திருநெல்வேலி சீமை
எனக்கு மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான ஊர் அது... சின்ன வயசுல லீவ் விட்டதும் பொட்டியை கட்டிட்டு மொதோ ஆளா கிளம்பி ஊருக்கு போய்டுவோம்...
திருநெல்வேலின்னா அல்வா எவ்வளவு பேமஸோ அதைவிட பேமஸ் நெல்லையப்பரும் காந்திமதி அம்மாளும்...
நிறைய சிறப்புகள் உண்டு இந்த கோவிலுக்கு... மூன்று பிரகாரங்கள் கொண்டது இக்கோவில்... ஏழிசை தூண்கள் இக்கோவிலின் ஒரு சிறப்பு, ஒரு நாணயத்தை எடுத்து அந்த தூண்களில் லேசாய் தட்டினால் நாமும் கேட்போம் சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களை...
முன் காலத்தில் மூங்கில் காடுகளாய் இருந்த இடத்தில் தான் தலம் அமைந்திருக்கிறது தற்போது... அதன் ஒரு பகுதி கோவிலில் இன்றளவும் நம்மால் பார்க்க முடியும். தல விருட்சமாய் அது கோவிலின் உள்ளே உள்ளது.
கோவில் தோன்றிய வரலாறு...
----------------------------------------
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
அப்படி வெட்டுப்பட்ட அந்த லிங்கமும் கோவில்ல இன்னமும் இருக்கு... கோவில்குள்ள ஒரு பிள்ளையார் சன்னதி ஒண்ணு இருக்கு, அதுக்குள்ள போயிட்டு வர்றது முடியாத காரியம், வழி ரொம்பவும் குறுகலானது. பிள்ளை வரம் வேண்டிக்கிட்டு அந்த வழியா உள்ள போய் வெளிய வந்தா குழந்தை வரம் கிட்டும் அப்படிங்கறது ஒரு ஐதீகம்...
இன்னும் சின்ன சின்ன சுவராசியங்கள் கூட கோவில்ல இருக்கு, பெரிதாய் கோலம் போட்டு தரையில் வட்டமாய் கொஞ்சம் மேலேழும்பி இருக்கும்... அதுல நம்மோட உள்ளங்கை இரண்டும் கொஞ்சம் தள்ளி தள்ளி வைச்சுட்டு மனசுல எதையாச்சும் நினைச்சு வேண்டிக்கிட்டு கண்ணை மூடிக்கணும், கொஞ்ச நேரம் கழிச்சு தான் கண்ணை திறந்து பார்க்கணும்... அப்போ நாம நினைச்சது நடக்கும் அப்படின்னா நம்மோட இரண்டு கையோட கட்டை விரல் இரண்டும் ஒண்ணா சேர்ந்திருக்கும்... நான் அப்படி கை வைச்சு அதெல்லாம் செஞ்சிருக்கேன், சின்ன வயசுல தான்...
நெல்லையப்பர் கோவில்ல இருந்து திருச்செந்தூர் கோவில்க்கு ரகசிய வழி இருக்கறதாவும் அது இப்போ மூடப்பட்டதாவும் கேள்விபட்டிருக்கேன்... நானறிந்த வரை எனக்கு தெரிந்த தகவல் தான்...
அப்புறம் இருட்டுக்கடை அல்வாக்கு வருவோம், மாலை ஆறு மணிக்கு மேல தான் அந்த கடை திறக்கும், கோவில் வாசல்ல உள்ள அந்த கடையில சுடசுட செய்யற அந்த அல்வாவை வாழையிலைல கட்டி தருவாங்க சாப்பிட, அடஅடஅட என்னா ருசி என்னா ருசி... அதுக்கு ஈடுயிணையே இல்லை போங்க...
எங்களுக்கு எல்லாம் அங்க சிறந்த பொழுதுபோக்கு இடம் ஒண்ணு இருக்குன்னா அது சயின்ஸ் சென்டர் தாங்க... சாயங்காலம் கொஞ்சம் கொறிக்க தேவையானது எல்லாம் எடுத்திட்டு அங்க போய் தான் எங்க பொழுது போகும்... ஆன்னு வாயை பிளந்துட்டு அதெல்லாம் பார்த்து ரசித்தது ஒரு காலம்...
எங்க ஆச்சி வீடு இருந்தது சிந்துபூந்துறை, அழகான பூக்கள் நிறைந்த வனமா அது ஒரு காலத்துல இருந்ததால அந்த பெயர் வந்ததா கேள்வி...
தாமிரபரணி ஆறு, குறுக்குத்துறை முருகன் கோவில்ன்னு இன்னும் பல சிறப்புகள் உண்டு...
குற்றாலம், பாபநாசம், மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார், அகத்தியர் அருவி, காரையார் டேம், மணிமுத்தாறு இப்படி நிறைய இடங்கள் சொல்லிட்டே போகலாம்...
திருநெல்வேலியை சுற்றி நிறைய சிவன் கோவில்களே, குற்றாலநாதர், வட காசிக்கு இணையான தென்காசி விஸ்வநாதர், சங்கரன்கோவில் சங்கரன், கோமதியம்மாள், பாபநாசநாதர், உலகம்மை, நெல்லையப்பர், காந்திமதியம்மாள்...
அழகிய வைணவ கோவிலும் இங்கு உண்டு... அது திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில், இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார்...
முத்துக்கு பெயர் போன இடமான தூத்துக்குடி கூட எங்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தது தான்... தூத்துக்குடி கடலை சுற்றி நிறைய குட்டி குட்டி தீவுகள் உண்டு, இயற்கை துறைமுகம் மிகப்பிரசித்தம் இங்கு... இங்க மக்ரூன், பொரிச்ச பரோட்டான்னு ரொம்ப பேமஸ் அயிட்டம் எல்லாம் இருக்குங்க...
இன்னும் நெறைய இருக்குங்க... நம்ம மக்கள் எல்லாம் நான் விட்டதை தொடர்வாங்கன்னு நான் இதோட நிருத்திக்கறேங்க...
எனக்கு மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான ஊர் அது... சின்ன வயசுல லீவ் விட்டதும் பொட்டியை கட்டிட்டு மொதோ ஆளா கிளம்பி ஊருக்கு போய்டுவோம்...
திருநெல்வேலின்னா அல்வா எவ்வளவு பேமஸோ அதைவிட பேமஸ் நெல்லையப்பரும் காந்திமதி அம்மாளும்...
நிறைய சிறப்புகள் உண்டு இந்த கோவிலுக்கு... மூன்று பிரகாரங்கள் கொண்டது இக்கோவில்... ஏழிசை தூண்கள் இக்கோவிலின் ஒரு சிறப்பு, ஒரு நாணயத்தை எடுத்து அந்த தூண்களில் லேசாய் தட்டினால் நாமும் கேட்போம் சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களை...
முன் காலத்தில் மூங்கில் காடுகளாய் இருந்த இடத்தில் தான் தலம் அமைந்திருக்கிறது தற்போது... அதன் ஒரு பகுதி கோவிலில் இன்றளவும் நம்மால் பார்க்க முடியும். தல விருட்சமாய் அது கோவிலின் உள்ளே உள்ளது.
கோவில் தோன்றிய வரலாறு...
----------------------------------------
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
அப்படி வெட்டுப்பட்ட அந்த லிங்கமும் கோவில்ல இன்னமும் இருக்கு... கோவில்குள்ள ஒரு பிள்ளையார் சன்னதி ஒண்ணு இருக்கு, அதுக்குள்ள போயிட்டு வர்றது முடியாத காரியம், வழி ரொம்பவும் குறுகலானது. பிள்ளை வரம் வேண்டிக்கிட்டு அந்த வழியா உள்ள போய் வெளிய வந்தா குழந்தை வரம் கிட்டும் அப்படிங்கறது ஒரு ஐதீகம்...
இன்னும் சின்ன சின்ன சுவராசியங்கள் கூட கோவில்ல இருக்கு, பெரிதாய் கோலம் போட்டு தரையில் வட்டமாய் கொஞ்சம் மேலேழும்பி இருக்கும்... அதுல நம்மோட உள்ளங்கை இரண்டும் கொஞ்சம் தள்ளி தள்ளி வைச்சுட்டு மனசுல எதையாச்சும் நினைச்சு வேண்டிக்கிட்டு கண்ணை மூடிக்கணும், கொஞ்ச நேரம் கழிச்சு தான் கண்ணை திறந்து பார்க்கணும்... அப்போ நாம நினைச்சது நடக்கும் அப்படின்னா நம்மோட இரண்டு கையோட கட்டை விரல் இரண்டும் ஒண்ணா சேர்ந்திருக்கும்... நான் அப்படி கை வைச்சு அதெல்லாம் செஞ்சிருக்கேன், சின்ன வயசுல தான்...
நெல்லையப்பர் கோவில்ல இருந்து திருச்செந்தூர் கோவில்க்கு ரகசிய வழி இருக்கறதாவும் அது இப்போ மூடப்பட்டதாவும் கேள்விபட்டிருக்கேன்... நானறிந்த வரை எனக்கு தெரிந்த தகவல் தான்...
அப்புறம் இருட்டுக்கடை அல்வாக்கு வருவோம், மாலை ஆறு மணிக்கு மேல தான் அந்த கடை திறக்கும், கோவில் வாசல்ல உள்ள அந்த கடையில சுடசுட செய்யற அந்த அல்வாவை வாழையிலைல கட்டி தருவாங்க சாப்பிட, அடஅடஅட என்னா ருசி என்னா ருசி... அதுக்கு ஈடுயிணையே இல்லை போங்க...
எங்களுக்கு எல்லாம் அங்க சிறந்த பொழுதுபோக்கு இடம் ஒண்ணு இருக்குன்னா அது சயின்ஸ் சென்டர் தாங்க... சாயங்காலம் கொஞ்சம் கொறிக்க தேவையானது எல்லாம் எடுத்திட்டு அங்க போய் தான் எங்க பொழுது போகும்... ஆன்னு வாயை பிளந்துட்டு அதெல்லாம் பார்த்து ரசித்தது ஒரு காலம்...
எங்க ஆச்சி வீடு இருந்தது சிந்துபூந்துறை, அழகான பூக்கள் நிறைந்த வனமா அது ஒரு காலத்துல இருந்ததால அந்த பெயர் வந்ததா கேள்வி...
தாமிரபரணி ஆறு, குறுக்குத்துறை முருகன் கோவில்ன்னு இன்னும் பல சிறப்புகள் உண்டு...
குற்றாலம், பாபநாசம், மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார், அகத்தியர் அருவி, காரையார் டேம், மணிமுத்தாறு இப்படி நிறைய இடங்கள் சொல்லிட்டே போகலாம்...
திருநெல்வேலியை சுற்றி நிறைய சிவன் கோவில்களே, குற்றாலநாதர், வட காசிக்கு இணையான தென்காசி விஸ்வநாதர், சங்கரன்கோவில் சங்கரன், கோமதியம்மாள், பாபநாசநாதர், உலகம்மை, நெல்லையப்பர், காந்திமதியம்மாள்...
அழகிய வைணவ கோவிலும் இங்கு உண்டு... அது திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில், இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார்...
முத்துக்கு பெயர் போன இடமான தூத்துக்குடி கூட எங்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தது தான்... தூத்துக்குடி கடலை சுற்றி நிறைய குட்டி குட்டி தீவுகள் உண்டு, இயற்கை துறைமுகம் மிகப்பிரசித்தம் இங்கு... இங்க மக்ரூன், பொரிச்ச பரோட்டான்னு ரொம்ப பேமஸ் அயிட்டம் எல்லாம் இருக்குங்க...
இன்னும் நெறைய இருக்குங்க... நம்ம மக்கள் எல்லாம் நான் விட்டதை தொடர்வாங்கன்னு நான் இதோட நிருத்திக்கறேங்க...