எங்க வீட்டின் அருகில் உள்ள பால் கடைக்காரக்கும் அவங்க வீட்டில் எல்லோருக்கும் கொரோனா வந்துவிட்டது. ஆனால், அவங்க கடையை மூடவும் இல்லை. அவங்களும் வீட்டிற்குள் இல்லாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தனர். பலர் சொல்லியும் கேட்கலை.
நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று எங்கள் வீட்டின் கீழ் உள்ளவர்களிடம் பால்க்காரர் மனைவி அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பாங்க. அதனால், அவங்களுக்கு கால் பண்ணி அவங்களுக்கு கொரோனா இருக்கு வந்தா உள்ள விட வேண்டாம் முடிந்த பிறகு வரச் சொல் என்று சொன்னேன். ஐந்து நாட்கள் ஆன நிலையில் நேற்று கீழ் வீட்டில் வந்து பேசிட்டு இருந்தாங்க. நான் கீழே போகாம கால் பண்ணி கோபத்தில் திட்டினேன். உடனே வெளிய போய்ட்டாங்க. போகும் போது நாங்க ஒன்றும் மனசாட்சி இல்லாம நடக்கமாட்டோம்னு சொல்லிட்டு போறாங்க.
மனசாட்சி உள்ளவங்களா இருந்தா என்ன செஞ்சிருக்கனும் பதினைந்து நாள் கடையும் திறக்காம் இவங்களும் வீட்டுக்குள்ள இருந்திருக்கனும். இவங்களால் இரண்டு மளிகை கடைக்காரங்களுக்கும் வந்துவிட்டது. அவங்க உடனே கடையை மூடிட்டு எல்லோரும் உள்ளயே இருக்காங்க. இதுவரை அவங்க யாரும் வெளியில் வரவே இல்லை. இதில் யார்? மனசாட்சி உள்ளவர்கள்.
இது போல் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. பதினைந்து நாட்கள் வீட்டில் இருப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறார்கள். இவர்கள் செய்யும் தவறால் எத்தனை பேரின் உயிர் பலியாகிறது. நம் குடுபங்களில் பலரை இழந்துவிட்டோம். கடைசி நிமிடம் கூட யார் முகமும் பார்க்க முடியவில்லை. நம் எழுத்தாளர் பிரியா பிரகாஷ் முகம் பார்த்ததில்லை அவரிடம் பேசியதில்லை. ஆனால், அவரின் எழுத்துக்களால் அவரின் இழப்பு நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த மாதிரி வலியை இவர்கள் உணரவில்லையா? எதற்கு இந்த மெத்தனமான எண்ணம்? இதில் இவர்கள் சாதிக்கப் போவது என்ன? பல உயிர்களை எடுப்பதுதான்.