ஹாய் கியூட்டிபாய்ஸ்
28வது அத்தியாயத்திலிருந்து....
அழைத்தது பிரபல மனநல மருத்துவர் அர்ச்சனா முத்துராஜ். ஒருகாலத்தில் விஷ்வதீரனின் பின்னால் காதல் என்று அலைந்தவளும் கூட. இந்த பழம் புளிக்கும்னு ஒதுங்கினாலோ, அல்லது விட்டு பிடிக்கலாம் என்று விட்டுட்டு சென்றாலோ திடீரென காணாமல் போய் இருந்தவள் பிரபல மனநல மருத்துவராய் அவதாரம் எடுத்து விஷ்வதீரனின் முன்னால் வந்து நிற்க அவன் எந்தநாளும் போல் சாதாரணமாக பழக்கலானான்.
"என்ன விஷ்வா? என் நம்பரை பாத்ததும் கால எடுக்க தோணாதோ?" கொஞ்சம் கடுப்பாக ஒலித்தது அவள் குரல்.
"சொல்லுங்க மேடம் எனி ஒபிசியல் மேட்டர்?" அவள் போல் உரிமையாக பேசாது, மரியாதை கொடுத்து ஒதுக்கி வைக்க
"ஓஹ் சார் ரொம்ப பெரிய போலீஸ் இல்ல எந்த நேரமும் பிசியா தான் இருப்பீங்க. ஆனா பாருங்க உங்க மனைவி இப்போ என் கிட்ட தான் இருக்காங்க"
"இவ என்ன ஆரோஹிய கடத்தி வச்சிருக்காளோ?" ஒருகணம் திகைத்தான் விஷ்வதீரன். "ஏய் என்ன உளறுற"
"மரியாதை சார் மரியாதை. நான் ஆஸ்பிடல்ல தான் இருக்கேன், சீக்கிரம் வாங்க பாக்கலாம்" என்று அலைபேசியை அனைத்திருக்க
"ட்ரைவர்" என்று கத்தியவாறே வண்டியில் ஏறி இருந்தான் விஷ்வதீரன்.
மரத்தின் அடியில் அமர்ந்து சலீம்பாயோடு டீ சாப்பிட்டு கொண்டிருந்தவர் அவனின் குரலில் அதை வைத்து விட்டு வண்டியின் பக்கம் ஓடிவந்து ஏறி இயக்கியவாறே கண்ணாடியினூடாக அவன் எங்கே போகவேண்டும் என்று சொல்வானோ என்ற பார்வை பார்க்க
"டாக்டர் அர்ச்சனாவோட ஹாஸ்பிடல்" என்றவன் ஆரோஹியிக்கு அழைத்தான். அவளுடைய அலைபேசி அனைத்து வைத்திருப்பதாக சொல்ல பதட்டத்தோடு பயமும் கலவையாக நெஞ்சில் ஏறி அமர்ந்துக் கொள்ள என்ன செய்வதென்று யோசிக்கலானான்.
அவனது அலைபேசி குறுந்செய்தி வந்ததாக சொல்ல அதை திறந்தவனுக்கு ஆரோஹி அந்த மருத்துவமனையில் மருத்துவருக்காக காத்திருக்கும் பகுதியில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படம் இருக்க அதை ஜூம் செய்து பார்க்க அது அர்ச்சனாவின் அறையின் முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெளிவாக தெரிந்தது.
"அப்போ ஆரா தான் அவள சந்திக்க போய் இருக்கிறாளா? ஏன்? எதுக்கு?" என்ற கேள்விகள் மண்டையை குடைய கண்மூடி இருக்கையில் தலை சாய்த்துக்கொண்டான்.
28வது அத்தியாயத்திலிருந்து....
அழைத்தது பிரபல மனநல மருத்துவர் அர்ச்சனா முத்துராஜ். ஒருகாலத்தில் விஷ்வதீரனின் பின்னால் காதல் என்று அலைந்தவளும் கூட. இந்த பழம் புளிக்கும்னு ஒதுங்கினாலோ, அல்லது விட்டு பிடிக்கலாம் என்று விட்டுட்டு சென்றாலோ திடீரென காணாமல் போய் இருந்தவள் பிரபல மனநல மருத்துவராய் அவதாரம் எடுத்து விஷ்வதீரனின் முன்னால் வந்து நிற்க அவன் எந்தநாளும் போல் சாதாரணமாக பழக்கலானான்.
"என்ன விஷ்வா? என் நம்பரை பாத்ததும் கால எடுக்க தோணாதோ?" கொஞ்சம் கடுப்பாக ஒலித்தது அவள் குரல்.
"சொல்லுங்க மேடம் எனி ஒபிசியல் மேட்டர்?" அவள் போல் உரிமையாக பேசாது, மரியாதை கொடுத்து ஒதுக்கி வைக்க
"ஓஹ் சார் ரொம்ப பெரிய போலீஸ் இல்ல எந்த நேரமும் பிசியா தான் இருப்பீங்க. ஆனா பாருங்க உங்க மனைவி இப்போ என் கிட்ட தான் இருக்காங்க"
"இவ என்ன ஆரோஹிய கடத்தி வச்சிருக்காளோ?" ஒருகணம் திகைத்தான் விஷ்வதீரன். "ஏய் என்ன உளறுற"
"மரியாதை சார் மரியாதை. நான் ஆஸ்பிடல்ல தான் இருக்கேன், சீக்கிரம் வாங்க பாக்கலாம்" என்று அலைபேசியை அனைத்திருக்க
"ட்ரைவர்" என்று கத்தியவாறே வண்டியில் ஏறி இருந்தான் விஷ்வதீரன்.
மரத்தின் அடியில் அமர்ந்து சலீம்பாயோடு டீ சாப்பிட்டு கொண்டிருந்தவர் அவனின் குரலில் அதை வைத்து விட்டு வண்டியின் பக்கம் ஓடிவந்து ஏறி இயக்கியவாறே கண்ணாடியினூடாக அவன் எங்கே போகவேண்டும் என்று சொல்வானோ என்ற பார்வை பார்க்க
"டாக்டர் அர்ச்சனாவோட ஹாஸ்பிடல்" என்றவன் ஆரோஹியிக்கு அழைத்தான். அவளுடைய அலைபேசி அனைத்து வைத்திருப்பதாக சொல்ல பதட்டத்தோடு பயமும் கலவையாக நெஞ்சில் ஏறி அமர்ந்துக் கொள்ள என்ன செய்வதென்று யோசிக்கலானான்.
அவனது அலைபேசி குறுந்செய்தி வந்ததாக சொல்ல அதை திறந்தவனுக்கு ஆரோஹி அந்த மருத்துவமனையில் மருத்துவருக்காக காத்திருக்கும் பகுதியில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படம் இருக்க அதை ஜூம் செய்து பார்க்க அது அர்ச்சனாவின் அறையின் முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெளிவாக தெரிந்தது.
"அப்போ ஆரா தான் அவள சந்திக்க போய் இருக்கிறாளா? ஏன்? எதுக்கு?" என்ற கேள்விகள் மண்டையை குடைய கண்மூடி இருக்கையில் தலை சாய்த்துக்கொண்டான்.
Last edited: