"உற்ற துணை
ஒன்று
எனக்கு உலகிலே
உண்டெனில்
என் உடன்பிறந்தவனே
நீ மட்டும் தானே"
"அன்பாய் சிலநேரம்
என் ஆசை
நிறைவேற்றினாய்
உன்னுடன் நான் இடும்
சண்டைகூட
சந்தோஷம் தானே தருகிறது
உன் சமாதானங்களினால்"
"இன்பத்திலும்
இமையோரம் ஈரம்
கசிகிறது
கணவன் கைபிடித்து
உன் கரம்விலகி செல்லும்
கவலை நினைத்து"
"பெண்ணாய் பிறந்ததால்
பிரிவேனோ இப்பிறவியில்
உன்னை"
"இன்னும் ஒரு பிறவி
உன் தமக்கையாய் அல்ல
உன் அன்னையாய் வரும்
வரம் கேட்கிறேன் அந்த
ஆண்டவனிடத்தில்
அன்பு கோரிக்கையாய்"
ஒன்று
எனக்கு உலகிலே
உண்டெனில்
என் உடன்பிறந்தவனே
நீ மட்டும் தானே"
"அன்பாய் சிலநேரம்
என் ஆசை
நிறைவேற்றினாய்
உன்னுடன் நான் இடும்
சண்டைகூட
சந்தோஷம் தானே தருகிறது
உன் சமாதானங்களினால்"
"இன்பத்திலும்
இமையோரம் ஈரம்
கசிகிறது
கணவன் கைபிடித்து
உன் கரம்விலகி செல்லும்
கவலை நினைத்து"
"பெண்ணாய் பிறந்ததால்
பிரிவேனோ இப்பிறவியில்
உன்னை"
"இன்னும் ஒரு பிறவி
உன் தமக்கையாய் அல்ல
உன் அன்னையாய் வரும்
வரம் கேட்கிறேன் அந்த
ஆண்டவனிடத்தில்
அன்பு கோரிக்கையாய்"