அருமையான பதிவு மகி.சின்ன வயசுல பணத்துக்காக பிச்சை எடுத்தவன்,ரௌடியா இருந்தாலும் உழைச்சு சம்பாதிச்ச பணம்...கூட்டாளிங்க கேட்டப்ப எல்லாம் அள்ளிக்கொடுத்தவன்
இப்ப பணம் கேட்கறப்போ சாக்கு சொன்னா விட்டுறுவானா.
இவ ஒருத்தி லூசை போல நானும்,தேனுவும் வந்ததால தானே பிரச்சனை வீட்ட விட்டு போயிடவானு
கேட்கறா.வீணா வாய விட்டு வாங்கி கட்டிக்கிட்டா.பிரச்சனை இவ வந்ததால இல்லை தீனா திருந்தியதாலன்னு சுமதி எப்பதான் புரிஞ்சுக்குவாளோ.
சுமதியை கார்மென்ட்ஸில் சூபர்வைசரா வேலை செய்ய கூப்பிட்டு இருக்காங்களாவேலைக்கு
போக வேணாம்னு சொன்னவன் தேனுவ ட்ரஸ்ட் நடத்துற பள்ளியிலேயே படிக்க வைக்கலாம் டாக்டரா,வக்கீலா ஆக்கலாம்னு சொல்லவும் ஒத்துக்கிட்டான்.
தீனா,சுமதி வாழ்க்கை அமைதியா எந்த பிரச்சனையும் இல்லாம நல்லாதானே போச்சு. தேனுவ யார் கடத்தியிருப்பா தீனாவின் கூட்டாளிகள் வேலையா.கமலம் பேத்தியை தூரமா இருந்து பார்த்துட்டு இருப்பாரே தவிர தூக்கிட்டு போயிருக்க மாட்டார்.
இப்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி,படிக்கும் மகள் கவனம் சிதறுவது போல தேனுவை பற்றி சொல்லவோ,தூக்கிட்டு போகவோ மாட்டார்.வேறு யாரா இருக்கும்.சுமதியின் மயக்கத்திற்க்கு காரணம் தேனு காணாமல் போன அதிர்ச்சியா.ஜூனியர் வரவா.