்டங்கங்களுக்கு பிறகே, “தனியாகவே ஒரு முழு பாடலுக்கு டான்ஸ் கோரியோகிராப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது”, சரியாக அந்நேரத்தில் தான் தாரணியின் திருமணமும் கூடி வர,

“ஒரு அண்ணனாக தன்னால் எதுவும் செய்ய முடியாமல் வருத்தபட.. ஹர்ஷினி தான் அவனின் நிலையை புரிந்து அவனுக்காக எல்லாமே தாரணியின் துணையோடு செய்து கொடுத்தது”,

அவன் “தனியாகவே கோரியோகிராப் செய்த பாடல் அதில் உள்ள தனிதன்மையான நடனத்துக்காகவே மிகவும் பிரபலமடைய”, அதற்கு பிறகு இரண்டு, மூன்று பாடல் செய்தவன், இப்பொழுது “ஒரு முழு படத்துக்கும் அவன்தான் டான்ஸ் மாஸ்டர்”,

அந்த படமும் ஹிட் ஆக அதில் உள்ள பாடல்களும் மிக சிறப்பாக இருக்க, ஜெய் தன் முழு உழைப்பையும், திறமையும் கொட்டி மிகவும் சிறப்பாகவே கோரியோகிராப் செய்து கொடுக்க, பாடல்களோடு சேர்ந்து அவனின் டான்ஸும் எல்லாராலும் மிகவும் கவரப்பட்டதோடு. அவனை பற்றியும் அதிகமாக பேசப்பட்டது,

அதை எல்லாம் நினைத்தபடி அமர்ந்திருந்த ஹர்ஷினியின் போன் ஒலிக்கவும் எடுத்து பார்த்தால் ஜெய் தான், “ஹண்ட்ரட் இயர்ஸ் உங்களுக்கு, இவ்வளவு நேரம் உங்களை பத்திதான் நினைச்சிட்டு இருந்தேன்..” என்று சந்தோஷமாக சொல்ல,

“அதான்.. எனக்கு தெரியுமே, உனக்கு எப்பவும் மாமன் நினைப்பு தான்..” என்று ஜெயும் உல்லாசமாக சொல்ல, அவனின் பெருமையில் ஹர்ஷினி உதடு சுழிக்கவும்,

“என்ன நான் சொன்னதுக்கு உதடு சுழிச்சிருப்பியே”, என்று ஜெய் சரியாக கேட்க, எப்பொழுதும் போல் அவனின் கணிப்பில் பெருமை கொண்டாலும், “ஆமா.. நீங்க ரொம்பத்தான் கண்டீங்க”,

“ஏன் நான் உன்னை கண்டதே இல்லையா..?” என்றான் கிறக்கமாக.. அவனின் கிறக்கத்தில் தன் உதட்டை கடித்த ஹர்ஷினிக்கு, “எப்படி இல்ல என்று சொல்ல முடியும்..?”

எப்போதாவது வெகு அபூர்வமாக கிடைக்கும் தங்களின் தனிமை பொழுதில் எல்லாம் அவனின் நோக்கம்.. செயல் எல்லாம் இத்தனை நாள் பிரிவை ஈடுகட்டுவது போல் அவளை கட்டி தழுவதிலும், தொடர்ந்து முத்தம் கொடுப்பதிலும் தான் இருக்கும்,

பேச ஆரம்பித்தாலே, முத்தம் கொடுத்துவிடுபவன், “அதான் போன்ல பேசுறோமே அதே போதும்.. இப்போ மாமனை கவனடி.. நாம இந்த மாதிரி தனியா சந்திச்சு குறைஞ்சது ஆறுமாசமாவது இருக்கும்..”

“எப்போ திருப்பி இந்த மாதிரி தனியா இருக்க முடியுமோ..? வந்துட்டா பேச, திருப்பி எதாவது பேசுன.. பேசுற உன் உதட்டை கடிச்சு வச்சிருவேன் பாத்துக்கோ..” என்று மிரட்ட,

“இப்போ மட்டும் கடிச்சு வக்கிலியா நீங்க.. பாருங்க என்று தன் வீங்கிய உதட்டை காண்பித்தால், கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாதடி”, என்று சொல்வதும்.. அதற்கு பிறகு அந்த காயத்துக்கு அவன் உதட்டாலே திரும்ப திரும்ப மருந்து போடுவதும் தான் நடக்கும்..

“என்னடி பதிலே சொல்ல மாட்டேங்கிற..? ஒருவேளை மாமன் சரியா கவனிக்கலையோ..?” சரி விடு.. அதான் “நாளைக்கு புல்லா என் டே தானே.. நீ எப்பவும் மறக்காத மாதிரி உன்னை சிறப்பா கவனிச்சிறேன்..” என்று குறும்பு போல் சொன்னாலும், அதில் தெரிந்த அவன் காதல் தாபத்தில் இப்போதே உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தது ஹர்ஷினிக்கு,

“விட்டா.. இவர் விடியவிடிய இதுபோலே பேசிட்டிருப்பர்..” என்று மனதுள் செல்லமாக நொடித்தவளின், மனசாட்சி விழித்து, “என்னமோ அவன் பேசுறது உனக்கு பிடிக்காத மாதிரி ரொம்ப தான் நொடிக்கிற..” என்று நக்கல் செய்ய,

“ம்ப்ச்.. உன்னை யாரு கேட்டா.. நீ உன் வேலையை பாரு..” என்று அதனை அதட்ட.., “என் வேலையே இது தான்..” என்று அவளின் மனசாட்சி அதற்கும் நக்கல் செய்ய, “நீ முதல்ல உள்ள போ.. இப்போ நான் அவர்ட்ட பேசணும்” என்று அதை அடக்கியவள்,

“நாளைக்கு என்ன ஸ்பெஷல்..?” என்று எதிர்பார்ப்புடன் கேட்க,

“என்னடி பேச்சை மாத்தறியா..? சரி இப்போதைக்கு பொழைச்சு போ.. நேர்ல என்ன செய்வன்னு நானும் பாக்குறேன்..” என்று உல்லாசமாக சொல்ல,

“நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லல..” என்று மறுபடியும் கேட்க,

“ஏன் உனக்கு தெரியதாக்கும்..? இதை என்னை நம்ப சொல்றியா..? போடி” என்று நொடிக்க,

“ம்ஹூம்.. யோசிச்சேனே.. ஆனா எனக்கு உண்மையிலே தெரியல..”என்று “நாளை அவன் பிறந்த நாள்..” என்று தெரிந்தும் குறுஞ்சிரிப்புடன் சொல்ல,

“நம்பிட்டேன்..” என்று கிண்டாலாக சொன்னவன், “எல்லா வருஷமும் நான் எங்கிருந்தாலும் தேடி பிடிச்சி கிப்ட் அனுப்புறவளுக்கு.. இந்த வருஷம் மறந்து போச்சாம்.. சரி விடு அப்படியே இருக்கட்டும், நான் நாளைக்கு நேர்லே வந்து நீ இந்த நாளை எப்பவும் மறக்காத மாதிரி செஞ்சிடுறேன்.” என்று காதல் வம்பு செய்தவன்,

“சரிடி.. எனக்கு பிளைட்க்கு டைம் ஆச்சு.. உன்கிட்ட பேசினாலே என் நேரம் வேகமா ஓடுது,ஆனா அப்பவும் பத்தமாட்டேங்குது போடி..” என்றவன்,

ஏய் நான் அனுப்பின xxx கம்பெனி கொரியர் கிடைச்சுதா..? என்று கேட்க,

கொரியரா..? இல்லையே..? எப்போ அனுப்பினீங்க..?

நேத்து தாண்டி அனுப்பினேன்..

ம்க்கும்.. நீங்க இருக்கிறது இமாச்சல்.. இப்போதான் சென்னையே வந்திருக்கும், நாளைக்கு தான் இங்க வரும் என்று சொல்ல,

அய்யோ.. அப்போ எப்படி..? போடி உனக்காக தேடி பிடிச்சி ஆசையா வாங்குன சாரீ.. நாளைக்கு அதை தான் உன்னை கட்டிக்கிட்டு வரச்சொல்லலாம்ன்னு தான் போனே பண்ணேன்.. ம்ப்ச் போடி என்று கடுப்பாக சொன்னவன் வைத்துவிடவும்,

“இந்த முறை அவன் கிப்டை தவற விட கூடாதென்று..” நொடியில் யோசித்து வேகமாக செயல்பட்டவள், அங்குள்ள அவன் அனுப்பிய கொரியர் ஆபீஸ்க்கு போன் செய்து, கோரியரை தன் செலவில் பிளைட்டில் அனுப்ப செய்தவள்,

அன்றே அந்த கொரியர் தன் கையில் கிடைக்கும் படி விடாமல் பாலோ செய்தவள், அன்று மாலையே கொரியர் தன் கையில் கிடைக்கவும், “தனக்காக முதன் முதலாக அவன் கொடுத்த கிப்ட்..” என்ற அளவில்லா மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீரோடு அதை தடவி கொடுத்தவள், சிறிது நேரம் சென்ற பின்னே அதை பிரித்து பார்த்தவளின் முகம் அளவில்லா சிரிப்பில் விரிந்தது.

“நினச்சேன்.. கண்டிப்பா இந்த கலர்ல தான் எடுத்துருப்பாருன்னு..” என்று காதலாக அலுத்தபடி அந்த “குங்கும கலர்..” புடவையை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். மறுநாளே பிளவுஸ் கையில் கிடைக்கும் படி பார்த்துக்கொண்டவள், ஜெயின் ஆசைப்படி அதையே கட்டிக்கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடும்,

“இன்றாவது தன் காதலை சொல்வானா..?” என்ற எல்லையில்லா எதிர்பார்ப்போடும் அவன் சொன்ன கோவிலில் வெய்ட் செய்து கொண்டிருந்தவளிடம் வேகமாக வந்த ஜெய்,

சிறிது தூரத்திலே அவளின் புடவையை கண்டு ஆனந்த அதிர்ச்சியில் இரண்டு நொடி நின்றவன், பின் முன்னிலும் வேகமாக அவளை நெருங்கியவன், “ஏய்.. இந்த இந்த சாரி .. நான் எடுத்ததுதானே..” என்று மகிழ்ச்சியில் கொஞ்சம் சத்தமாகவே கத்தவும்,

ஷ்ஷ்.. மெதுவா, மெதுவா பேசுங்க.. எல்லாம் உங்களை தான் பாக்குறாங்க என்று ஹர்ஷினி உரிமையாக அதட்ட,

“ச்ச்சு.. பாத்துட்டு போட்டும் போடி” என்றவாறே அவளை தலை முதல் பாதம் வரை ரசித்து பார்த்தவன், “நான் நினைச்சதை விட நீ இன்னும் இந்த சாரியில் சூப்பரா இருக்கடி..” என்ற படி அவளை மேலும் நெருங்கவும்,

“அச்சோ.. என்ன பண்றீங்க.. இது கோவில்..” வாங்க முதல்ல சாமி கும்பிட்டிட்டு வந்துரலாம்.. டைம் ஆச்சி.. நடை சாத்திட போறாங்க.. என்றபடி அவனை இழுத்து கொண்டு சாமி கும்பிட்டிட்டு வெளியே வரவும்,

“நீ எதுல வந்த..?”

“கார்ல தான் வந்தேன்..” என்று தன் காரை காட்டவும்,

ஓஹ்.. ஓகே.. அது இங்கேயே இருக்கட்டும்.. வா நாம என் பைக்ல போலாம் என்று அழைக்கவும், சாரி கட்டிக்கொண்டு எப்படி பைக்கில் உட்காருவது என்று “அதுபோல் பழக்கம் இல்லாததால்” ஓர் நொடி யோசித்தவள்,

பின்பு பாத்துக்கொள்ளலாம் என்று ஜெயின் பின்.. அவன் பைக் நிற்குமிடம் சென்றவள், அவனின் பைக்கை பார்த்துவிட்டு, அதிர்ச்சியில் மயக்கமே வருவது போல் இருந்தது,

இது தன் தம்பி கார்த்திக் தாத்தாகிட்ட சண்டை போட்டு ரெண்டு நாள் சாப்பிடாம இருந்து வாங்கின வண்டி மாதிரியே இருக்கு.. ஒருநாள் ஆசைப்பட்டு கார்த்திக் வண்டியில் ஏறியவள், ஏறிய அடுத்த நொடியே பயந்து போய் இறங்கியும் விட்டாள்.

பின் இருக்கும் சீட் மிகவும் உயரமாக, பிடிப்பதற்கும் சைடில் எதுவும் இல்லாமல், உட்காரும் இடமும் சிறிதாக, எதோ வானத்திலே உட்காருவது போல் இருந்தது.

அதற்கு பிறகு எத்தனையோ முறை கார்த்திக் எவ்ளோ கம்பெல் செய்த போதும் பயத்திலே இதுவரை அதில் ஏறாதவள், இன்று ஜெயின் வண்டியும் அதே போல் இருக்கவும், பயத்தில் தொண்டை குழி ஏறி இறங்கியது.

“இது இந்த பைக்..” என்று பயத்தில் திக்கவும், அதை கவனிக்காத ஜெய் வண்டியில் ஏறி அதை ஸ்டார்ட் செய்த படி,

“நானே சம்பாரிச்சி வாங்குன என் பைக்.. நல்லா இருக்குல்ல..” என்று பெருமையாக கேட்பவனிடம், எப்படி தன் பயத்தை சொல்வது..?

“ம்ம்.. ரொம்ப.. ரொம்ப நல்லாயிருக்கு” என்று சொல்லவும்,

“சரி உட்காரு.. டைம் ஆச்சு.. கிளம்பலாம்” என்று அவசரபடுத்தவும், ஊரில் உள்ள எல்லா சாமிகளிடமும் வேண்டியபடி, அவனை பிடித்தவாறே ஏறி அமர்ந்தவுடன், ஜெய் முதலிலே வேகம் எடுத்து பறக்கவும், பயத்தில் மெலிதாக அலறியவள், அவனின் தோளிலே முகம் புதைத்து கொண்டு வழி முழுதும் மனதுள் கந்த சஷ்டி கவசம் சொல்லியபடியே தான் வந்தாள்.

முதலில் ஹோட்டல் சென்று டிபனை முடித்தவர்கள், அடுத்து ஊரை விட்டு வண்டி ஹைவேஸில் வெளியே செல்லவும், கவனித்தாலும் எதுவும் சொல்லாமல் பயத்தில் அவனை ஒன்றியபடியே பயணம் செய்தவள், ஜெயின் பைக் ஹைவெஸ்ஸை பிரிந்து சிறிது தூரமே உள்ள ஒரு கேட்டுக்குள் மெதுவாக செல்லவும், நன்றாக பார்த்தவள்,

“இது எதோ பார்ம் அவுஸ் மாதிரி இருக்கே..?” என்று கேட்கவும்,

“ம்ம். ஆமா..” என்றபடி வீட்டின் முன்னால் வண்டி நிறுத்தியவன், அவள் வேகமாக இறங்கவும், தானும் இறங்கியவன்..

“உள்ளே போலாம், வா” என்று அவளின் கையை தன்னோடு கோர்த்தவாறு அழைத்து சென்றவன், வாசலில் ஒரு வயதான பெண்மணி, சிரித்தவாறே “வாங்கம்மா..” என்றபடி ஆரத்தி எடுக்கவும், புரியாமல் ஜெயயை பார்க்க,

“வலது காலை வச்சி உள்ள வா ஹர்ஷ்..” எனவும், புரிந்தும் புரியாமலும் அவன் சொன்னபடி வலது காலை வைத்து ஜோடியாக உள்ளே சென்றவள், வீட்டின் இயற்கையான உள்ளழகில் கவர்ந்தவாறே நின்ற இடத்திலே தலையை சுற்றி பார்க்கவும்,

அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த ஜெய், “வா சுத்தி பாக்கலாம்.. நீங்க காபி மட்டும் இப்போதைக்கு போட்டு வைங்க..” என்று ஆரத்தி கொட்டிவிட்டு உள்ளே வந்த பொன்னம்மாவிடம் சொன்னவன், ஹர்ஷினியை அழைத்து கொண்டு வீடு முழுவதும் சுற்றி காட்டியவன்,

இறுதியாக மேலே தனியாக இருந்த ரூமிற்குள் அழைத்து சென்றபடி.. “இதுதான் நம்ம பெட்ரூம்..” என்று தாபமாக சொல்லியபடி அவளை நெருங்கவும், அவன் முகத்தில் தெரிந்த “காதல் தாபத்தில் ஹர்ஷினியின் முகம் வெட்கத்தில் சிவந்து, கை.. கால் எல்லாம் சில்லிட்டு, துடிக்கும் உதடுகளுடன், மெலிதாக நடுங்கியபடி நின்றவளை”,

ஓர் நொடி ரசித்து பார்த்தவன், அவளின் அழகில், கண்ணில் தெரிந்த காதல் கலந்த எதிர்பார்ப்பில் தன்னையே கட்டுப்படுத்த முடியாதவனாய், “வேங்கையாய் பாய்ந்து அவளை இறுக்கி அணைத்தவன்.. தோன்றும் இடமெல்லாம் அழுத்தமாக தன் இதழை பதித்தவாறே, எப்போதும் தன்னை பாடய்படுத்தும் அவளின் வெற்றிடையில் கை விட்டு இடை முழுவதும் ரசனையாக வருடியவன்”,

“தன் வருடலில் உடல் எல்லாம் சிலிர்த்து உணர்ச்சியில் துடிக்கும் இதழை கடித்து கொண்டிருந்தவளின் சிறுத்த இடையை தன் ஒரு கையால் வளைத்து.., மேலும் கற்று கூட புகமுடியாத அளவு தன்னோடு இறுக்கி அணைத்தவன், மறுகையால் அவளின் பின்னந்தலையில் கை விட்டு அவளின் முடியை பிடித்து இறுக்கியவாறே அவளின் இதழில் தன் இதழை முழுவதுமாக புதைத்தவன்”,

அவள் உணர்ச்சியில் திமி.. திமிர தன் இத்தனை மாத பிரிவை முத்தத்திலே கரைக்க நினைத்தவன் மேலும்.. மேலும் விடாமல் முத்தமிட்டாவாறே இடை வளைத்த கை.. அவளின் பெண்மையை மேலும்.. கீழும்.. அலைந்து தடவி மேலும் அவளை உணர்ச்சி குவியலில் தள்ளவும்..

அவனின் வேகத்தை, முரட்டு தனத்தை ஓர் அளவுக்கு மேல் தாங்க முடியாத ஹர்ஷினி சரியவும் தான் அவளை விட்டவன், தன் முரட்டு தனத்தால் அவளின் கலைந்த தோற்றத்தில் தெரிந்த பெண்மையின் அழகில் மேலும் கிறக்கம் கொண்டவன்,

“கொல்றடி.. முடியல..” என்றபடி மறுபடியும் அவளை வேகமாக நெருங்கவும், ”அய்யோ.. இன்னிக்கு நான் ஒழிஞ்சேன்” என்று அவனின் முரட்டு தனத்தில் மனதுள் பதறிய ஹர்ஷினியை.. காப்பாத்துவது போல் கீழே பொன்னம்மாவின் அழைக்கும் சத்தம் கேட்கவும்,

“ச்ச்சு..” என்று கடுப்பாக முகம் சுளிக்கவும், அவனின் கடுப்பில் ஹர்ஷினி சிரித்துவிடவும், “என் கஷ்டத்தை பாத்தா உனக்கு சிரிப்பு வருதா.. உன்னை..” என்று அவளின் இதழில் வேகமாக அவசரகால முத்தத்தை கொடுத்தவன்,

சரி வா.. இப்போ கீழே போலாம்.. இன்னிக்கு புல்லா நீ இங்கதானே, அப்புறம் உன்னை பாத்துக்கிறேன் என்று செல்லமாக மிரட்டியபடி அவளை பார்த்தவன்,

அவளின் கலைந்த தோற்றத்தை கண்டு, சாரீ சரிபண்ணிட்டு வா,, நான் கீழே போறேன்.. என்றபடியே மறுபடியும் அவளை இறுக்கி கட்டிப்பிடித்து விடும்போது, “இடையில் மறைத்திருந்த சாரீ நழுவி முழுவதும் தெரிந்த அவளின் வெற்றிடையில் அழுத்தமாக கிள்ளிவிட்டு செல்லவும்”,

“ஸ்ஸ் சரியான முரடு..” என்றவாறே சரிசெய்தவள், கண்ணாடியை பார்க்கவும், மெலிதாக வீங்கியிருந்த உதட்டை கண்டு, எப்படியும் இதை ஒன்னும் செய்ய முடியாது.. “அய்யோ.. கீழே வேற பொன்னம்மா இருப்பாங்களே..” இவரை.. என்று வெட்கத்துடன் கடிந்து கொண்டவாறே,

முகத்தை மட்டும் அங்கிருந்த பாத்ரூமில் கழுவிக்கொண்டவள், கீழிறங்கி வரவும், எவ்வளவு மறைத்தும் தெரிந்த அவளின் சோர்ந்த வெட்கத்துடன் கூடிய அழகில், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான் ஜெய்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top