Bhuvana
Well-Known Member
இருமல் குறைய :
1. கிராம்பை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.
2. உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி இருமலின் போது இரவில் படுக்க போகும் முன் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
3. பாலில் மஞ்சள் தூளும், மிளகு தூளும் சேர்த்து பருகி வந்தால் இருமல் குறைந்து தொண்டைக்கு இதமாக இருக்கும்.
4. வெங்காயத்தை சிறியதாக வெட்டி இடித்து அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து 1 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து ஒரு நாளைக்கு 2 வேளைகள் குடித்து வந்தால் இருமல் குறையும்.
5. ஒரு சிறிய துண்டு இஞ்சியை அரைத்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி வினிகர் மற்றும் தேன் சேர்த்து 3 தேக்கரண்டி நீர் விட்டு நன்றாக கலந்து இருமலின் போது 1 தேக்கரண்டி குடித்து வந்தால் இருமல் குறையும்.
6. அதிமதுரம், சீரகம் மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். குழந்தைகளுக்கு அதனுடன் சுத்தமான தேன் கலந்து கொடுத்து வந்தால் இருமல் குறையும்.
7. திராட்சை பழத்தை பிழிந்து ஒரு டம்ளர் சாறு எடுத்து 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் குறையும்.
8. மிளகுடன், பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர இரும*ல் குறையும்.
9. வாழைப் பூவை ஆய்ந்து இடித்து சாறு எடுத்து சிறிதளவு தேனும்,சிறிதளவு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குறையும்.
10.துளசி இலை, கருந்துளசி இலை, கற்பூரவல்லி இலை, மற்றும் வெற்றிலைகளை பிழிந்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
11.மிளகுப்பொடியை எடுத்து அதனுடன் சிறிது நெய், சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
12.அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான கபநோய்கள் குறையும்.
13.வெற்றிலைகளை எடுத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து அருந்தி வந்தால் இருமல் குறையும். சளியினால் ஏற்படும் இருமல் குறையும்.
14.முளைக்கீரை, ஒரு துண்டு அதிமதுரம், 3 சிட்டிகை மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
15.இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து காலை, மாலை குடிக்க இருமல் குறையும்.
1. கிராம்பை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.
2. உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி இருமலின் போது இரவில் படுக்க போகும் முன் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
3. பாலில் மஞ்சள் தூளும், மிளகு தூளும் சேர்த்து பருகி வந்தால் இருமல் குறைந்து தொண்டைக்கு இதமாக இருக்கும்.
4. வெங்காயத்தை சிறியதாக வெட்டி இடித்து அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து 1 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து ஒரு நாளைக்கு 2 வேளைகள் குடித்து வந்தால் இருமல் குறையும்.
5. ஒரு சிறிய துண்டு இஞ்சியை அரைத்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி வினிகர் மற்றும் தேன் சேர்த்து 3 தேக்கரண்டி நீர் விட்டு நன்றாக கலந்து இருமலின் போது 1 தேக்கரண்டி குடித்து வந்தால் இருமல் குறையும்.
6. அதிமதுரம், சீரகம் மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். குழந்தைகளுக்கு அதனுடன் சுத்தமான தேன் கலந்து கொடுத்து வந்தால் இருமல் குறையும்.
7. திராட்சை பழத்தை பிழிந்து ஒரு டம்ளர் சாறு எடுத்து 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் குறையும்.
8. மிளகுடன், பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர இரும*ல் குறையும்.
9. வாழைப் பூவை ஆய்ந்து இடித்து சாறு எடுத்து சிறிதளவு தேனும்,சிறிதளவு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குறையும்.
10.துளசி இலை, கருந்துளசி இலை, கற்பூரவல்லி இலை, மற்றும் வெற்றிலைகளை பிழிந்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
11.மிளகுப்பொடியை எடுத்து அதனுடன் சிறிது நெய், சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
12.அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான கபநோய்கள் குறையும்.
13.வெற்றிலைகளை எடுத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து அருந்தி வந்தால் இருமல் குறையும். சளியினால் ஏற்படும் இருமல் குறையும்.
14.முளைக்கீரை, ஒரு துண்டு அதிமதுரம், 3 சிட்டிகை மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
15.இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து காலை, மாலை குடிக்க இருமல் குறையும்.