அவளே என் தோழனின் வசந்தம் -2-ஆ

Advertisement

Mithun

New Member
வசந்தம்-2-ஆ

அம்மு மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார் அப்போது ராம்-மீரா இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்

அதாவது மீரா தன் சைகையால் ராமிடம் கோபமாக எதையோ கூற அதற்கு ராமும் கோபத்துடன் சத்தமாக எதோ சொல்கிறான் அதை கவனித்த அம்மு வேகமாக கீழிறங்கி அவர்களிடம் வந்து எதற்காக சண்டை போடறீங்க என்றுக் கேட்டார்

அதற்கு அவ்விருவரும் பதில் கூறாமல் தங்கள் முகத்தை திருப்பி வேறு வேறு திசையில் பார்வையை பதித்து கையை கட்டிக் கொண்டு நின்றனர். இவர்களின் சிறு பிள்ளை தனத்தை அம்முவால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை ஆனாலும் சுதாரித்து அவர்களை சமாதான படுத்தி சண்டைக்கான காரணத்தை கேட்க முயன்றார் அவரின் கேள்வி கெஞ்சகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவ்விருவரும் அப்போதும் தங்களின் நிலையில் இருந்து மாறாமல் முறைத்து கொண்டிருந்தனர்

ஆனால் இவ்வளவு நேரம் படபடப்புடன் கையை பிசைந்து கொண்டிருந்த பிரியா அம்முவிடம் வந்து அம்மு அது..வந்து அது..வந்து என திக்கி திணறி இழுத்தாள் அவள் திக்குவவதை கண்டு அவள் பயந்திருப்பதை புரிந்து கொண்ட அம்மு அவளிடம் வந்து அவளை அனைத்து சோபாவில் அமரவைத்து ஆசுவாச படுத்தி என்னடா பிரியா என்னாச்சு ஏன் இதுங்க இரண்டும் அடிச்சுக்குதுங்க என்று கேட்டார்.

அதற்கு பிரியா கூறியதை கேட்டு அம்மு சிரித்து விட்டார் .(அம்மு சிரிப்பதற்கான காரணம் தெரிய வேண்டுமா சரி அப்போ பிரியா என்ன சொன்னா பார்ப்போமா)

அது அம்மு அது ராமண்ணா நேத்து காலையில லேட்டா அதாவது ஏழறைக்கு தான் எழுந்தாங்க அதனால ஆஃபிஸ்க்கு சீக்கரமா போகனும் சொல்லி மீரா கிட்ட அவங்களோட சட்டைய அயர்ன் பண்ணி தரச் சொல்லி கேட்டாங்க ஆனா மீரா நீ லேட்டா எழுந்தது உன் தப்பு அதனால நான் அயர்ன் பண்ணி மாட்டேன் என்று சொல்லிட்டாங்க

இதனால் ராமண்ணா ஆஃபிஸ்ல திட்டு வாங்க வேண்டியதா போச்சு அந்த கோபத்தில அண்ணா மீராவோட டொனி (Tony) ( மீராவின் செல்ல டெடி) ஒளிச்சு வச்சதோட மீரா ஸ்கைப்.( Skype)( மீராவிற்கு பிடித்த. ஸ்கை பூளூ கலர்ல அவ ஆசையா வாங்கின ஸ்கூட்டி) பெட்ரோல் டேங்கல தண்ணியும் சர்க்கரையும் கலந்து வச்சுட்டாங்க .இதை கேட்டு அம்மு சிரிக்காமல் என்ன செய்வார் .

பிரியா இதை சொல்லி முடிப்பதற்கும் ரிஷி அலுவலகம் செல்ல கிளம்பி மாடியிலிருந்து இறங்கி வரவும் சரியாக இருந்தது பிரியா ரிஷியை கண்டவுடன் அம்முவின் ஒளிந்து கொண்டாள்

இதை ரிஷி பார்த்தாலும் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஏனெனில் அவனுக்கு பிரியாவின் பயந்த சுபாவம் பற்றி நன்றாக தெரியும் (இங்கு பிரியாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் அவள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட பயந்து அலறி விடுவாள்

பொதுவாக சிலர் பல்லி கரப்பான்பூச்சி பயப்பிடுவர் ஆனால் நம் பிரியாவோ கட்டேரூம்பை கண்டால் அலறி அடித்து தூர ஒடி விடுவாள் இருட்டை கண்டால் பயம் யாராவது கொஞ்சம் குரல் உயர்த்தி பேசினால் போதும் இவள் உடம்பு நடுங்கவும் வாய் திக்கவும் ஆரம்பித்து விடும்.

ஆண்கள் இருக்கும் பக்கம் தலை வைத்து படுக்க கூட மாட்டாள் இப்படி இருப்பவள் ஹரிஷை எவ்வாறு திருமணம் செய்தாள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும்

அதற்கு முழு காரணம் வானதியும் அனுவும் தான் அதன் பிறகும் ஹரிஷிடம் பழக பிரியாவிற்கு ஒரு வருடம் பிடித்தது இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால் பொறுமையின் சிகரமான ஹரிஷ் ராமின் திள்ளுமுள்ளான செயல்களுக்கு கூட கோபபடாத ஹரிஷை அந்த ஒரு வருடத்தில் அவனின் பெருமையான பொறுமையை இழக்க வைத்ததோடு அல்லாமல் அவனை மூன்று முறை கோபபட வைத்த பெருமை பிரியாவையே சாரும். )

பிரியா தன் பின்னே ஒளிவதை கண்ட அம்மு அவளை பார்த்தார் பின் பிரியா பார்வை சென்ற திசையில் அவரும் பார்வையை பதித்தார் அங்கு ரிஷி அலுவலகம் தயாராக இருப்பதை கண்டு அங்கிருந்த நால்வரையும் உணவு உண்டு விட்டு செல்லும் மாறு கூறிவிட்டு பிரியாவை கை பற்றி தன் கையோடு சாப்பட்டறைக்கு அழைத்துச் சென்றார் .

அவரின் பின் மற்ற மூவரும் இணைந்து நடந்து கொண்டே ஹரிஷை பற்றி மீராவிடம் விசாரித்தான் ரிஷி மீராவும் ஹரிஷிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறினாள் ( ஒ இவனை பத்தி சொல்ல மறந்துட்டேன் ஹரிஷ் ஏழு எட்டு மாசமா கோமால இருக்கான் வர்மா ஹாஸ்பிட்டல தான் அவனுக்கு சிகிச்சை போய்கிட்டு இருக்கு. )

பின் மீராவிடம் எதுவும் தேவை என்றால் தன்னை அழைக்க கூறினான் மீரா அதற்கு சரி என்றவுடன் ரிஷி ராமிடம் அலுவலக சம்மந்தமாக பேசிக் கொண்டே உணவறைக்கு சென்றான்

உணவு உண்ண அமர்ந்த பின் ரிஷி ராமிடம் எதோ கேட்க அதற்கு ராமிடம் இருந்து பதில் வராததால் ரிஷி ராமை நிமிர்ந்து பார்த்தான் பார்த்தவனுக்கு பீ.பி ஹய் ஸ்பிடில் எகிறியது என்றால் மீரா வாலும் பிரியாவாலும் சிரிப்பை கட்டு படுத்தவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்

ஒரு கட்டத்திற்கு மேல் மீராவால் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்து விட மீரா சிரிக்கும் சத்தம் கேட்டு மும்முரமாக உணவு உண்பதில் இருந்து தன் கவனத்தை அவளை நோக்கி செலுத்தினான் அதாவது சாப்பாட்டு தட்டை விட்டு தலையை நிமிர்த்தினான் அவன் தலை நிமிர்ந்தவுடன் அதுவரை சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த பிரியாவும் சிரிக்க ஆரம்பித்தாள்







அவர்கள். சிரிப்பிற்கான காரணத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.







வசந்தம் பூக்கும்.....................
Oralavuku confuse panalam full a
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top