சாந்தி கவிதா
Well-Known Member
ஆகாயத்தின் அகதி
ஆகாயத்தின் அகதியென வந்த அவன்,
காடு மலை ஆறென கடலிலே தஞ்சமாய்;
கார்மேகக் குழலியாம் தோழியென,
அவள் துணைக் கொண்டு சங்கமித்தானோ;
அரிதிலும் அரிதான இவனின் காதல்,
நல் அரிதாரம் பூசச் சென்றதோ;
வீழ்வதும் வாழவென நற்செய்தி சொல்ல,
நிதம் அகதியாய் மாண்டு மீண்டானோ;
வாழும் நமக்கு வீழும் அவனே மூச்சென,
ஜீவிக்கிறான் மாரி அவன் மண்ணிலே;
பெறுநர் யாம் உயர உபயம் அகதி நீ அன்றோ,
தலை தாழ்த்துகிறேன் நன்றியால் , வரவேண்டும் என்றும் அகதியாய்!!
-சாந்தி கவிதா
Last edited: